search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேகாலயா"

    • கார்கலில், 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • மேகாலயாவில், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    கார்கில் பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. இது 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதேபோல், மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. மேலும், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டு இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • இரு மாநில எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

    ஷில்லாங்:

    கடந்த 1972-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து மேகாலயா மாநிலம் உதயமானது. அப்போது முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.

    மத்திய அரசின் சமரசத்தால் கடந்த ஆண்டு இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும் இருமாநில எல்லையில் மோதல் சம்பவங்கள் தொடர் கதையாய் உள்ளன.

    இந்த நிலையில் மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்துக்கும் அசாமின் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்துக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள லபங்காப் கிராமத்தில் நேற்று இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது.

    இருதரப்பினரும் வில் மற்றும் அம்புகளை பயன்படுத்தி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். எனினும் இந்த மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் இரு மாநில எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

    • அடுத்த ஆண்டு மேகாலயாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது
    • பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

    புதுடெல்லி:

    மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுயேட்சை எம்எல்ஏ மற்றும் சமீபத்தில் ராஜினாமா செய்த 3 எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.

    ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சியின் பெரிலின் சங்மா, பெனடிக் மரக் மற்றும் சுயேட்சை எம்எல்ஏ சாமுவேல் சங்மா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எச்.எம்.ஷாங்க்லியாங் ஆகியோர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

    அடுத்த ஆண்டு மேகாலயாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 4 முக்கிய தலைவர்களின் வருகை பாஜகவிற்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

    இதுபற்றி பாஜக தேசிய செயலாளர் ரிதுராஜ் சின்ஹா கூறுகையில், "மேகாலயாவில் முக்கியமான நான்கு பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். இதன்மூலம் பாஜக வலுவடையும் என்றும், மேகாலயா மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவோம் என்றும் நம்புகிறேன்" என குறிப்பிட்டார்.

    மேகாலயா மாநிலத்தின் புதிய கவர்னராக மேற்கு வங்காளத்தை சேர்ந்த ததாகதா ராய் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். #TathagataRoy
    ஷில்லாங் :

    மேகாலயா கவர்னராக பதவி வகித்த கங்கா பிரசாத், சிக்கிம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து திரிபுரா மாநில முன்னாள் கவர்னராக இருந்த ததாகதா ராய் மேகாலயா கவர்னராக கடந்த 21-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், மேகாலயா மாநில தலைமை நீதிபதி முகமது யாகூப் மிர் முன்னிலையில் ததாகதா ராய் நேற்று கவர்னராக பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்சியில் அம்மாநில் முதல்வர் கன்ராட் சங்மா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

    மேலும், மாநிலத்தில் உள்ள பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், ராணுவ அதிகாரிகளும் ததாகதா ராய் பதவியேற்பு நிகழ்சியில் பங்கேற்றனர்.

    கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய இவர் மேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக கடந்த 2001-2006 ஆண்டு வரை பதவி வகித்தார். ததாகதா ராய் பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #TathagataRoy
    ×