

திருப்பூர் :
திருப்பூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 48). இவர் இந்து முன்னேற்றக் கழகத்தின் வர்த்தக அணி செயலாளராக உள்ளார். இவர் சொந்தமான இரும்பு குடோனுக்கு முன் நேற்று முன்தினம் இரவு தனது சரக்கு ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது ஆட்டோ கண்ணாடியை மர்ம ஆசாமிகள் உடைத்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கணேஷ் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.