என் மலர்
நீங்கள் தேடியது "தேனிலவு"
- இந்தூரைச் சேர்ந்த ராஜா (29) மற்றும் சோனம் (24) இந்த ஆண்டு மே 11 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
- ஹோம்ஸ்டேயில் இருந்து வெளியே வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு காணாமல் போனது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மேகாலயவின் சோஹ்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 790 பக்க குற்றப்பத்திரிகையை SIT சமர்ப்பித்தது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா (29) மற்றும் சோனம் (24) இந்த ஆண்டு மே 11 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
இருப்பினும், சோனம் ஏற்கனவே தங்கள் குடும்பத்தின் தளபாடங்கள் தொழிலில் கணக்காளராக பணிபுரியும் ராஜ் குஷ்வாஹாவை காதலித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
திருமணத்திற்குப் பிறகு தேனிலவுக்காக மேகாலயா சென்றிருந்த இந்த ஜோடி, மே 23 அன்று ஒரு ஹோம்ஸ்டேயில் இருந்து வெளியே வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு காணாமல் போனது.
ஜூன் 2 ஆம் தேதி ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
அதுவரை தலைமறைவாக இருந்த சோனம், ஜூன் 8 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் போலீசில் சரணடைந்தார். அவருக்கு உதவிய நண்பர்களை போலீசார் முன்னதாக கைது செய்தனர்.
ஜூன் 11 ஆம் தேதி, விசாரணையில் சோனம் தனது காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தனது கணவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
- துப்பறியும் நிறுவனங்கள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
- கல்லூரி நட்புகள், ஆன்லைன் நடத்தை, அழைப்பு பதிவுகள், முன்னாள் காதலர்களின் குற்றப்பதிவுகளும் விசாரிக்கப்படுகிறது.
மேகாலயாவில் நடைபெற்ற தேனிலவு கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியுடனான திருமணத்தில் விருப்பம் இல்லாத சோனம் தனது காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி ராஜா ரகுவன்ஷியை கொலை செய்தார். இதில் தொடர்புடைய கூலிப்படையினரும் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இதேபோன்று ஜார்க்கண்ட், ஆந்திராவில் கூலிப்படையை ஏவி கணவனை மனைவி தீர்த்து கட்டிய சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மத்தியபிரதேசத்தில் மணப்பெண்கள் பற்றிய விவரங்களை கண்டறிவதற்காக மணமகன் குடும்பத்தினர்கள் துப்பறியும் நிறுவனங்களை நாடும் நிலை அதிகரித்துள்ளதாக துப்பறியும் நிறுவன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மத்தியபிரதேசத்தை சேர்ந்த துப்பறியும் நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரி ராஜேஷ் பாண்டே கூறியதாவது:-
சோனம்-ரகுவன்ஷி வழக்குக்கு பிறகு பெண்களை விசாரிக்க வைக்கும் கோரிக்கைகள் அதிகரித்து வருகிறது. அவர்களின் குணாதிசயங்கள், அவர்களுக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்களா?, குற்றப்பின்னணி உள்ளதா? என எல்லாவற்றையும் அறிய விரும்புகிறார்கள்.
சமீபத்தில் இதுபோன்ற 18 வழக்குகள் எங்களுக்கு வந்துள்ளன. அதில் பெரும்பாலானவை இதுபோன்ற இலக்கு சரிபார்ப்பை மட்டுமே விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.
துப்பறியும் சேவைகளின் மண்டல தலைவரான சுபாஷ் சவுத்திரி கூறுகையில், தற்போது பெண்ணின் வாழ்க்கை ஆழமான, தனிப்பட்ட அம்சங்களுக்காக திரும்பி உள்ளது. கல்லூரி நட்புகள், ஆன்லைன் நடத்தை, அழைப்பு பதிவுகள், முன்னாள் காதலர்களின் குற்றப்பதிவுகளும் விசாரிக்கப்படுகிறது.
முன்பெல்லாம் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே துப்பறியும் நபர்களை பணியமர்த்துவார்கள். ஆனால் தற்போது ஒவ்வொரு மாதமும் 70 முதல் 80 விசாரணைகளை பார்க்கிறோம். இன்றைய காலத்தில் சில குடும்பங்களுக்கு துப்பறியும் நபர் முக்கியமானவராக திகழ்கிறார் என்றார்.
இதுபோன்ற வழக்குகளில் துப்பறியும் நிறுவனங்கள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் கண்காணிப்பு, டிஜிட்டல் தடயவியல் மற்றும் பின்னணி சோதனைகள் ஆகியவற்றின் தகவல்களை துப்பறியும் நிறுவனங்கள் வழங்குகின்றன.
- ஒரு பெண் என்பதால் அடக்கமான வாழ்க்கை வாழ வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளார்.
- விட்டு வெளியேறவோ, மிகச் சிலரைத் தவிர வேறு யாரிடமும் பேசவோ அனுமதிக்கவில்லை. அவரது வாழ்க்கை மிகவும் கண்டிப்பானதாக இருந்தது.
மேகலயாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதான சோனம் என்ற பெண்ணின் வழக்கு தேசிய அளவில் கவனம் பெற்று வருகிறது.
சோனமின் சகோதரர், தனது தங்கையுடனான உறவுகளை முறித்துக்கொண்டதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டு அவளை தூக்கிலிடவேண்டும் என்றும் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியும் வைரலாகி வருகிறது.
யார் இந்த சோனம்?
24 வயதான சோனம், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள குஷ்வாஹா நகரில் ஒரு கிராமப்புற குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை தேவி சிங் ரகுவன்ஷி, 25 ஆண்டுகளாக ஒட்டுப்பலகை (plywood) தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
MBA பட்டம் பெற்று, குடும்பத்தின் கட்டுப்பாடுகளை மீறி வாழ வேண்டும் என்பதே சோனமின் கனவாக இருந்தது. ஆனால், தந்தை தேவி சிங், சோனம் ஒரு பெண் என்பதால் அடக்கமான வாழ்க்கை வாழ வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளார்.
சோனம், வீட்டை விட்டு வெளியேறவோ, மிகச் சிலரைத் தவிர வேறு யாரிடமும் பேசவோ அனுமதிக்கவில்லை. அவரது வாழ்க்கை மிகவும் கண்டிப்பானதாக இருந்தது.
சோனம் தனது வாழ்க்கையை வேலை மற்றும் வீடு என இரண்டிற்குள் சுருக்கிக் கொண்டார். பெற்றோரின் கட்டுப்பாட்டால், சோனம் தனது குடும்பத்தின் பிளைவுட் தொழிற்சாலையிலேயே வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சோனமின் சகோதரர் கோவிந்தின் முயற்சியால் குடும்பத் தொழில் மேம்பட்டாலும், சோனமின் மீதான கட்டுப்பாடுகள் தளரவில்லை. அவரது MBA படிக்கும் ஆசை நிறைவேறாமலேயே போனது.
இந்தக் காலகட்டத்தில்தான் சோனம் தனது தந்தையின் தொழிற்சாலையில் பில்லிங் பிரிவில் பணிபுரிந்த ராஜ் குஷ்யாவை சந்தித்தார். முதலில் அவர்களின் அறிமுகம் வணிக ரீதியானது என்றாலும், நாளடைவில் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இருப்பினும் கண்டிப்பான சூழலால் தனது உறவை குடும்பத்தினரிடம் இருந்து மறைத்தார்.
இந்தச் சூழலில்தான், சோனமிற்கு அவரது விருப்பத்தை கேட்காமலேயே திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். சமூக திருமண வரன் பார்த்தல் அமைப்பு மூலம் ராஜா ரகுவன்ஷி குடும்பத்தை அவர்கள் தொடர்பு கொண்டனர்.
இரு குடும்பங்களுக்கும் இடையே ஏற்கனவே அறிமுகம் இல்லை. இரு குடும்பங்களின் அந்தஸ்து உள்ளிட்ட பயோடேட்டா ஒற்றுமைய மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டது.
கல்வி நிறுவனங்களுக்கு வாடகை பேருந்துகளை வழங்கும் "ரகுவன்ஷி டிரான்ஸ்போர்ட்" என்ற குடும்ப நிறுவனத்தை ராஜா நடத்தி வந்தார். அவர் மூன்று சகோதரர்களில் இளையவர்.
ராஜாவின் குடும்பத்தினர் தங்கள் மகனுக்கு இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து வைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சோனமின் குடும்பத்தினர் நான்கு மாதங்களுக்குள் திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினர். மே 11 அன்று திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணத்தன்று சோனமின் முகம் மகிழ்ச்சியாக இல்லை என்பதை ராஜாவின் மாமியார் இப்போது நினைவுகூறுகிறார்.
திருமணத்திற்குப் பிறகு, சோனம் சாப்பிடுவதற்காக மட்டுமே மேலறைக்கு வந்ததாகவும், குடும்பத்தில் யாரிடமும் பேசவில்லை என்றும், எப்போதும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும் ராஜாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர். அதில் யாரும் தலையிடவில்லை. சோனம் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என ராஜா குடும்பத்தினர் நினைத்துள்ளனர். அவர்கள் யாரும் சோனமை சந்தேகிக்கவில்லை, தங்கள் மகனுக்கு சோனம் சரியான மனைவி என்று நம்பினர்.
திருமணத்திற்குப் பிறகு பயணம் செய்வது குறித்து குடும்பத்தில் எந்தப் பேச்சும் இல்லை. ஆனால், சோனம் ஒரு பயணம் செல்ல விரும்புவதாகக் கூறினார். முதலில் மறுத்த ராஜா, சோனமின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து சம்மதித்தார். பயணத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளையும் சோனம் தான் முன்பதிவு செய்துள்ளார்.
பயணத்தின்போது விலையுயர்ந்த நகைகளை அணிய வேண்டும் என்றும் சோனம் வலியுறுத்தியுள்ளார். அப்போதும் ராஜாவின் குடும்பத்தினர் எதையும் சந்தேகிக்கவில்லை. ராஜாவின் மரணம் குறித்து இறுதியில் அறிந்ததும், குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
- கணவரை கொலை செய்ய வேண்டும் என்பதில் சோனம் உறுதியாக இருந்துள்ளார்.
- கணவர் ராஜாரகுவன்ஷியை சி.சி.டி.வி. கேமரா இல்லாத மலை உச்சிக்கு சோனம் அழைத்து சென்றுள்ளார்.
மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த சோனம் (வயது25) என்ற புதுப்பெண் தனது கணவர் ராஜாரகுவன்ஷியை (28) மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்து சென்று கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொழில் அதிபரின் மகளான சோனத்துக்கு கடந்த மே 11-ந்தேதி ராஜாரகுவன்ஷியுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பு அவருக்கு தனது தந்தையின் நிறுவனத்தில் வேலை பார்த்த தந்தையுடன் 3 வயது குறைவான ராஜ்குஷ்வாகாவுடன் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால் மனம் இன்றி ராஜாரகுவன்ஷியை திருமணம் செய்த சோனத்துக்கு அவருடன் வாழப்பிடிக்கவில்லை.
இதனால் காதலன் ராஜ்குஷ்வாகாவுடன் சேர்ந்து தனது கணவரை கொல்ல சதித்திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி கணவர் ராஜாரகுவன்ஷியை மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்து சென்ற சோனம் அங்கு காதலனால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையினரான ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் மூலம் ராஜாரகுவன்ஷியை கொலை செய்துள்ளார்.
இதற்காக ராஜாரகுவன்ஷியும், சோனமும் தேனிலவுக்கு புறப்பட்ட போதே ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் திருமண தம்பதியை பின் தொடர்ந்துள்ளனர். ஆனால் ராஜ்குஷ்வாகாவால் அங்கு செல்ல முடியவில்லை. எனவே கொலை திட்டத்தை ரத்து செய்துவிடலாம் என அவர் கூறி உள்ளார்.
ஆனால் கணவரை கொலை செய்ய வேண்டும் என்பதில் சோனம் உறுதியாக இருந்துள்ளார். அவர் கூலிப்படைக்கு ரூ.20 லட்சம் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். தொடர்ந்து முன்பணமாக ரூ.4 லட்சத்தையும் வழங்கி உள்ளார்.
பின்னர் சோனம் வகுத்து கொடுத்த திட்டப்படி மேகாலயா சென்ற கூலிப்படையினரான ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் அங்கு ராஜா ரகுவன்ஷியிடம் தங்களை மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று அறிமுகமாகி உள்ளனர்.
அவர்களுடன் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் உடன் சென்றுள்ளார். ஆனால் அவரை சோனம் நாங்கள் தனிமையில் இருக்க விரும்புகிறோம் என கூறி திருப்பி அனுப்பி உள்ளார்.
பின்னர் கணவர் ராஜாரகுவன்ஷியை சி.சி.டி.வி. கேமரா இல்லாத மலை உச்சிக்கு சோனம் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களை பின் தொடர்ந்து சென்ற கூலிப்படையினர் ராஜாரகுவன்ஷியை கோடாரியால் தாக்கி கொலை செய்துள்ளனர். தனது கணவர் கண்முன்னே கொலை செய்யப்படுவதை சோனம் வேடிக்கை பார்த்துள்ளார். பின்னர் ராஜாரகுவன்ஷி உடலை 200 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசி உள்ளனர். பின்னர் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் சுமார் 25 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார். பிறகு ரெயில், பஸ்கள் மூலம் அவரவர் ஊர்களுக்கு திரும்பி உள்ளனர்.
சோனம் இந்தூர் சென்று காதலன் ராஜ்குஷ்வாகாவை சந்தித்துள்ளார். பின்னர் 3 நாட்கள் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். தொடர்ந்து அங்கேயே இருந்தால் போலீசில் சிக்கி கொள்வோம் என சோனம் கருதி உள்ளார்.
சோனத்தின் காதலன் ராஜ்குஷ்வாகா உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். அவர் சோனத்தை உத்தரபிரதேசம் செல்ல ஏற்பாடு செய்து அங்குள்ள தனது நண்பர்கள் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளார். இதற்கிடையே ராஜாரகுவன்ஷி பற்றி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவல் மூலம் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதை அறிந்த சோனம் வேறு வழியின்றி தானாக முன்வந்து போலீசில் சரண் அடைந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ராஜாரகுவன்ஷியை கொலை செய்தபோது அவரிடம் ரூ.15 ஆயிரம் இருந்துள்ளது. அதையும் சோனம் கூலிப்படையினரிடம் எடுத்து கொடுத்ததும் தெரியவந்தது. கைதான சோனம் உள்ளிட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ராஜா ரகுவன்சியின் சடலம் ஜூன் 2ம் தேதி கண்டெடுக்கப்பட்டது .
- மனைவி சோனம் உத்தரப்பிரதேசத்தில் போலீசிடம் சரணடைந்தார்
மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (29) மற்றும் அவரது மனைவி சோனம் ஆகியோர் மேகலாயாவுக்கு தேனிலவு சென்றுள்ளனர். இந்நிலையில், மே 23ம் தேதி முதல் இருவரையும் காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதனிடையே ராஜா ரகுவன்சியின் சடலம் ஜூன் 2ம் தேதி , வெய்சாவ்டோங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது .
இதனையடுத்து, மனைவி சோனம் உத்தரப்பிரதேசத்தில் போலீசிடம் சரணடைந்தார். மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
- கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா ரகுவன்ஷி என உறவினர்கள் உறுதி செய்தனர்.
இந்தூர்:
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜா ரகுவன்ஷி(வயது 30). இவருக்கும் சோனம் ரகுவன்ஷி(27) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது, கடந்த மாதம் 23-ந் தேதி மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள சோஹ்ரா பகுதியில் தேனிலவு கொண்டாட பயணம் மேற்கொண்டனர். முதலில் ஷில்லாங் சென்ற அவர்கள், அங்கிருந்து இரு சக்கர வாகனம் வாடகைக்கு எடுத்துக் கொண்டு சோஹ்ராவிற்கு சென்றனர். கிழக்கு காசி மலை மாவட்டத்தில், தொடர்மழை பெய்யும் சிரபுஞ்சிக்கு சென்றனர். அங்குள்ள நான்கிரியாட் கிராமத்தில் விடுதியில் தங்கி தேனிலவை கொண்டாடினர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை, அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் வாடகைக்கு எடுத்த இரு சக்கர வாகனம், ஓஸ்ரா மலைப் பகுதியில் உள்ள சோஹ்ரா ரிம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அதனால் அவர்கள் ட்ரெக்கிங் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்பட்டது. தகவலறிந்த மேகாலயா போலீசாரும் உள்ளூர் மக்களும் இணைந்து தீவிர தேடுதல் பணியைத் தொடங்கினர். இந்தூர் காவல் ஆணையர் சந்தோஷ் சிங், குற்றப்பிரிவு துணை ஆணையர் ராஜேஷ் குமார் மேகாலயா விரைந்து விசாரணையை துரிதப்படுத்தினர்.
மத்தியப் பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், மேகாலயா முதல்-மந்திரிகான்ராட் சங்மாவுடன் பேசி, புதுமணத் தம்பதியை கண்டுபிடிக்க உதவி கோரினார். ராஜாவின் சகோதரர் விபின் மற்றும் சோனமின் சகோதரர் கோவிந்த் ஆகியோர் இந்தூரிலிருந்து ஷில்லாங் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஓஸ்ரா மலைப் பகுதி குற்றச் செயல்களுக்கு பெயர் பெற்றது. புதுமணத் தம்பதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் சோஹ்ரா பகுதி அருவிக்கரையில், ராஜா ரகுவன்ஷி இறந்த நிலையில் உடல் பாதி சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரது கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா ரகுவன்ஷி என உறவினர்கள் உறுதி செய்தனர்.
ராஜாவின் உடலில் இருந்து இரண்டு மோதிரங்கள், ஒரு தங்கச் சங்கிலி, வளையல், பர்ஸ், மொபைல் ஆகியவற்றை காணவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே ராஜா ரகுவன்ஷி இறந்த நேரம் மற்றும் பிற தகவல்கள் தெரியவரும். போலீசார் அரிவாள் போன்ற ஆயுதத்தையும் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் ராஜா ரகுவன்ஷி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தொடர்ந்து அவரது மனைவி சோனத்தை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து பெண்ணின் வெள்ளை சட்டை, உடைந்த அலைபேசி மீட்கப்பட்டுள்ளதால், ராஜாவை கொன்ற கும்பல் சோனத்தை கடத்திச் சென்றார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். முன்னதாக தேனிலவின் போது, சோனம் தனது மாமியாருடன் தொலைபேசியில் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
- புதுமணத்தம்பதி தனித்தனியாக குதிரையில் மாதேரான் மலை அழகை சுற்றிப்பார்த்து கொண்டு இருந்தனர்.
- வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மும்பை:
மகாராஷ்டிர தலைநகர் மும்பை முகமது அலி ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது காசிப் இம்தியாஸ் சேக் (வயது23). இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தனது மனைவியுடன் மும்பை அருகே உள்ள மாதேரான் மலை வாசஸ்தலத்துக்கு தேனிலவுக்கு சென்றார்.
சம்பவத்தன்று புதுமணத்தம்பதி தனித்தனியாக குதிரையில் மாதேரான் மலை அழகை சுற்றிப்பார்த்து கொண்டு இருந்தனர்.
முகமது காசிப் இம்தியாஸ் சேக் சென்ற குதிரை திடீரென வேகமாக ஓடத் தொடங்கியது. இதனால் அவர் நிலைதடுமாறி குதிரையில் இருந்து கீழே விழுந்தார். வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
தேனிலவு சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை குதிரையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






