search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்- விவசாயிகள் சங்கம் கண்டனம்
    X

    கோப்புபடம்.

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்- விவசாயிகள் சங்கம் கண்டனம்

    • நீலகிரி எம்.பி., ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது இந்து சமுதாய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஜனநாயக முறையில் கண்டனம் தெரிவிக்க இந்திய நாட்டில் உரிமை உள்ளது.

    பல்லடம் :

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்து மதம் குறித்து நீலகிரி எம்.பி., ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது இந்து சமுதாய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஜனநாயக முறையில் கண்டனம் தெரிவிக்க இந்திய நாட்டில் உரிமை உள்ளது. ஆனால் இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இந்த சம்பவங்கள் நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். .இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×