search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic items seized"

    • காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் அனைவரும் தூய்மைப்பணியில் ஈடுபட வேண்டும்
    • ெரயில் நிலையத்தை தங்களது வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வோமோ அது போல் வைத்துக்கொள்ள வேண்டும்

    திருப்பூர்:

    காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் அனைவரும் தூய்மைப்பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக ஒரு நாள் ஒரு மணி நேரம் தூய்மைக்காக நம்மை ஈடுப்படுத்திக்கொள்வோம் என்ற திட்டத்தை மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மற்றும் தென்னக ெரயில்வே, திருப்பூர் ரெயில் நிலையம் சார்பில் திருப்பூர் ெரயில் நிலையத்தில் தூய்மைக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும், தூய்மை பணியும் நடைபெற்றது.

    நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ெரயில்வே உதவி வணிக மேலாளர் ஷியாமல் குமார் கோஷ், சேலம் கோட்ட பயணிகளின் ஆலோசகர் குழு உறுப்பினர் சுரேஷ் குமார், துணை மேலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.

    உதவி வணிக மேலாளர் பேசுகையில், ெரயில் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது, ெரயில் நிலையத்தை தங்களது வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வோமோ அது போல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார். மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, விஜய், காமராஜ், செர்லின், தினேஷ்கண்ணன் ஆகியோர் தலைமையில் 60 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • 19 வகையான ‘பிளாஸ்டிக்’ பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • பிளாஸ்டிக் பொருட்களை கண்காணித்து பறிமுதல் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரியின் சுற்றுச்சூ ழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பைகள், கப், டம்ளர், கரண்டி, முலாம் பூசப்பட்ட காகித தட்டு உள்ளிட்ட 19 வகையான 'பிளாஸ்டிக்' பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர, குடிநீர் பாட்டில், குளிர்பான பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    விதிமீறி பயன்படுத்து பவர்கள் அல்லது வெளியிடங்களில் இருந்து பயணிகளால் கொண்டு வரப்படும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்காணித்து பறிமுதல் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தற்போது நீலகிரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள் எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில், சுற்றுலா வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    கடந்த 4 நாட்களாக நகராட்சி பகுதிகளில் சுகாதார அலுவலர்கள், பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் செயல் அலுவலர்கள்,வருவாய் துறையினர் இணைந்து சோதனை மேற்கொ ண்டனர். அதில் 30 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்த னர். ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் 20 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. 

    • பிளாஸ்டிக் பொருள் வைத்திருந்ததற்காக ரூ.79 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • ஒரு கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஊட்டி

    தமிழக அரசு ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.

    அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பினாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில்,ஓட்டல், பேக்கரி, உணவகங்கள், வணிக வளாகங்கள், பார்கெட் ஆகிய பகுதிகளில் தடைசெய்யப்ட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வு மேற்கொண்டதில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 15 கிலோ பறிமுதல் செய்யபட்டு ரூ.55,000 அபராதம் விதித்தனர். குன்னூர் வட்டாட்சியர் தலைமையில், 2 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.4,500அபராதம் விதித்தனர்.

    உதகை நகராட்சி ஆணையாளர் தலைமையில், 1 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.5,000 அபராதம் விதித்தனர். குன்னூர் நகராட்சி ஆனையாளர் தலைமையில், 300 கிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.7,000 அபராதம் விதித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர்களின் ஆய்வில் ஒரு கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ. 7.500 அபராதம் விதித்தனர். ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில், 100 கிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.500 அபராதம் விதித்தளர்,

    நீலகிரி மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 19.400 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, அக்கடைகளுக்கு 25.11.2022 மற்றும் இன்று 26.11.2022 அபராத தொகையாக மொத்தம் ரூ.79,600 விதிக்கப்பட்டது. மேலும், தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதனை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

    ×