என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: மாற்றுத்திறனாளியை மனசாட்சி இன்றி காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய ரெயில்வே போலீஸ்
    X

    VIDEO: மாற்றுத்திறனாளியை மனசாட்சி இன்றி காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய ரெயில்வே போலீஸ்

    • வலியால் அவர் துடித்தபோதும் மான் சிங் தொடர்ந்து அவரை தாங்கியபடி இருந்தார்.
    • கண்ணீருடன் தனது பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நொண்டியபடி சென்றார்.

    பிளாட்பாரத்தில் படுத்திருந்த ஒரு மாற்றுத்திறனாளியிடம் ரெயில்வே போலீஸ்காரர் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட வீடியோ கண்டனத்தை குவித்து வருகிறது.

    மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள நாக்டா ரெயில் நிலையத்தில் நடந்த சம்பவத்தை ஒரு பயணி தனது தொலைபேசியில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

    பிளாட்பாரத்தில் படுத்திருந்த மாற்றுத்திறனாளியை நோக்கி கோபத்துடன் வந்த சீருடையில் இல்லாத ஆர்பிஎஃப் தலைமை கான்ஸ்டபிள் மான் சிங் அவரை உதைத்து அங்கிருந்து விரட்டினார். வலியால் அவர் துடித்தபோதும் மான் சிங் தொடர்ந்து அவரை தாக்கியபடி இருந்தார்.

    மான் சிங்கால் தாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி, கண்ணீருடன் தனது பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நொண்டியபடி சென்றார்.

    இதற்கிடையில் மான் சங், மாற்றுத்திறனாளி நபர் குடிபோதையில் இருந்ததாகவும், நடைமேடையில் மக்களை தொந்தரவு செய்ததாகவும் , அதனாலேயே இவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

    ஆனால் உயர் அதிகாரிகள் இந்த விளக்கத்தில் திருப்தி அடையதாக நிலையில் அவரை இடைநீக்கம் செய்து சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

    Next Story
    ×