என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேகாலயா"

    • நிலக்கரி சுரங்கத்தில் டைனமைட் வெடித்த விபத்தில் 31 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    • அசாம் மாநிலம் ஸ்ரீபூமி மாவட்டத்தை சேர்ந்தவர் 44 வயது ஷியாம் பாபு சின்ஹா.

    மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் பகுதியில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி டைனமைட் வெடிபொருள் வெடித்த விபத்தில் 31 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    இந்த விபத்தில் அசாம் மாநிலம் ஸ்ரீபூமி மாவட்டத்தை சேர்ந்த 44 வயது ஷியாம் பாபு சின்ஹா உயிரிழந்ததாக கருதப்பட்டது.

    அவரது குடும்பத்தினரும் விபத்தில் சிதைந்திருந்த ஒரு சடலத்தை அடையாளம் கண்டு, அதைத் ஷியாம் பாபு சின்ஹா என்று கருதி சொந்த ஊருக்குக் கொண்டு சென்று இறுதிச்சடங்குகளைச் செய்தனர்.

    குடும்பத்தினரும் உறவினர்களும் துக்கத்தில் இருந்த நிலையில் ஷியாம் பாபு சின்ஹா திடீரென வீட்டிற்கு வந்துள்ளார்.

    அவரை பார்த்து அனைவரும் முதலில் அச்சமடைந்தாலும், பின்னர் அவர் உயிருடன் இருப்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

    இந்தக் குழப்பத்திற்கு சடலத்தை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

    ஷியாம் பாபுவின் பெயரில் யாருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.    

    • வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
    • இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மாநில நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    ஷில்லாங்:

    வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தில் தஷ்காய் என்ற பகுதியில் சட்டவிரோதமாக நிலக்கரிச் சுரங்கம் இயங்கி வந்தது.

    இந்த நிலக்கரிச் சுரங்கத்தில் நேற்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மாநில நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்தார்.

    மத்திய அரசு சார்பில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டது. மேகாலயா முதல் மந்திரி கான்ராட் சங்மா இரங்கலை தெரிவித்ததுடன், மாநில அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அறிவிக்கப்பட்டது.

    • உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அண்டை மாநிலமான அசாம் பகுதியைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள்
    • சுரங்கத்தில் சட்டவிரோதமாக டைனமைட் பயன்படுத்தி வெடி வைத்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    மேகாலயாவில் சட்டவிரோதமாக இயங்கிய நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இன்னும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆங்கில ஊடகங்கள் 16 பேர் உயிரிழந்ததாக குறிப்பிடுகின்றன.

    மேகாலயாவின் கிழக்கு ஜெய்ந்தியா மலை மாவட்டத்திலுள்ள தஷ்காய் பகுதியில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருவர் படுகாயமடைந்து ஷில்லாங்கில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அண்டை மாநிலமான அசாம் பகுதியைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. சுரங்கத்தில் சட்டவிரோதமாக டைனமைட் (Dynamite) பயன்படுத்தி வெடி வைத்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வெடிப்பு மிகவும் பெரிதாக இருந்ததால் அருகிலுள்ள மலைகளும் அதிர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் மீட்பு பணி கடினமாக இருப்பதாகவும், மேலும் இந்த இடர்பாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    "மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் மீட்புப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இருப்பினும், தொலைதூர இடம், இடிபாடுகள் மற்றும் மோசமான வானிலை ஆகியவை தங்கள் மீட்பு பணிகளுக்கு தடையாக இருப்பதாக" அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

    தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மேகாலயாவில் நிலக்கரி சுரங்கங்களுக்குத் தடை விதித்துள்ள போதிலும், இதுபோன்ற சட்டவிரோத சுரங்கச் செயல்பாடுகள் தொடர்கின்றன. 

     

    ×