search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பணக்காரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி, ஆனால் விவசாயிகளுக்கு.. ராகுல் காந்தி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பணக்காரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி, ஆனால் விவசாயிகளுக்கு.. ராகுல் காந்தி

    • மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் ரூ.70,000 கோடி கடன்களை தள்ளுபடி செய்தோம்
    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் நடைபெற்ற ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் சரத் பவார், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது பேசிய ராகுல்காந்தி, "மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் ரூ.70,000 கோடி கடன்களை தள்ளுபடி செய்தோம். ஆனால் விவசாயிகளின் கடனை பாஜக ஒருபோதும் தள்ளுபடி செய்யவில்லை. பாஜக அரசு ஒரு சில பணக்காரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பாஜக அரசால் பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியுமானால், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்களின் கடன்களை ஏன் தள்ளுபடி செய்ய முடியவில்லை.

    விவசாயிகள் தற்போது டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் விவசாயிகளின் குறைகளை தீர்க்க பாஜக அரசுக்கு நேரமில்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க பாஜக அரசு தவறி விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம்.

    அதானி 18 சதவீத ஜி.எஸ்.டி செலுத்துகிறார். அதே சமயம் விவசாயிகள் கூட ஜி.எஸ்.டி செலுத்துகின்றனர். ஜி.எஸ்.டி மட்டுமில்லாமல், விவசாயிகள் பல்வேறு வகையான வரிகளால் சிரமப்படுகின்றனர். இது விவசாயிகளின் வருமானத்தை கணிசமாக குறைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் ஏதேனும் ஒரு வரி மட்டும் செலுத்துவதை உறுதிசெய்வோம். மேலும், ஜிஎஸ்டி வரி வரம்பிலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க முயற்சிப்போம்" என்று அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×