என் மலர்
நீங்கள் தேடியது "MCA"
- இந்தியாவுக்காக 5 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- உடற்தகுதி பிரச்சனைகள் மற்றும் ஒழுக்கமின்மை குற்றச்சாட்டுகளால் சர்வதேச அணியில் நிலையான இடத்தை பெற முடியவில்லை.
இந்திய அணி வீரர் பிரித்வி ஷா. இந்தியாவுக்காக 5 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 25 வயதான ஷா, மோசமான உடற்தகுதி மற்றும் ஒழுக்கமின்மை காரணமாக கடந்த ஆண்டு மும்பை ரஞ்சி அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இவர் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்பட்டு "அடுத்த சச்சின்" என புகழப்பட்டவர். ஆனால் காயங்கள், உடற்தகுதி பிரச்சனைகள் மற்றும் ஒழுக்கமின்மை குற்றச்சாட்டுகளால் சர்வதேச அணியில் நிலையான இடத்தை பெற முடியவில்லை.
இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடவில்லை. உள்ளூர் போட்டியிலும் மும்பை அணியில் அவர் இடம் பெறவில்லை.
கடைசியாக மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான உள்நாட்டுப் போட்டியான சையத் முஷ்டாக் அலி டி20 டிராபியின் இறுதிப் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடினார். அந்த ஆட்டத்தில் அவரது அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் மும்பை அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மும்பை கிரிக்கெட் வாரியத்துக்கு பிரித்வி ஷா கடிதம் எழுதியுள்ளார்.
- மும்பை அணியில் இருந்து விலகி கோவா அணிக்காக விளையாடபோவதாக சில தினங்களுக்கு முன்பு ஜெய்ஸ்வால் கூறினார்.
- மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் இதற்கான தடையில்லா சான்றிதழையும் ஜெய்ஸ்வால் கேட்டிருந்தார்.
இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் கடந்த 2023-ம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேற்கொண்டு இந்த ஆண்டு இந்திய ஒருநாள் அணிக்காகவும் அறிமுகமானர்.
இந்திய அணியின் மிக முக்கிய தொடக்க வீரராக திகழும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணிக்கு தேர்வானார்.
இந்நிலையில் மும்பை அணியில் இருந்து விலகி கோவா அணிக்காக விளையாடபோவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அவர் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் இதற்கான தடையில்லா சான்றிதழையும் கேட்டிருந்தார்.
மும்பை அணியில் ஏற்பட்ட சலசலப்பின் காரணமாகவும், கோவா அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததன் காரணமாகவும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கோவா அணிக்காக விளையாடும் தனது முடிவிலிருந்து பின்வாங்கி மீண்டும் மும்பை அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளான.
இதுகுறித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், "கீழே கையொப்பமிட்டுள்ள நான், கோவாவுக்குச் செல்வதற்கான சில குடும்பத் திட்டங்கள் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், எனக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றை திரும்பப் பெறுவதற்கான எனது கோரிக்கையை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனவே, இந்த சீசனில் மும்பைக்காக விளையாட என்னை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
- தமிழகத்தில் டிஎன்பிஎல் போல மும்பையில் டி20 மும்பை லீக் தொடர் அறிமுகமாகிறது.
- இந்த தொடர் மே 26-ந் தேதி தொடங்கி ஜூன் 5-ந் தேதி வரை நடக்கிறது.
ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 25-ந் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி ஜூன் மாதம் 20-ந் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் டிஎன்பிஎல் போல மும்பையில் டி20 மும்பை லீக் தொடர் அறிமுகமாகிறது. இந்த தொடர் மே 26-ந் தேதி தொடங்கி ஜூன் 5-ந் தேதி வரை நடக்கிறது.
டி20 மும்பை லீக்கில் மும்பையின் அனைத்து வீரர்களும் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மும்பை வீரர்கள் டி20 மும்பை லீக்கில் பங்கேற்க மும்பை கிரிக்கெட் சங்கம் உத்தரவிட்டுள்ளது. ரோகித் சர்மா தவிர ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே போன்ற வீரர்கள் லீக்கில் பங்கேற்க வேண்டும்.
இது கட்டாயமாகும். இந்திய அணியில் விளையாடுபவர்கள் மற்றும் காயம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் தவிர மற்ற அனைத்து மும்பை அணி வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடினார்.
- தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பை அணியிலிருந்து விலகுகிறார்.
இந்தியாவில் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடி வந்தவர். ரஞ்சி தொடரில் மும்பை அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் களமிறங்கினார்.
இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு மாற்றுவதற்கு மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC (ஆட்சேபனை இல்லை சான்றிதழ்) சான்றிதலை ஜெய்ஸ்வால் கோரியுள்ளார்.
அடுத்த ரஞ்சி சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட ஜெய்ஸ்வால் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது.
- டோனி அடித்த சிக்சர் இறங்கிய இடத்தில் இந்த நினைவகம் கட்டப்படும்.
- 2011 உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதை டோனி வென்றார்.
மும்பை:
கடந்த 2011-ல் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா.
இறுதிப் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்திருந்தது. 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. சேவாக் மற்றும் சச்சினை இந்திய அணி விரைவாக இழந்தது. கோலி, 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். யாரும் எதிர்பார்க்காத வகையில் டோனி முன்கூட்டியே பேட் செய்து போட்டியை மாற்றியமைத்தார்.
குலசேகரா வீசிய 48.2 பந்தை டோனி சிக்சருக்கு விரட்டி அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் உலக சாம்பியன் பட்டத்தை வென்று கெத்து காட்டினார்கள். இதில் ஆட்டநாயகன் விருதை டோனி வென்றார்.
இந்நிலையில் இந்தியாவின் 2011 உலகக் கோப்பை வெற்றியினை கொண்டாடும் வகையில் வான்கடே ஸ்டேடியத்தில் ஒரு சிறிய நினைவு சின்னத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி டோனி அடித்த சிக்சர் இறங்கிய இடத்தில் இந்த நினைவு சின்னம் கட்டப்படும்.
நினைவு சின்னம் திறப்பு விழாவிற்கு டோனியை அழைக்கவுள்ளதாக எம்சிஏ தலைவர் அமோல் காலே கூறியுள்ளார்.






