என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranji Trophy 2024"

    • புஜாரா முதல் தர கிரிக்கெட்டில் 21 ஆயிரம் ரன்னையும் கடந்தார்.
    • முதல் தர கிரிக்கெட்டில் 18-வது இரட்டை சதம் அடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    இதில் 2-வது லீக் ஆட்டம் ஒன்றில் சவுராஷ்டிரா-சத்தீஷ்கார் (டி பிரிவு) அணிகள் மோதிய ஆட்டம் ராஜ்கோட்டில் நடந்தது. சத்தீஷ்கார் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 578 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 75 ரன்னுடனும், ஷெல்டன் ஜாக்சன் 57 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து பேட் செய்த புஜாரா நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷெல்டன் ஜாக்சன் 62 ரன்னிலும், அர்பித் வசவதா 73 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று கலக்கிய புஜாரா இரட்டை சதம் விளாசினார்.

    இது அவருக்கு ரஞ்சி போட்டியில் 9-வது இரட்டை சதமாகவும், முதல் தர கிரிக்கெட்டில் 18-வது இரட்டை சதமாகவும் பதிவானது. இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் (டெஸ்டையும் சேர்த்து) அதிக இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் புஜாரா 4-வது இடத்துக்கு முன்னேறினார். இதில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (37 இரட்டை சதம்), இங்கிலாந்தின் வாலி ஹேமண்ட் (36), ஹென்ட்ரென் (22) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    அத்துடன் புஜாரா முதல் தர கிரிக்கெட்டில் 21 ஆயிரம் ரன்னையும் கடந்தார். கவாஸ்கர், டெண்டுல்கர், டிராவிட் ஆகியோருக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டிய 4-வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெற்றார்.

    36 வயதான புஜாரா 234 ரன்களில் (383 பந்து, 25 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஷசாங்க் சிங் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அப்போது சவுராஷ்டிரா அணி 137.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 478 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் இந்த ஆட்டம் இரு அணி கேப்டன்கள் சம்மதத்துடன் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. முதல் இன்னிங்சே முடியாததால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றன.

    • பிரித்வி ஷா எடை காரணமாக நீக்கப்பட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.
    • பிரித்வி ஷா போன்ற உடலமைப்பை கொண்டுள்ள எத்தனை பேர் 379 ரன்கள் அடித்துள்ளார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

    மும்பை:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    மும்பை அணியில் இடம் பெற்றிருந்த பிரித்வி ஷா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் அதிக எடையுடன் இருப்பதாலும், வலை பயிற்சியின் போது மெத்தனாக இருப்பதாகவும் கூறி அவரை அணியில் இருந்து நீக்கியதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், மும்பை அணியில் பிரித்வி ஷா நீக்கப்பட்ட முடிவை இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரஞ்சி அணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதற்கு கலவையான காரணங்கள் செய்திகளாக காணப்படுகின்றன. ஒருவேளை அது அணுகுமுறை, நன்னடத்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தால் அதை புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் அவருடைய எடை காரணமாக நீக்கப்பட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

    ஏனெனில் அவரின் உடலில் 35 சதவீதம் கொழுப்பு இருப்பதாலேயே நீக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரிந்துரைக்கிறது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூரு டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் ஆட்டத்தை நாம் பார்த்தோம்.

    அவருடைய உடல் எடை மற்றும் வடிவம் பற்றி பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் 150 ரன்கள் அடித்த அவர் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு பிட்னஸ், மெலிதான இடுப்பு மட்டுமே தேவையில்லை என்பதை காண்பித்தார். எனவே ஒரு வீரர் 150+ ரன்கள் அடித்தால் அல்லது ஒரு நாளில் 20 ஓவர் வீசினால் அதையே நாம் பிட்னஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் பிரித்வி ஷா போன்ற உடலமைப்பை கொண்டுள்ள எத்தனை பேர் 379 ரன்கள் அடித்துள்ளார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலில் பேட்டிங் செய்த மேகாலயா அணி 86 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ரஞ்சி டிராபி தொடரில் இன்று தொடங்கிய ஆட்டம் ஒன்றில் மும்பை- மேகாலயா அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய மேகாலயா அணிக்கு தொடக்கம் முதலே திணறியது. அந்த அணி 2 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து பிரிங்சாங் சங்மா- ஆகாஷ் சவுத்ரி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    பிரிங்சாங் 19 ரன்னிலும் ஆகாஷ் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அனிஷ் சரக் 17, ஹிமான் புக்கான் 28 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால் மேகாலயா அணி 86 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்த போட்டியில் ஷர்துல் தாகூர், ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ரஞ்சி டிராபியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்த 5-வது மும்பை வீரராக ஷர்துல் சாதனை படைத்துள்ளார்.

    மும்பைக்காக ரஞ்சி டிராபியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்த வீரர்கள்:-

    ஜஹாங்கீர் கோட் (மும்பை) vs பரோடா - மும்பையில் பிரபோர்ன் ஸ்டேடியம் (1943-44)

    உமேஷ் குல்கர்னி (மும்பை) vs குஜராத் - ஆனந்தில் சாஸ்திரி மைதானம் (1963-64)

    ஏ.எம். இஸ்மாயில் (மும்பை) vs சவுராஷ்டிரா - மும்பையில் பிரபோர்ன் ஸ்டேடியம் (1973-74)

    ராய்ஸ்டன் டயஸ் (மும்பை) vs பீகார் - பாட்னாவில் மொயின்-உல்-ஹக் ஸ்டேடியம் (2023-24)

    ஷர்துல் தாக்கூர் (மும்பை) vs மேகாலயா - மும்பையில் பி.கே.சி மைதானம் (2024-25)

    • கேரள அணி தரப்பில் சச்சின் பேபி 98 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • 37 ரன்களுடன் விதர்பா அணி முன்னிலையில் உள்ளது.

    ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் கேரளா அணிகள் மோதி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேரளா அணி தரப்பில் நிதீஷ் மற்றும் ஈடன் ஆப்பிள் டாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நெடுமான்குழி பாசில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    அதன்பின் முதல் இன்னிங்சைத் தொடர்ந்த கேரளா அணியில் ரோஹன் குன்னுமால் ரன்கள் ஏதுமின்றியும், அக்ஷய் சந்த்ரன் 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஹ்மத் இம்ரானும் 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

    இதனால் அந்த அணி 2-நாள் ஆட்டநேர முடிவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.

    இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆதித்யா சர்வதே 66 ரன்களுடனும், கேப்டன் சச்சின் பேபி 7 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆதித்யா சர்வதே 10 பவுண்டரிகளுடன் 79 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.

    அதன்பின் களமிறங்கிய சல்மான் நிசார் 21 ரன்களையும், முகமது அசாருதீன் 34 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த கேப்டன் சச்சின் பேபி 10 பவுண்டரிகளுடன் 98 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

    அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜலஜ் சக்சேனா 26 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் கேரளா அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 342 ரன்களில் ஆல் அவுட்டானது.

    விதர்பா அணி தரப்பில் தர்ஷன் நல்கண்டே, ஹர்ஷ் தூபே, பார்த் ரேகாடே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து 37 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி நாளை 4-ம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

    ×