search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prithvi Shaw"

    • 18 வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.
    • அறிமுக போட்டியிலே சதம் அடித்த நிலையிலும், ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் பிரித்வி ஷா. 24 வயதான இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது 18 வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அறிமுகமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் சதம் விளாசினார். ஆனால் 2020-க்கும் பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. இரண்டு ஆண்டு கால இடைவெளியில் ஐந்து போட்டிகளில் மட்டுமே இடம் பிடித்தார்.

    உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த அவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இங்கிலாந்து கவுன்ட்டி போட்டியில் விளையாடும்போது காயம் ஏற்பட்டது. ஆறு மாத ஓய்விற்குப் பிறகு தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில்தான் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 185 பந்தில் 159 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். இந்த போட்டியில் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாகவே சதத்தை பூர்த்தி செய்தார். இதற்கு முன்னதாக ஒருமுறையும் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே சதம் அடித்துள்ளார். இதன்மூலம் இரண்டு முறை மதிய உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்துள்ளார்.

    காயத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில் சதம் அடித்ததன் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்தாக கருதப்படுகிறது.

    இதுகுறித்து பிரித்வி ஷா கூறுகையில் "நான் அதிகப்படியாக எதையும் குறித்து யோசித்து கொண்டிருக்கவில்லை. தற்போதைய நிலையில் இருக்க விரும்புகிறேன். எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. காயத்தில் இருந்து மீண்டு வந்து கிரிக்கெட் விளையாடுவதே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள நான், எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். என்னுடைய நோக்கம் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான். என்னுடைய பங்களிப்பு மூலம் இந்த சாதனையை அடைய முயற்சி செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக பிரித்வி ஷா முதல்தர போட்டியில் 383 பந்தில் 379 ரன்கள் அடித்துள்ளார். அப்போதும் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் அடித்தார். இதன்மூலம் முதல்தர போட்டியில் இரண்டு முறை மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    • 81 பந்தில் சதம் அடித்த பிரித்வி ஷா 129 பந்தில் இரட்டை சதம்
    • 28 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அவரது ஸ்கோரில் அடங்கும்

    இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா. தொடக்க வீரரான இவர் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 153 பந்தில் 244 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார்.

    இங்கிலாந்து ஒருநாள் கோப்பைக்கான (One-Day Cup) தொடரில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்காக விளையாடினார். சோமர்செட் அணிக்கெதிராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவரது அதிரடியால் நார்தாம்ப்டன்ஷைர் 8 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் குவித்தது.

    அவரது ஸ்கோரில் 28 பவுண்டரிகள், 11 சிக்சர்கள் அடங்கும். 23 வயதான பிரித்வி ஷா 81 பந்தில் சதம் அடித்தார். 129 பந்தில் இரட்டை சதம் அடித்தார்.

    ஏற்கனவே, விஜய் ஹசாரே தொடரில் புதுச்சேரிக்கு எதிராக ஆட்டமிழக்கால் 227 ரன்கள் அடித்துள்ளார். இது அவரின் 2-வது இரட்டை சதமாகும்.

    • தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக பிரித்வி ஷா மீது நடிகை புகார் அளித்திருந்தார்.
    • பிரித்வி ஷா தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என்று நடிகை ஸ்வப்னா கில் அளித்துள்ள புகார் பொய்யானது என்று போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வெளியே வந்தார்.

    அப்போது, அங்கு வந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும், போஜ்புரி நடிகையுமான ஸ்வப்னா கில் ஒரு செல்பி புகைப்படம் எடுக்க வேண்டுமென பிரித்வி ஷாவிடம் கேட்டுள்ளார். அதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஸ்வப்னா கில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரித்விஷாவின் காரை பின் தொடர்ந்துள்ளனர். பிரித்விஷாவின் காரை இடைமறித்த ஸ்வப்னா கில் மற்றும் அவரது நண்பர் பிரித்விஷாவின் கார் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். பிரித்விஷாவையும் கடுமையாக தாக்கினார். இந்த சம்பவம் தொடர்பாக பிரித்வி ஷா அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்வப்னா கில் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.

    ஜாமினில் சிறையில் இருந்து விடுதலை செய்யபட்ட ஸ்வப்னா கில் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மீது பாலியல் புகார் அளித்தார். கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா குடிபோதையில் இருந்ததாகவும், தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் ஸ்வப்னா கில் போலீசில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரை போலீஸ் ஏற்றுக்கொள்ள மறுத்ததையடுத்து ஸ்வப்னா கில் அந்தேரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.


    இந்த மனு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என்று நடிகை ஸ்வப்னா கில் அளித்துள்ள புகார் பொய்யானது என்று போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டதாவது:-

    சம்பவத்தன்று சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஸ்வப்னா கில் மற்றும் அவரது நண்பர் சோபித் தாக்கூர் கேளிக்கை விடுதியில் மதுகுடித்துவிட்டு நடனமாடியுள்ளனர். சோபித் தாக்கூர் தனது செல்போனில் பிரித்விஷாவை வீடியோ எடுத்துள்ளார். ஆனால், வீடியோ எடுக்க வேண்டாம் என பிரித்விஷா தடுத்துள்ளார்.

    வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் பிரித்விஷாவும் அவரது நண்பரும் ஸ்வப்னா கில்லை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கான எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. கேளிக்கை விடுதியில் இருந்த சாட்சியங்களிடம் நடத்தபப்ட்ட விசாரணையும் ஸ்வப்னா கில்லை யாரும் தவறாக தொடவில்லை என்று கூறியுள்ளனர். தொடர்ந்து வின்சிட்டி பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் சமூகவலைதள பிரபலம் ஸ்வப்னா கில் தனது கையில் பேஸ்பால் மட்டையுடன் பிரித்விஷா காரை துரத்தில் செல்வது பதிவாகியுள்ளது.

    கிரிக்கெட் வீரரின் கார் கண்ணாடியை ஸ்வப்னா கில் உடைத்துள்ளார். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரரிடமும் வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளது.

    அவர் கூறுகையில், அப்பகுதியில் மோதல் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. தகவலறிந்து அங்கு சென்றபோது கார் கண்ணாடி உடைக்கப்படிருப்பதை பாதுகாப்பு படை வீரர் பார்த்துள்ளார். பெண் தனது கையில் பேஸ்பால் மட்டையுடன் இருந்ததையும், போலீசார் வருவதை பார்த்த உடன் அந்த பெண்ணின் நண்பன் அவரிடமிருந்த பேஸ்பால் மட்டையை மறைவான இடத்தில் வீசியதையும் பார்த்துள்ளார்.

    சம்பவம் நடந்த பகுதியில் அந்த பெண் மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை' என மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதன் மூலம் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக பிரித்வி ஷா மீது நடிகை ஸ்வப்னா கில் அளித்த புகார் போலியானது என்று கோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஸ்வப்னா கில்லின் நண்பர் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோவை கோர்ட்டில் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கும்படி கில் தரப்பு வழக்கறிஞர் கோர்ட்டில் கோரிக்கை விடுத்தார்.

    மேலும், கேளிக்கை விடுத்திக்கு வெளியே நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொடுக்கும்படியும் கில் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக உள்ள ஒட்டுமொத்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்ட கோர்ட்டு வழக்கை வரும் 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

    • டெல்லி ஆடுகளம் போல் அல்லாமல், இந்த பிட்ச் சிறப்பாக இருந்தது.
    • பேட்டிங்கில் பிரித்வி ஷா கொடுத்த இம்பேக்ட் பார்ப்பதற்கே சிறப்பாக அமைந்தது.

    ஐபிஎல் தொடரின் மிகமுக்கியமான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடியது. இந்தப் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றிக்கு பவர்பிளே ஓவர்களில் டெல்லி அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா - டேவிட் வார்னர் ஆகியோர் அதிரடியாக செயல்பட்டதே முக்கிய காரணமாக அமைந்தது.

    குறிப்பாக டெல்லி அணியின் பிரித்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்களை விளாசி அசத்தினார். இது நடப்பு ஐபிஎல் சீசனில் பிரித்வி ஷா விளாசியுள்ள முதல் அரைசதமாகும். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிரித்வி ஷாவிற்கு மிகச்சிறந்த சீசனாக அமையும் என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறி இருந்தார். ஆனால் அதற்கு மாறாக பிரித்வி ஷா சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

    ஒரு கட்டத்தில் பிரித்வி ஷாவை டெல்லி அணி இருந்து பிளேயிங் லெவனில் இருந்தே நீக்கியது. ஆனால் மனம்தளராத பிரித்வி ஷா, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசி கம்பேக் கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-

    களத்தில் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினோம் என்றே நினைக்கிறேன். ஆனால் இந்தப் போட்டியில் எங்களது பலம் என்ன என்பதை அறிந்து செயல்பட்டோம்.

    அதேபோல் டெல்லி ஆடுகளம் போல் அல்லாமல், இந்த பிட்ச் சிறப்பாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கில் பிரித்வி ஷா கொடுத்த இம்பேக்ட் பார்ப்பதற்கே சிறப்பாக அமைந்தது. ரைலி ரூஸோவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். டெல்லி பிட்ச்சில் சிறந்த பேட்டிங்கை செய்ய தவறியுள்ளோம். ஆனால் இன்றையப் போட்டியில் வென்று 2 புள்ளிகளை பெற்று மகிழ்ச்சியளிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நான் செல்பி எதுவும் எடுக்க முயற்சிக்கவில்லை. எனது நண்பர் வீடியோ எடுக்க முயன்றார்.
    • எனது நண்பரைக் காப்பாற்ற முயற்சித்தேன். அவர்கள் என்னை பேஸ்பால் பேட்டால் அடித்தனர்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த வாரம் புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வெளியே வந்தார். அப்போது, அங்கு வந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும், போஜ்புரி நடிகையுமான ஸ்வப்னா கில் ஒரு செல்பி புகைப்படம் எடுக்க வேண்டுமென பிரித்வி ஷாவிடம் கேட்டுள்ளார். அதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஸ்வப்னா கில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரித்விஷாவை கடுமையாக தாக்கினார். மேலும், பிரித்வி ஷாவின் காரையும் அந்த கும்பல் அடித்து உடைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக பிரித்வி ஷா அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்வப்னா கில் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த புகாரின் அடிப்படையில் பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்திய ஸ்வப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்வப்னா கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனிடையே, ஸ்வப்னா கில் மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஸ்வப்னா கில் மற்றும் அவரது கூட்டளிகள் மேலும் 3 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஸ்வப்னா அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனுவை விசாரித்த அந்தேரி கோர்ட்டு ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தற்போது ஸ்வப்னா கில் சமீபத்தில் ஜாமீனில் வெளீயே வந்தார்.

    அவர் விடுதலையான உடனேயே, கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மீது புகார் அளித்தார். அதில் கிரிக்கெட் வீரர் குடிபோதையில் இருந்ததாகவும், தன்னை மானபங்கப்படுத்தியதாகவும் ஸ்வப்னா புகாரில் தெரிவித்துள்ளார். மும்பை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ள ஸ்வப்னா, தனது நண்பர் ஷோபிட் தாக்கூர் கிரிக்கெட் ரசிகர் என்பதால் பிரித்வி ஷாவிடம் செல்பி கேட்க சென்றார்.

    ஆனால் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்த பிரித்வி ஷாவும் அவரது நண்பர்களும் தாக்கூரை துன்புறுத்தினர். இதனை தடுக்க சென்ற என்னையும் தகாத வார்த்தைகளில் பேசினார், தகாத முறையிலும் சீண்டிப்பார்த்தனர் மேலும் கிரிக்கெட் வீரர் எனது அந்தரங்க உறுப்புகளை தொட்டு தாக்கியதாக அவர் குற்றம் சாட்டினார்.

    ஆயுதங்கள் மூலம் தாக்கியது, உயிருக்கு ஆபத்தை விளைவித்தது என 10 பிரிவுகளின் கீழ் ஸ்வப்னா கில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் பின்னர் இது குறித்து ஏஎன்ஐக்கு பேட்டி அளித்த ஸ்வப்னா கில் கூறியதாவது;-

    நாங்கள் யாரையும் அடிக்கவில்லை. பணம் கேட்கவில்லை. எங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். நான் செல்பி எதுவும் எடுக்க முயற்சிக்கவில்லை. எனது நண்பர் வீடியோ எடுக்க முயன்றார். ஆனால் அவர்கள் அவரை தாக்கினர்.

    எனது நண்பரைக் காப்பாற்ற முயற்சித்தேன். அவர்கள் என்னை பேஸ்பால் பேட்டால் அடித்தனர். இரண்டு பேர் என்னை அடித்தனர் மற்றும் எனது அந்தரங்க உறுப்புகளைத் தொட்டனர். மேலும் என்னை அறைந்தனர் என கூறினார்.

    • செல்பி புகைப்படம் எடுக்க மறுப்பு தெரிவித்ததால் பிரித்வி ஷா மீது இன்ஸ்டாகிராம் பிரபலம் தாக்குதல் நடத்தினார்.
    • இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஸ்வப்னா அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த வாரம் புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வெளியே வந்தார். அப்போது, அங்கு வந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும், போஜ்புரி நடிகையுமான ஸ்வப்னா கில் ஒரு செல்பி புகைப்படம் எடுக்க வேண்டுமென பிரித்வி ஷாவிடம் கேட்டுள்ளார்.


    அதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்வப்னா கில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரித்விஷாவை கடுமையாக தாக்கினார். மேலும், பிரித்வி ஷாவின் காரையும் அந்த கும்பல் அடித்து உடைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக பிரித்வி ஷா அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்வப்னா கில் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த புகாரின் அடிப்படையில் பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்திய ஸ்வப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்வப்னா கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டனர்.


    இதனிடையே, ஸ்வப்னா கில் மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஸ்வப்னா கில் மற்றும் அவரது கூட்டளிகள் மேலும் 3 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஸ்வப்னா அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த ஜாமீன் மனுவை விசாரித்த அந்தேரி கோர்ட்டு ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீன் கிடைத்ததையடுத்து ஸ்வப்னா விரைவில் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பேஸ்பால் மட்டையால் தாக்கி காரை சேதப்படுத்தியதாக பிருத்வி ஷா நண்பர் புகார் அளித்தார்.
    • பிருத்வி ஷா முதலில் தங்களை தாக்கியதாக எதிர்தரப்பினர் கூறி உள்ளனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை ஓஷிவாராவில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு பிருத்வி ஷா நேற்று தனது நண்பருடன் சாப்பிடச் சென்றபோது, இரண்டு ரசிகர்கள் (ஒரு ஆண், ஒரு பெண்) அவருடன் செல்பி எடுக்க விரும்பினர். பிருத்வி ஷா அனுமதியின் பேரில் சில புகைப்படங்கள் எடுத்த அவர்கள், தொடர்ந்து மேலும் படங்கள் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    அப்போது, மறுப்பு தெரிவித்த பிருத்வி ஷா, தனது நண்பர் மற்றும் ஓட்டல் மேலாளரை அழைத்து, ரசிகர்களை வெளியேற்றும்படி கூறி உள்ளார். இதனால் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் பிருத்வி ஷா நண்பருடன் வெளியே வந்தபோது அவரை சிலர் பேஸ்பால் மட்டைகளுடன் ஆயுதம் ஏந்தியபடி, தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது காரையும் பேஸ்பால் மட்டையால் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். இதனால் பிருத்வி ஷா வேறு காரில் ஏறி சென்றுள்ளார்.

    நண்பரும் மற்றும் சிலரும் அவரது காரை ஓட்டிச் சென்றனர். ஆனால், அந்த காரை வாகனங்களில் துரத்தி வந்து சிலர் தாக்கியதாகவும், 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாகவும் பிருத்வி ஷாவின் நண்பர் புகார் அளித்தார். அதன்பேரில் சப்னா கில் என்ற பெண் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குற்றம்சாட்டப்பட்ட சப்னா, கைது செய்யப்பட்டார். கிரிக்கெட் வீரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்தரப்பினர் மறுத்துள்ளனர். பிருத்வி ஷா முதலில் தங்களை தாக்கியதாக அவர்கள் கூறி உள்ளனர். 

    • நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்ஸ்மேன் பிரித்வி ஷா டி20 அணிக்கு தேர்வாகி உள்ளார்.
    • சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த தொடரில் அவர் தொடக்க வீரராக களம் இறங்குவார்.

    ராஞ்சி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய ஒருநாள் போட்டி தொடரை இந்தியா முழுமையாக (3-0) கைப்பற்றியது.

    அடுத்து இந்தியா-நியூசிலாந்து அணிகள் மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி இன்று ராஞ்சியில் நடக்கிறது.

    இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்ஸ்மேன் பிரித்வி ஷா அணிக்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இது தொடர்பாக கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த தொடரில் அவர் தொடக்க வீரராக களம் இறங்குவார். பிரித்விஷா வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.

    முக்கியமான இரண்டு பந்து வீச்சாளர்களுக்கு (முகமது ஷமி, முகமது சிராஜ்) ஓய்வு கொடுத்து இருப்பதால் எங்களுக்கு நெருக்கடி எதுவும் இல்லை.

    புதிய பந்தில் பந்து வீசுவதை நான் எப்போதும் ரசித்து வருகிறேன். பல ஆண்டுகளாக நான் வலைகளில் பந்து வீசும் போதெல்லாம் புதிய பந்தை தேர்வு செய்கிறேன்.

    கடந்த ஆட்டத்தில் இரண்டு முக்கிய பந்து வீச்சாளர்கள் ஓய்வில் இருந்ததால் தொடக்கத்தில் நான் பந்து வீச தயாராக இருக்க வேண்டியிருந்தது. ஆனால் அது எப்போதும் அழுத்தமாக இருந்ததில்லை. பயிற்சியில் ஈடுபட்ட நாங்கள் டோனியை சந்தித்தோம். அவரை சந்தித்து பேசியது உற்சாகமாக இருந்தது.

    நாங்கள் ஒன்றாக விளையாடிய போது அவரிடம் இருந்து நிறைய கற்று கொண்டேன்.

    இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறினார்.

    • கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் பெயர்தான் பரிசீலனையில் முதலிடத்தில் இருக்கும் என நம்புகிறேன்.
    • என்னுடைய தேர்வு பிரித்வி ஷாதான்.

    கடந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2021 தொடரின்போது விராட் கோலி கேப்டனாக இருந்தார்.அந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி படுமோசமாக சொதப்பி அரையிறுதிக்கு கூட முன்னேறாமல், லீக் சுற்றுடன் நாடு திரும்பியது. இதனால், விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது. கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துவந்த நிலையில், அவரே கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இதனையெடுத்து மூன்று விதமான அணிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் கோலி விலகினார்.

    இதனைத் தொடர்ந்து ரோகித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஐபிஎலில் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு கோப்பைகளை பெற்றுக்கொடுத்து அசத்தியதுபோல், இந்திய அணிக்கும் பல கோப்பைகளை பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், ரோஹித் ஷர்மா கேப்டன் பதவியை ஏற்றப் பிறகு இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் பைனலுக்கு கூட முன்னேறவில்லை. அடுத்து டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் அரையிறுதியுடன் இந்திய அணி திரும்பியது. இந்த தொடர் தோல்விகள் காரணமாக ரோகித் மீதும் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால், ஒருநாள் அணிக்கு மட்டும் ரோகித் ஷர்மாவை கேப்டனாக நியமித்துவிட்டு டெஸ்ட், டி20 அணிகளுக்கு புது கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், டி20 அணிக்கு பிசிசிஐ யாரை கேப்டனாக நியமிக்கும் என்ற கேள்விக்கு தற்போது கௌதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் பெயர்தான் பரிசீலனையில் முதலிடத்தில் இருக்கும் என நம்புகிறேன். இருப்பினும், ஒருசில தொடர்களில், ஐபிஎலில் அவர் சிறப்பாக கேப்டன்சி செய்ததை வைத்து ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க கூடாது. ஐபிஎலில் கோப்பை வென்று கொடுத்தார் என்று கூறிதான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை கொடுத்தோம். இப்போது புது கேப்டனை தேடுகிறோம்.

    என்னுடைய தேர்வு பிரித்வி ஷாதான். இவரைத்தான் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும். இவர் சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், விஜய் ஹசாரே தொடர், ரஞ்சிக் கோப்பை தொடர்களில் ஆக்ரோஷமாக கேப்டன்ஸி செய்ததை நான் பார்த்திருக்கிறேன். வெற்றிகரமான கேப்டனாகவும் இவர் இருக்கிறார். இவர் டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட பொருத்தமான வீரர்.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.

    2019-ம் ஆண்டில் பிரித்வி ஷா 6 மாதங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ரி‌ஷப் பந்த், பிரித்வி ஷா அதிரடியாக ஆடினால் கட்டுப்படுத்துவது கடினம் எனவும் 2 பேரையும் அவர்கள் போக்கில் ஆட விட்டால் வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் எனவும் டெல்லி கேப்டன் கூறியுள்ளார். #ShreyasIyer #DCvsSRH
    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி ஐதராபாத்தை வீழ்த்தி நாக்அவுட்டில் முதல்முறையாக வெற்றி பெற்றது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது.

    கப்தில் 19 பந்தில் 36 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), மணிஷ் பாண்டே 30 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 28 ரன்னும், விஜய் சங்கர் 11 பந்தில் 25 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    கீமா பால் 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும், போல்ட், அமித் மிஸ்ரா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 163 ரன் இலக்குடன் டெல்லி அணி ஆடியது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 1 பந்து எஞ்சி இருந்த நிலையில் வெற்றி வெற்றது. அந்த அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பிரித்வி ஷா 38 பந்தில் 56 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), ரி‌ஷப் பந்த் 21 பந்தில் 49 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ரஷீத் கான் தலா 2விக்கெட்டும், தீபக் ஹூடா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பாஷில் தம்பி வீசிய 18-வது ஓவரில் ரி‌ஷப் பந்த் 2 பவுண்டரி, 2 சிக்சர் அடித்து ஆட்டத்தை மாற்றி டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார்.

    ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணி முதன் முறையாக நாக்அவுட்டில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் ஷிரேயாஷ் அய்யர் கூறியதாவது:-

    கடைசி ஓவரில் எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் உட்கார்ந்து அந்த ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அணியில் உள்ள ஒவ்வொருவரது முகத்திலும் மகிழ்ச்சியை கண்டேன். இதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. வெற்றி பெற்ற பிறகு கொண்டாட்டம் தேவைதான்.

    கப்திலின் அதிரடியான ஆட்டத்தால் ஐதராபாத் அணி மிகப்பெரிய ஸ்கோரை எடுக்கும் என்று கருதினோம். ஆனால் அமித் மிஸ்ரா பிரமாதமாக பந்து வீசினார். அனைவரது பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.

    ரி‌ஷப் பந்த், பிரித்வி ஷா அதிரடியாக ஆடினால் கட்டுப்படுத்துவது கடினம். அவர்கள் போக்கில் ஆடினால் வெற்றிக்கு அழைத்து செல்வார்கள்.



    குவாலிபையர்-2 ஆட்டத்தில் சென்னை அணி எதிர்கொள்கிறோம். அந்த அணியை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, ‘‘நாங்கள் கடினமான ஸ்கோரைதான் டெல்லி அணிக்கு நிர்ணயித்தோம். 162 ரன் என்பது வெற்றி பெறக்கூடிய இலக்குதான்.

    ஒரு கட்டத்தில் நாங்கள் வலிமையான நிலையில் இருந்தோம். வார்னரும், பேர்ஸ்டோவும் இல்லாதது அணிக்கு பாதிப்பே. கடைசி நேரத்தில் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது என்றார். #ShreyasIyer #DCvsSRH
    இடது கணுக்காலில் காயமடைந்த இந்திய இளம் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. 3வது டெஸ்டில் விளையாடுவதற்கு வாய்ப்பு உள்ளது. #PrithviShaw #AUSvIND
    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி நடந்து வருகிறது.

    பயிற்சி கிரிக்கெட்டில் பீல்டிங்கின் போது இடது கணுக்காலில் காயமடைந்த இந்திய இளம் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா முதலாவது டெஸ்டில் விளையாடவில்லை.

    அவரது காயத்தன்மை குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில், ‘பிரித்வி ஷா காயத்தில் இருந்து வேகமாக குணமடைந்து வருகிறார். இப்போது நடக்கிறார். இந்த வார இறுதிக்குள் ஓட ஆரம்பித்து விட்டால், அது நல்ல அறிகுறியாக இருக்கும்.

    2-வது டெஸ்டுக்கு முன்பாக அவரது காயம் எந்த அளவுக்கு குணமடைந்துள்ளது என்பதை பார்த்து அணியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்வோம்’ என்றார். 19 வயதான பிரித்வி ஷா மெல்போர்னில் 26-ந்தேதி தொடங்கும் 3-வது டெஸ்டில் ஆடுவதற்கு வாய்ப்புள்ளது. #PrithviShaw #AUSvIND
    பயிற்சி ஆட்டத்தில் கேட்ச் பிடிக்கும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் பிரித்வி ஷா அடிலெய்டு டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். #Prithvishaw
    சிட்னி:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

    டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவனுடன், இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.

    இந்த பயிற்சி ஆட்டம் நேற்றுமுன்தினத்தில் இருந்து சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா டீப் மிட்விக்கெட் திசையில் பவுண்டரி லைன் அருகில் ஜம்ப் செய்து கேட்ச் பிடிக்க துள்ளிய அவர், காலை கீழே வைக்கும்போது தடுமாறினார். இதனால் கணுக்காலில் காயம் அடைந்து வலியால் துடித்தார்.



    இதையடுத்து, உடனடியாக மருத்துவ குழுவினரின் உதவியுடன் மைதானத்தை விட்டு பிரித்வி ஷா வெளியேறினார். அவரது காயம் குறித்து அறிய ஸ்கேன் செய்யப்பட இருக்கிறது. காயத்தில் இருந்து விரைவாக மீண்டுவதற்கான சிகிச்சையை மருத்துக்குழு மேற்கொண்டு வருகிறது.
    ×