search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers Union"

    • சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    சேலம்:

    தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வேல்முருகன் வரவேற்றார். மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார்.

    மாநில பொதுச்செயலாளர் பழனிமுருகன், மாநிலச் செயலாளர் வேலுநாயக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் ஆட்களை, விவசாயகளின் தோட்டத்திற்கு வேளாண் பணிக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • தேங்காய் விலை, அதலபாதாளத்துக்கு சென்று விட்டதால் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
    • அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்

    அவிநாசி : 

    விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் வகையில் எம்.எஸ்.சாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க அவிநாசி ஒன்றிய தலைவர் வேலுசாமி கூறியதாவது:- தேங்காய் விலை, அதலபாதாளத்துக்கு சென்று விட்டதால் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

    எனவே விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் வகையில் எம்.எஸ்.சாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். பிற மாநிலங்களில் உள்ளது போன்று கள்ளுக்கான தடையை நீக்கி, கள் இறக்கி விற்க அனுமதி வழங்க வேண்டும்.

    பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சிவசுப்ரமணியம் அறிக்கையை அமல்படுத்தினாலே, கள்ளுக்கான தடை நீங்கும்.

    பாமாயில் இறக்குமதியை முற்றிலும் நிறுத்தி ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்க வேண்டும். அன்னூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசே தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும்.
    • 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை, விவசாய பணிக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும்.

    அவிநாசி:

    கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம், சேவூர் அருகேயுள்ள மங்கரசவளையபாளையம் பகுதியில் நடந்தது.மாநில தலைவர் சண்முகம், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், அவிநாசி தலைவர் வேலுச்சாமி, ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி, ராஜகோபால் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    அரசே தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய்க்கு 150 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பால் கொள்முதல் விலையாக, மாட்டுப்பால் லிட்டருக்கு, 60 ரூபாய், எருமைப்பால், லிட்டருக்கு 80 ரூபாய் உயர்த்த வேண்டும்.100 நாள் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை, விவசாய பணிக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும். தென்னை, பனை விவசாயிகளின் நலன் கருதி கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • நீலகிரி எம்.பி., ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது இந்து சமுதாய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஜனநாயக முறையில் கண்டனம் தெரிவிக்க இந்திய நாட்டில் உரிமை உள்ளது.

    பல்லடம் :

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்து மதம் குறித்து நீலகிரி எம்.பி., ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது இந்து சமுதாய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஜனநாயக முறையில் கண்டனம் தெரிவிக்க இந்திய நாட்டில் உரிமை உள்ளது. ஆனால் இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இந்த சம்பவங்கள் நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். .இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகிலஇந்திய விவசாயதொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் அம்மையப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி வேலை நாட்களை உயர்த்தி 150 நாட்களாக அறிவிக்க வேண்டும்.

    தினக்கூலி ரூ.381 ஆக உயர்த்த வேண்டும். தாலிக்கு தங்கம் வழங்கும் திருமணஉதவி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    ×