search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Member"

    • மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வெளியிடுவதற்கான பதிவு அலுவலர் ஆவார்.
    • காலை 10.30 மணிக்குதிருப்பூர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட உள்ளது .

    திருப்பூர் :

    தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் கடிதத்தின்படி,மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான சாதாரணத் தேர்தல்களைநடத்திடுவதற்கு அறிவுரைகள் வரப்பெற்றுள்ளது. இதில் முதல் கட்ட பணியாக மேற்படித்தேர்தலுக்கான ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புற பகுதிக்கான வாக்காளர் பட்டியலை 1999ம்ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (மாவட்டத் திட்டமிடும் குழு உறுப்பினர்கள்தேர்தல்) விதி 10ல் குறிப்பிட்டுள்ளவாறு தயாரித்து வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்படி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (மாவட்ட திட்டமிடும் குழுஉறுப்பினர்கள் தேர்தல்) விதிகள் 1999-ன் விதி 6ன்படி மாவட்ட தேர்தல் அலுவலர் -மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கானவாக்காளர் பட்டியல் தயாரித்தல், வெளியிடுவதற்கான பதிவு அலுவலர் ஆவார். மேற்படிதேர்தலுக்கான வாக்காளர் பட்டியலினை இணைப்பு -அ-வில் உள்ளவாறு படிவம் -1தயாரித்து, இணைப்பு-ஆ-வில் உள்ள அறிவிப்பில் (படிவம்-2) வெளியிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே திருப்பூர் மாவட்டத்தின் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை 2.5.2023 அன்று காலை 10.30 மணிக்குதிருப்பூர் மாவட்ட ஆட்சியரக அறை எண்: 238 –ல் மாவட்ட பதிவு அலுவலர் மற்றும்மாவட்ட கலெக்டரால் வீனித்தால் வெளியிடப்பட உள்ளது .

    • தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கருங்குளத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் குழந்தைவேலு, வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்,ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம் வரவேற்றார். கமுதி நகரச் செயலாளர் பாலமுருகன், மற்றும் கிளைச் செயலாளர்கள், அவைத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் முத்து, துணைச் செயலாளர் தங்கலட்சுமி, பாரதிதாசன், காசிலிங்கம், தொ.மு.ச. அவைத் தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அபிராமத்தில் நடந்த தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு நகரச் செயலாளர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், தொகுதி பொறுப்பாளர் எரிக்ஜூடு முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட முஷ்டகுறிச்சியில் ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் தலைமையிலும், தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெருநாழியில் ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

    • சிவகங்கையில் தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.
    • இதனை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான துரைஆனந்த் ஏற்பாட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    மருத்துவர் யாழினி, மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், விஜயகுமார், துபாய்காந்தி, ராஜபாண்டி, சரவணன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பெற்றுக்கொண்டனர்.

    • கூட்டுறவுத் துறையின் இணை பதிவாளர் எஸ்.சீனிவாசன் வரவேற்று பேசினார்,
    • கூட்டுறவு துறையினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடனுக்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறையின் இணை பதிவாளர் எஸ்.சீனிவாசன் வரவேற்று பேசினார், தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் காங்கேயம், வெள்ளகோவில் பகுதிகளை சேர்ந்த 103 மகளிர் சுய குழுக்களை சேர்ந்த ஆயிரத்து 31 நபர்களுக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்திற்கான கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மொத்தம் ரூ. 5 லட்சத்து 42 ஆயிரத்து 541 மதிப்பிலான 3 நபர்களுக்கு பேட்டரி வீல் சேர், 9 நபர்களுக்கு செல்போன், 15 நபர்களுக்கு தையல் எந்திரம் என மொத்தம் 27 நபர்களுக்கு வழங்கினார்.

    முன்னதாக வெள்ளகோவில் ஒன்றியம், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் சடையப்பா நகர் மற்றும் கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசிமுத்துக்குமார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ராசி கே. ஆர்.முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,வருவாய்த்துறையினர், கூட்டுறவு துறையினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
    • மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு.

    சீர்காழி:

    சீர்காழியில் திமுக மேற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர்கள் பஞ்சு.குமார், செல்ல. சேது. ர விக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து.மகேந்திரன், சாமிநாதன், செயற்குழு உறுப்பினர்கள் இராம.இளங்கோவன், ஜி.என்.ரவி, மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், நகர செயலாளர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர். கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம். கல்யாணம், சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார்.

    தொடர்ந்து மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டபேரவை உறுப்பினருமான நிவேதா.முருகன் பங்கேற்று, புதிதாக பொறுப்பேற்ற பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை பெற்றிருக்கவேண்டும், கட்சியில் புதிதாக அதிகளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    20 ஒன்றியங்களுக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக பேராசிரியர் அன்பழகன் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் தங்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.இதில் மாவட்ட நிர்வாகிகள் முருகன், செல்வமுத்துக்குமார், விஜயேஸ்வரன், முத்து குபேரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    நிறைவில் திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி நன்றிக் கூறினார்.

    • திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
    • 30-ம் தேதி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பேரவை நடத்த வேண்டும்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அருகே ஆலங்குடியில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க இடைக்கமிட்டி கூட்டம் ஒன்றிய தலைவர் மருதையன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ரவி பேசினார்.

    மாவட்ட துணை செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் விளக்க உரையாற்றினர். முடிவில் மருதையன் கூட்டத்தை நிறைவு செய்தார்.

    கூட்டத்தில், வருகிற 26-ம் தேதி வெண்மணி தியாகிகள் நினைவு தினம் குறித்து திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், வருகிற 30-ம் தேதி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பேரவை நடத்த வேண்டும்.

    மேலும் ஜனவரி 6-ம் தேதி நடைபெற இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜி.எம். முருகையன் நினைவு தினத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகள், குழந்தை திருமணம் உள்ளிட்டவைகளை தடுப்பது எப்படி?

    மதுக்கூர்:

    மதுக்கூர் சிவக்கொல்லையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு பற்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அமுதா துரை.செந்தில் தலைமை வகித்தார்.

    மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர்/ வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ராஜூ, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செல்வேந்திரன் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகள், கொத்தடிமை தொழிலாளர், குழந்தை திருமணம் உள்ளிட்டவைகளை தடுப்பது எப்படி? என்று அலுவலர்கள் விளக்கமளித்தனர்.

    மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் தீமையை தடுப்பது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வும் நடைபெற்றது. முடிவில் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னப்பா நன்றி கூறினார்.

    இதில் அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதி, சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாலா அமைப்பு செயலாளர் ஜெயபாரதி வரவேற்றார்.
    • மனிதனின் சிந்தனையை வளர்க்கும் நூல் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட வேண்டும்.

    திருப்பூர்:

    மெட்ராஸ் லைப்ரரி அசோசியேஷன் (மாலா), நடவு பதிப்பகம், முத்தமிழ் சங்கம் சார்பில் திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள மக்கள் மாமன்ற நூலகத்தில் பாராட்டு விழா நடந்தது.திருவள்ளுவர், தமிழன்னை சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மாலா அமைப்பு செயலாளர் ஜெயபாரதி வரவேற்றார். நூலகர் வாசகர் வட்ட தலைவர் புருஷோத்தமன் முன்னிலைவகித்தார். 'மாலா' தலைவர் அனுராதா பேசினார்.எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசுகையில், கல்லூரி மாணவ, மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில், இணையவழி நூல் அறிமுக நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.மனிதனின் சிந்தனையை வளர்க்கும் நூல் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட வேண்டும். நூலகம் என்பது தாய்மடி போன்றது. ஒவ்வொருவரும் தங்கள் பகுதிகளில் உள்ள நூலகங்களில் கட்டாயம் உறுப்பினராக இணைய வேண்டும் என்றார்.

    • கணேஷ் இந்து முன்னேற்றக் கழகத்தின் வர்த்தக அணி செயலாளராக உள்ளார்.
    • திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    திருப்பூர் :

    திருப்பூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 48). இவர் இந்து முன்னேற்றக் கழகத்தின் வர்த்தக அணி செயலாளராக உள்ளார். இவர் சொந்தமான இரும்பு குடோனுக்கு முன் நேற்று முன்தினம் இரவு தனது சரக்கு ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது ஆட்டோ கண்ணாடியை மர்ம ஆசாமிகள் உடைத்து சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து கணேஷ் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டெக்பா சங்க நிர்வாகிகள் அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    • வர்த்தக வாரிய உறுப்பினராக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர்:

    மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வர்த்தக வாரிய உறுப்பினராக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து, பின்னலாடை தொழில் அமைப்பு பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம், மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார், பொருளாளர் ஞானகுரு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன், பொருளாளர் மாதேஸ்வரன், டெக்பா சங்க தலைவர் ஸ்ரீகாந்த் உட்பட நிர்வாகிகள் ராஜாசண்முகத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள், இ.பி.சி.ஜி., திட்டத்தில், வரியின்றி மெஷின்களை இறக்குமதி செய்வதில் நீடிக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணவேண்டும். மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகங்களின் (டி.ஜி.எப்.டி.,) கவனத்துக்கு கொண்டுசென்று இக்கோரிக்கையை நிறைவேற்றித்தரவேண்டும்என டெக்பா சங்க நிர்வாகிகள் அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    • உள்ளாட்சி ேதர்தலில் போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மீதமுள்ள 6 பதவிக்கு 29 பேர் போட்டியிட்டுள்ளனர். இதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ள கவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மீதம் உள்ள 6 பதவிகளுக்கு நாளை 9ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தி.மு.க வேட்பாளராக முருகன் போட்டியிடுகிறார்.

    மற்ற அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள். வார்டு உறுப்பினர் பதவிகளில் நடுப்பட்டியில் 3 பேர், தேவியாக்குறிச்சியில் 2 பேர், கிழக்கு ராஜபாளையத்தில் 3 பேர், கூணான்டியூரில் 3 பேர், பொட்டனேரியில் 2 பேர் என மொத்தம் 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர்.

    இதற்கான பிரசாரம் நேற்று ஓய்ந்த நிலையில் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகி–றார்கள்.

    சேலம் ஒன்றியம் 8வது வார்டில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஊராட்சி மன்ற வார்டுகளுக்கும் வார்டுக்கு ஒரு வாக்குச்சவாடி அமைக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இன்று மாலைக்க ள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியல் ஈடுபடுகிறார்கள்.

    மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு டாஸ்மாக் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம்:

    திருப்போரூர் அருகே உள்ள தண்டலம் கிராமத்தில் வசித்து வந்தவர் நெல்லையப்பன் (வயது 37). நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    இவர் திருப்போரூர், கேளம்பாக்கம், கண்டிகை, நாவலூர், சிங்கபெருமாள் கோவில், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் தண்டலத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தனிடம் மேல் வாடகைக்கு டாஸ்மாக் பார் எடுத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு நெல்லையப்பன் வந்தார். திடீரென அவர் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

    அவரை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நெல்லையப்பன் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நெல்லையப்பன் இறப்பதற்கு முன்பு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மாஜிஸ்திரேட்டு காயத்ரிதேவியிடம் வாக்கு மூலம் அளித்தார்.

    அதில் பார் நடத்துவதற்கு 2 இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரி ஆகியோருக்கு மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1½லட்சம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது என்று கூறி இருந்தார்.

    மேலும் நெல்லையப்பன் தனது பேஸ்புக்கிலும் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

    அந்த வீடியோவில், “பார் மேல் வாடகை எடுத்து நடத்தியதில் இதுவரை 7 வருடத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ரூ.19 கோடிக்கு மேல் மனசாட்சி இல்லாமல் பணம் பறித்து விட்டார். போலீசாருக்கு மாதாமாதம் மாமூல் கொடுத்தாக வேண்டும். ஒரு நாள் தவறினாலும் பாரை இழுத்து மூடுவார்கள்” என்று உருக்கமாக பேசி இருந்தார்.

    பணம் கொடுப்பது தொடர்பாக நெல்லையப்பனுக்கும், அ.தி.மு.க. பிரமுகர்- போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அவர் புகார் கொடுப்பதற்காக டி.எஸ்.பி.அலுவலகத்துக்கு வந்ததாக தெரிகிறது. இதன் பின்னரே அங்கு நெல்லையப்பன் தீக்குளித்து உள்ளார்.

    இதற்கிடையே மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    இதேபோல் போலீஸ் அதிகாரிகள் மீதான லஞ்ச குற்றச்சாட்டு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி விசாரணை நடத்தி வருகிறார். அவர்கள் மீது விரைவில் துறை ரீதியிலான நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
    ×