search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாமல்லபுரம் பேரூராட்சி பகுதிக்கு புதிய ரேஷன் கடை- பல ஆண்டு கனவு நினைவானது
    X

    மாமல்லபுரம் பேரூராட்சி பகுதிக்கு புதிய ரேஷன் கடை- பல ஆண்டு கனவு நினைவானது

    • புதிய கடை வேண்டும் என பல ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
    • அப்பகுதியில் உள்ள 175 குடும்ப அட்டைதாரர்களுக்கு அங்கு புதிதாக பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சியின் ஓ.எம்.ஆர் எல்கையான 12வது வார்டு, பவளக்கா சத்திரம் பகுதியில் ரேஷன் கடை இல்லாததால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து 3கி.மீ தூரத்தில் உள்ள பூஞ்சேரிக்கு வந்து பொருட்கள் வாங்கும் நிலை இருந்து வந்தது. புதிய கடை வேண்டும் என பல ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 175 குடும்ப அட்டைதாரர்களுக்கு அங்கு புதிதாக பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கவுன்சிலர்கள் மோகன்குமார், சரிதா கோவிந்தராஜ், சீனிவாசன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    Next Story
    ×