என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
- கடந்த ஒன்றரை ஆண்டு முன் திருமணம் செய்து கொண்டனர்.
- மனைவியிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் வெளியே சென்று விட்டார்.
திருப்பூர் :
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(30). இவர் திருப்பூர், சிறுபூலுவபட்டி பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருடன் உறவினர் பெண் சுபா, (27) என்பவர் வேலை செய்தார். இருவரும் பழகி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சில நாட்கள் முன், தமிழ்ச்செல்வன் மனைவியிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் வெளியே சென்று விட்டார். இரண்டு நாட்களாக தேடிப் பார்த்த சுபா கணவனை காணாமல் மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக 15 வேலம்பாளையம் புருஷன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தமிழ்ச்செல்வன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்