என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wankhede Stadium"

    • சுனில் கவாஸ்கர் 10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர்.
    • அதிக டெஸ்ட் சதங்கள் (34) அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

    மும்பை:

    வான்கடே மைதானத்தில் மும்பை கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்த ஜாம்வான்களை கவுரவிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், அது ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் எனவும் மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருந்தது. இதற்கு ஷரத்பவார் அருங்காட்சியகம் என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வான்கடே மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சரத்பவார் அருங்காட்சியகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இதன்

    நுழைவாயிலில் இந்திய பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கரின் ஆளுயர சிலையை சரத்பவார் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் 1971 முதல் 1987-ம் ஆண்டு வரை இந்தியா மற்றும் மும்பை அணிகளுக்காக விளையாடியவர்.

    10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர், அதிக டெஸ்ட் சதங்கள் (34) அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார்.

    ஏற்கனவே வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித் ஸ்டாண்டை அவரது அப்பா, அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
    • புதிய ஸ்டாண்டை திறக்கும் போது அருகில் இருந்த அவரது மனைவி ஆனந்த கண்ணீர் சிந்தினார்.

    மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.

    மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது. ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட் திறக்கப்பட்ட போது மேடையில் இருந்த அவரது மனைவி கண்கலங்கினார். குறிப்பாக கண்ணீருடன் ரோகித் சர்மாவை ஒரு பார்வை பார்ப்பார். அதில் கணவன் மீதான மனைவியின் அன்பு வெளிப்பட்டதை பார்க்க முடிந்தது. மேலும் அவரது தாய், தந்தையும் ஆனந்த கண்ணீர் சிந்தினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    இது குறித்து ரோகித் கூறியதாவது:-

    எனக்கு எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. இது ஒரு சிறந்த உணர்வு. நான் இன்னும் விளையாடும்போது இந்த மரியாதை அதை சிறப்பானதாக்குகிறது. இங்கு இருக்கும் பலருக்கு, குறிப்பாக என் குடும்பத்தினர், என் அம்மா, அப்பா, என் சகோதரர், அவரது மனைவி மற்றும் என் மனைவிக்கு முன்னால் இதைப் பெறுவது ஒரு பெரிய மரியாதை.

    என ரோகித் சர்மா கூறினார்.

    • இந்த ஸ்டான்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷல்.
    • நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இது எப்போதும் நிலைத்து நிற்கப்போகிறது.

    மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சரத் பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.

    மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் வான்கடே மைதானம் குறித்த நினைவுகளை ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    ரெயிலில் இவ்வழியாக செல்லும் போதெல்லாம் வான்கடே மைதானத்தை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டே பயணித்த நாட்களை நினைவுகூர்கிறேன். இந்த ஸ்டான்ட் மிகவும் ஸ்பெஷல். நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இது எப்போதும் நிலைத்து நிற்கப்போகிறது.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    • மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது.

    மும்பை:

    இந்தியா - பாகிஸ்தான் போர்ப்பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் நாளை தொடங்க தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சரத் பவார் கலந்து கொண்டனர்.

    அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.

    மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது. இவர்கள் 3 பேரின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டன.

    • வான்கடே மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டில் எனது பெயர் இருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை.
    • இந்த பெருமையை எனக்கு வழங்கிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 18-வது சீசனை முன்னிட்டு, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோருக்கு 18 தொடர்ச்சியான ஐபிஎல் சீசன்களில் விளையாடியதற்காகவும், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்களின் பங்களிப்பிற்காகவும் சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள ஒரு பகுதியை ரோகித் சர்மாவின் பெயர் சூட்டப்படுகிறது.

    இது குறித்து ரோகித் கூறியதாவது:-

    இப்படி ஒன்று நடக்கும் என்று நான் என் கனவில் கூட நினைத்தது கிடையாது. நான் இங்கு விளையாடிய முதல் போட்டி இன்னும் என் நினைவில் இருக்கின்றது. தற்போது என்னுடைய பெயர் இங்கு சூட்டப்படுவது நம்ப முடியவில்லை.

    என் பெயர் உள்ள ஸ்டேண்ட் முன் நான் விளையாட போகிறேன் என்று நினைத்துப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த மைதானத்தில் எனக்கு பல நல்ல நினைவுகள் இருக்கின்றது.

    வான்கடே மைதானம் புதிதாக புனரமைக்கப்பட்ட பின் இங்குதான் நாம் உலக கோப்பையை வென்றோம். இங்கு நாம் அதிக போட்டிகளில் விளையாடிருகின்றோம். தற்போது இந்த மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டில் எனது பெயர் இருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை.

    நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன் இந்த பெருமையை எனக்கு வழங்கிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    முதன் முதலில் கிரிக்கெட் விளையாடும்போது நாம் எவ்வளவு தூரம் எவ்வளவு நாள் விளையாட போகிறோம் என்று நமக்கு தெரியாது. ஆனால் நான் இந்த மைதானத்தில் ஒரு சாதாரண வீரராக வந்து தற்போது எனது பெயரிலே ஒரு ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது என்பதில் நினைக்கும் போது உணர்ச்சி வசமாக இருக்கின்றது.

    என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    தோனிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார். இந்திய அணியில் வீரராக நான்கு ஐசிசி கோப்பையை ரோகித் சர்மா வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை- ஐதராபாத் அணிகள் நேற்று மோதின.
    • இந்த போட்டியில் ரோகித் சர்மா 3 சிக்சர்களை விளாசினார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய ரோகித் சர்மா 16 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்சர்கள் அடங்கும். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா 102 சிக்சர்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். மேலும் இந்திய அணிக்காக வான்கடே மைதானத்தில் 19 சிக்சர்களை விளாசி உள்ளார். இரண்டாவது இடத்தில் அந்த அணியின் முன்னாள் வீரர் பொல்லார்ட் (85) உள்ளார்.

    ஒரு மைதானத்தில் 100-க்கும் மேற்பட்ட சிக்சர்களை பறக்கவிட்டவர்கள் பட்டியலில் விராட் கோலி (130 சிக்சர்) முதல் இடத்தில் உள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

    அதே மைதானத்தில் கிறிஸ் கெய்ல் 127 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் ஏபி டிவில்லியர்ஸ் 118 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 4-வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார்.

    மேலும் ஒரு அணிக்காக 250 -க்கும் அதிகமாக சிக்சர் விளாசிய 6-வது வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார். அந்த பட்டியலின் முதல் இடத்தில் விராட் (296), கெய்ல் (263), பொல்லார்ட் (258), தோனி (256), ரோகித் (251) ஆகியோர் உள்ளனர்.

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை ரோகித் வென்று கொடுத்துள்ளார்.
    • மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 86வது கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

    ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி விளையாடி வருகிறார்.

    இந்நிலையில், வான்கடே மைதானத்தின் திவேச்சா பெவிலியன் லெவல் 3 பகுதிக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித்தின் பெயர் சூட்டப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

    மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 86வது கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை ரோகித் வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டோனி அடித்த சிக்சர் இறங்கிய இடத்தில் இந்த நினைவகம் கட்டப்படும்.
    • 2011 உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதை டோனி வென்றார்.

    மும்பை:

    கடந்த 2011-ல் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா.

    இறுதிப் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்திருந்தது. 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. சேவாக் மற்றும் சச்சினை இந்திய அணி விரைவாக இழந்தது. கோலி, 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். யாரும் எதிர்பார்க்காத வகையில் டோனி முன்கூட்டியே பேட் செய்து போட்டியை மாற்றியமைத்தார்.

    குலசேகரா வீசிய 48.2 பந்தை டோனி சிக்சருக்கு விரட்டி அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் உலக சாம்பியன் பட்டத்தை வென்று கெத்து காட்டினார்கள். இதில் ஆட்டநாயகன் விருதை டோனி வென்றார்.

    இந்நிலையில் இந்தியாவின் 2011 உலகக் கோப்பை வெற்றியினை கொண்டாடும் வகையில் வான்கடே ஸ்டேடியத்தில் ஒரு சிறிய நினைவு சின்னத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி டோனி அடித்த சிக்சர் இறங்கிய இடத்தில் இந்த நினைவு சின்னம் கட்டப்படும்.

    நினைவு சின்னம் திறப்பு விழாவிற்கு டோனியை அழைக்கவுள்ளதாக எம்சிஏ தலைவர் அமோல் காலே கூறியுள்ளார்.

    • கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினாா்.
    • வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்படுகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்தவர் உள்பட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமைக்குரிய டெண்டுல்கர் மும்பையை சேர்ந்தவர் ஆவார். மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி முடிவடைந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக தனது 200-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய டெண்டுல்கர் அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.


    அவர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 51 சதங்களுடன் 15, 921 ரன்னும், 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களுடன் 18,426 ரன்களும் குவித்துள்ளார். 'சாதனை நாயகன்', 'கிரிக்கெட் கடவுள்' என்று வர்ணிக்கப்படும் டெண்டுல்கரை பெருமைப்படுத்தும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு டெண்டுல்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினாா். டெண்டுல்கரின் பொன்விழாவை கொண்டாடும் வகையில் வான்கடே மைதானத்தில் அவர் பெயர் சூட்டப்பட்ட பார்வையாளர் கேலரி அமைந்து உள்ள பகுதியில் அவருக்கு சிலை வைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இதையடுத்து அங்கு டெண்டுல்கரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

    மராட்டிய மாநிலம் அகமதுநகரை சேர்ந்த பிரபல சிற்ப கலைஞர் பிரமோத் காம்ளே அந்த சிலையை வடிவமைத்துள்ளார்.

    வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்படுகிறது.

    சிலை திறப்பு விழாவில் டெண்டுல்கர், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

    • வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
    • சிலை திறப்பு விழாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர். மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக தனது 200-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய டெண்டுல்கர் அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.

    'சாதனை நாயகன்', 'கிரிக்கெட் கடவுள்' என்று வர்ணிக்கப்படும் டெண்டுல்கரை பெருமைப்படுத்தும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு டெண்டுல்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினாா். டெண்டுல்கரின் பொன்விழாவை கொண்டாடும் வகையில் வான்கடே மைதானத்தில் அவர் பெயர் சூட்டப்பட்ட பார்வையாளர் கேலரி அமைந்து உள்ள பகுதியில் அவருக்கு சிலை வைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இதையடுத்து அங்கு டெண்டுல்கரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.

    சிலை திறப்பு விழாவில் டெண்டுல்கர், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, சரத் பவார், ராஜூவ் சுக்லா, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாலை 5 மணிக்கு இந்திய அணி வீரர்கள் திறந்த பஸ்சில் ஊர்வலமாக செல்கின்றனர்.
    • பின்னர் ஸ்டேடியத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று தாயகம் திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    இதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு இந்திய அணி வீரர்களை திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. பின்னர் ஸ்டேடியத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ,125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ள வான்கடே மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் இலவசமாக அணுமதிக்கப்பட உள்ளனர். இந்திய அணி வீரர்களை வரவேற்க மும்பையில் ரசிகர்கள் அலை கடல் என திரண்டுள்ளனர்.

    2007-ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற போது இதே போல் வெற்றி பேரணி நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

    • டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை டெல்லி வந்தடைந்தது.
    • காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை டெல்லி வந்தடைந்தது. காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.அதன் பிறகு இந்திய அணியினர் அங்கிருந்து மும்பைக்கு புறப்பட்டனர்.

    இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலத்தை தொடங்க உள்ள பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஊர்வலம் மற்றும் பாராட்டு விழாவை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மேலும் ரசிகர்கள் மழையிலும் இந்திய வீரர்களுக்காக வழி நெடுகிழும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

    ×