search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் ஒவ்வொருவரும் நாட்டை நேசிக்க வேண்டும் - முன்னாள் ராணுவவீரர் வால்ரஸ் டேவிட் பேச்சு
    X

    நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரரும் வால்ரஸ் நிறுவனத்தின் இயக்குனருமான வால்ரஸ் டேவிட் பேசிய காட்சி. 

    மாணவர்கள் ஒவ்வொருவரும் நாட்டை நேசிக்க வேண்டும் - முன்னாள் ராணுவவீரர் வால்ரஸ் டேவிட் பேச்சு

    • நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக புஷ்பாஞ்சலி நிகழ்வும் நடத்தப்பட்டது.
    • 50- க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வீரமரணமடைந்த வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் இந்தியா -பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக புஷ்பாஞ்சலி நிகழ்வும் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியும் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இராணுவ வீரர்கள் வால்ரஸ் டேவிட், அஜ்மல் கான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    அப்போது முன்னாள் ராணுவ வீரரும் வால்ரஸ் நிறுவனத்தின் இயக்குனருமான வால்ரஸ் டேவிட் பேசியதாவது:- 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி விஜய் திவாஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது, விடுதலைப் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.

    மழையிலும் வெயிலிலும், பனியிலும் ராணுவ வீரர்கள் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற அயராது பாடுபட்டு வருகிறார்கள் .அவர்களை அனைவரும் போற்ற வேண்டும். ஒவ்வொரு மாணவ- மாணவிகளும் நாட்டை நேசிக்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் சுந்தரம், விஜய், விக்னேஷ், ஜெயசந்திரன், ராஜபிரபு ஆகியோர் தலைமையில் 50- க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வீரமரணமடைந்த வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    பிறகு ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய நாடு என் நாடு, என் நாட்டை பெரிதும் நேசிப்பேன், ராணுவ வீரர்களுக்கு மரியாதை கொடுக்க தவறமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    Next Story
    ×