search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி சிறப்பு பஸ் இயக்கம் மூலம் திருப்பூர் மண்டலத்திற்கு ரூ.64.50 லட்சம்  வருவாய்
    X

    கோப்புபடம்.

    தீபாவளி சிறப்பு பஸ் இயக்கம் மூலம் திருப்பூர் மண்டலத்திற்கு ரூ.64.50 லட்சம் வருவாய்

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 150 சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.
    • 3 நாட்களில் 3.50 லட்சம் பேர் பயணித்ததாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளிமாவட்டத்தினர் சொந்த ஊர் செல்ல ஏதுவாக திருப்பூரில் இருந்து 150 சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. பயணிகள் வசதிக்காக பண்டிகைக்கு 3நாட்கள் முன்பே பஸ் இயக்கம் துவங்கியது. ஆனால் தீபாவளிக்கு முதல் நாள் தான் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

    3 நாட்களில் 3.50 லட்சம் பேர் பயணித்ததாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சொந்தஊர் சென்றவர் திருப்பூர் திரும்ப ஏதுவாக 25 முதல், 27-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    சிறப்பு பஸ் இயக்கம் மூலம் திருப்பூர் மண்டலம் 7 நாட்களில் ரூ. 64.50 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளதாக கோவை கோட்ட போக்குவரத்து துறை வணிக பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×