என் மலர்
நீங்கள் தேடியது "Ex-Serviceman"
- ராணுவத்தில் தங்களது முழு பணிக்காலத்தையும் முடித்துவிட்டு ஓய்வுபெற்ற வீரர்கள், பணி காலத்தில் மாற்றுத்திறனாளி ஆகியிருந்தாலும் வரி விலக்கு கிடையாது.
- முதலில் அக்னிவீர் திட்டம் நாட்டின் பாதுகாப்பைச் சிதைத்தது, இப்போது மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்தின் மீதான இந்தத் தாக்குதல் ராணுவ வீரர்களின் மன உறுதியைக் குறைக்கும்.
2026-27 பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான வருமான வரி விலக்கை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இதற்கு நாடு முழுவதும் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பட்ஜெட் அறிவிப்பின்படி, உடல் குறைபாடு காரணமாக ராணுவ சேவையிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கு மட்டுமே இனி வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
ராணுவத்தில் தங்களது முழு பணிக்காலத்தையும் முடித்துவிட்டு ஓய்வுபெற்ற வீரர்கள், பணி காலத்தில் மாற்றுத்திறனாளி ஆகியிருந்தாலும், அவர்களுக்கு இனி அந்த ஓய்வூதியத்திற்கு வரி விலக்கு கிடையாது.
பெரும்பாலான மாற்றுத்திறனாளி வீரர்கள் தங்களது பணிக்காலத்தை முடித்த பிறகே ஓய்வு பெறுகிறார்கள். எனவே அரசின் இந்த முடிவால் பலர் பாதிக்கப்படுவர்.
பணியின் போது காயமடைந்து அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி ஆகும் வீரர்களுக்கு, நிர்வாகப் பணிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. அவர்கள் ஓய்வு பெறும்போது வரி விலக்குடன் கூடிய கூடுதல் ஓய்வூதியம் மற்றும் மருத்துவச் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.
தற்போது அந்த வரி விலக்குச் சலுகையை அரசு பறிக்கப்பட்டுள்ளது நாட்டின் பாதுகாப்பிற்காகப் போராடி ஊனமுற்ற வீரர்களின் உரிமைகளைப் பறிப்பதாக இருப்பதாகப் முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.
முன்னாள் மேஜர் ஜெனரல் ஷைல் ஜா இது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில், "முதலில் அக்னிவீர் திட்டம் நாட்டின் பாதுகாப்பைச் சிதைத்தது, இப்போது மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்தின் மீதான இந்தத் தாக்குதல் ராணுவ வீரர்களின் மன உறுதியைக் குறைக்கும்" என்று விமர்சித்துள்ளார்.
- நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக புஷ்பாஞ்சலி நிகழ்வும் நடத்தப்பட்டது.
- 50- க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வீரமரணமடைந்த வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
திருப்பூர் :
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் இந்தியா -பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக புஷ்பாஞ்சலி நிகழ்வும் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியும் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இராணுவ வீரர்கள் வால்ரஸ் டேவிட், அஜ்மல் கான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது முன்னாள் ராணுவ வீரரும் வால்ரஸ் நிறுவனத்தின் இயக்குனருமான வால்ரஸ் டேவிட் பேசியதாவது:- 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி விஜய் திவாஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது, விடுதலைப் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.
மழையிலும் வெயிலிலும், பனியிலும் ராணுவ வீரர்கள் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற அயராது பாடுபட்டு வருகிறார்கள் .அவர்களை அனைவரும் போற்ற வேண்டும். ஒவ்வொரு மாணவ- மாணவிகளும் நாட்டை நேசிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் சுந்தரம், விஜய், விக்னேஷ், ஜெயசந்திரன், ராஜபிரபு ஆகியோர் தலைமையில் 50- க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வீரமரணமடைந்த வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பிறகு ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய நாடு என் நாடு, என் நாட்டை பெரிதும் நேசிப்பேன், ராணுவ வீரர்களுக்கு மரியாதை கொடுக்க தவறமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- தடுக்க முயன்ற தந்தையை பூஷன் தாக்கிய நிலையில் அவர் படுகாயமடைந்தார்
- சகோதர்கள் இருவருக்கும் இடையில் நிலத்தகராறு இருந்து வந்ததே இந்த கொலைகளுக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
அரியானாவில் தனது தாய் உட்பட குடுபத்தினர் 6 பேரை முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் நராய்கர் [Naraingarh] நகர் அருகே உள்ள ரத்தோர் கிராமத்தில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த கொலைகள் அரங்கேறியுள்ளது.
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனது தாய், சகோதரன், சகோதரனின் மனைவி மற்றும் அவர்களின் 7 வயது மகன் , 6 வயது மகள் மற்றும் 6 மாத குழந்தை உட்பட 6 பேரை பூஷன் குமார் என்ற அந்த முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்து அவர்களை வீட்டில் வைத்தே எரிக்க முயற்சி செய்துள்ளார். தடுக்க முயன்ற தந்தையை பூஷன் தாக்கிய நிலையில் அவர் படுகாயமடைந்தார். எனவே தந்தை சத்தம் எழுப்பி அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பூஷனை கைது செய்துள்ளனர் . சகோதர்கள் இருவருக்கும் இடையில் 2.25 ஏக்கர்குடும்ப நிலம் நிலத்தகராறு இருந்து வந்ததே இந்த கொலைகளுக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
- முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை 2022 - 23-ஆம் கல்வி ஆண்டிற்கு வழங்கப்படவுள்ளது.
- பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ.30,000 எனவும், மாணவிகளுக்கு 36,000 எனவும் வழங்கப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை 2022 - 23-ஆம் கல்வி ஆண்டிற்கு வழங்கப்படவுள்ளது.
ஒரு வருடத்திற்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ.30,000 எனவும், மாணவிகளுக்கு 36,000 எனவும் வழங்கப்படுகிறது.
பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை ( 2022 - 23) வேண்டி விண்ணப்பித்திட கடைசி தேதி 30-11-2022 ஆகும்.மேலும் விவரங்கள் அறிந்திட திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0421 - 2971127 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாய்ப்பினை முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் பயன்படுத்திக் கொண்டு 30-11-2022-க்குள் www.ksb.gov.in என்ற KSB இணையதளத்தில் பாரதபிரதமரின் கல்வி உதவிக்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






