search icon
என் மலர்tooltip icon

    மேகாலயா

    • கார்கலில், 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • மேகாலயாவில், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    கார்கில் பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. இது 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதேபோல், மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. மேலும், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    • 16 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடகிழக்கு பகுதி முழுவதிலும் உணரப்பட்டுள்ளது.
    • நிலநடுக்கத்தின் எதிரொலியால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ இல்லை.

    மேகாலயாவில் இன்று இரவு சுமார் 8.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தின் மையம் மேகாலயாவின் சிரபுஞ்சியிலிருந்து தென்கிழக்கே 49 கி.மீ தொலைவில் வங்காளதேச எல்லையில் உள்ள சில்ஹெட் அருகே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    16 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடகிழக்கு பகுதி முழுவதிலும், வட மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும், அண்டை நாடான வங்கதேசத்திலும் உணரப்பட்டன.

    மேலும், நிலநடுக்கத்தின் எதிரொலியால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • பாலியல் உறவு பற்றி 16 வயது சிறுமி முடிவு செய்ய முடியும் என மேகாலயா ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
    • மனுதாரருக்கு எதிரான எப்.ஐ.ஆர். பதிவை தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

    ஷில்லாங்:

    மேகாலயா மாநிலத்தில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் சிறுவன்மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை நீக்க கோரி மேகாலயா ஐகோர்ட்டில் சிறுவன் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    விசாரணையில், சிறுவன் பல்வேறு வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டது என்றும், சிறுவனின் மாமா வீட்டில் வைத்து இருவர் இடையே பாலியல் உறவு நடந்துள்ளது எனவும், பாலியல் தாக்குதல் என்ற அடிப்படையில் இந்த வழக்கு இல்லை. கருத்தொருமித்த செயலே ஆகும். சிறுமி தனது வாக்குமூலத்தில் மனுதாரரின் காதலி என்றும், கட்டாயம் எதுவுமின்றி உறவுக்கு ஒப்புதல் அளித்தது பற்றியும் கூறியுள்ளார் என வாதிட்டார்.

    மேலும், சிறுவன் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி இருவரும் காதல் உறவிலேயே இருந்துள்ளனர் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த மேகாலயா ஐகோர்ட்டு நீதிபதி டபிள்யூ தீங்தோ வெளியிட்டுள்ள தீர்ப்பில், 16 வயதில் உடல் மற்றும் மனரீதியாக ஒருவர் நன்றாக வளர்ச்சி அடைந்து இருப்பார். அவர்களது சுகாதார நலன் பற்றி, பாலியல் உறவில் ஈடுபடுவது உள்பட அவர்களுக்கு சுய நினைவுடனான முடிவை எடுப்பதற்கான தகுதியை அவர்கள் பெற்றிருப்பார்கள் என கருதுவது நியாயம். இதனால், சிறுமி வாக்குமூலம் மற்றும் மனுதாரரின் ஆவணங்கள் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, சிறுமியின் வாக்குமூலம் மனுதாரருக்கு ஆதரவாக அமைந்துள்ளது. இதனால் இதில் குற்ற உள்நோக்கம் எதுவும் இல்லை. எனவே மனுதாரருக்கு எதிரான எப்.ஐ.ஆர். பதிவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

    • குற்றவாளிகளை பிடிப்பதற்காக துரத்தியபோது இந்திய கிராமத்திற்குள் தெரியாமல் நுழைந்ததாக தகவல்
    • கொடி அணிவகுப்பு கூட்டம் நடத்தப்பட்டு அதிகாரப்பூர்வ நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

    வங்காளதேசத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்கள் நேற்று முன்தினம் எல்லை தாண்டி வந்து மேகாலயா மாநிலம் தெற்கு காரோ ஹில்ஸ் பகுதியில் உள்ள கிராமத்திற்குள் நுழைந்தனர். இந்தியா-வங்காளதேச சர்வதேச எல்லை வேலியை ஒட்டி அந்த கிராமம் அமைந்துள்ளது.

    அந்த வீரர்கள் துப்பாக்கி மற்றும் லத்திகள் வைத்திருந்ததால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அவர்களிடம் சென்று விசாரித்து அவர்களை திரும்பி செல்லும்படி கூறி உள்ளனர். அவர்கள் தயங்கியதைடுத்து கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து வீரர்களை விரட்டியடித்தனர். இதனால் வீரர்கள் வந்த பாதையில் திரும்பிச் சென்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வங்காளதேச எல்லை பாதுகாப்பு படையிடம் (பிஜிபி), எடுத்துரைத்து, எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. 

    எல்லைப்பகுதியில் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக துரத்தியபோது இந்திய கிராமத்திற்குள் தெரியாமல் நுழைந்ததாக வங்காளதேசம் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த கிராமம் எல்லை வேலிக்கு முன்னால் இருப்பதால், வங்காளதேச வீரர்கள் குற்றவாளிகளை துரத்தும்போது தாங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததை உணரவில்லை. எல்லை விதிகளை மீறியது தொடர்பாக கொடி அணிவகுப்பு கூட்டம் நடத்தப்பட்டு அதிகாரப்பூர்வ நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சம்பவத்தில் இந்தியர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கப்படவில்லை" என்றார்.

    • தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த பிரஸ்டோன் டின்சாங் மற்றும் ஸ்னியாவ்பலாங் தார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
    • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.

    மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) தலைவர் கான்ராட் சங்மா இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பாகு சௌஹானால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இவரை தொடர்ந்து, தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த பிரஸ்டோன் டின்சாங் மற்றும் ஸ்னியாவ்பலாங் தார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

    மேலும், தேசிய மக்கள் கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்கள், பாஜகவை சேர்ந்த 3 எம்ஏஎல்ஏக்களும், ஹெச்எஸ்பிடிபியை சேர்ந்த ஒருவரும் சங்மாவின் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் அசாம் முதல்வரும், என்இடிஏ ஒருங்கிணைப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    • மேகாலயா சட்டசபை தொகுதிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி நடந்தது.
    • வாக்கு எண்ணிக்கை முடிவில் சங்மாவின் கட்சி 26 இடங்களைக் கைப்பற்றியது.

    ஷில்லாங்:

    மேகாலயா சட்டசபை தொகுதிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி நடந்தது. இதில் தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) தலைவர்களில் ஒருவரான மாநில முதல் மந்திரி கன்ராட் சங்மா தெற்கு துரா தொகுதியில் போட்டியிட்டார்.

    பா.ஜ.க.வை சேர்ந்த அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாவை சங்மா நேரில் சந்தித்துப் பேசினார். ஆட்சி அமைக்க பா.ஜ.க.வின் ஆதரவை பெற இந்த சந்திப்பு நடந்தது என கூறப்படுகிறது.

    இதற்கிடையே, மேகாலயாவில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் சங்மாவின் கட்சி 26 இடங்களைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.வான பிரெஸ்டோன் டின்சாங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான அரசின் பதவியேற்பு விழா வரும் 7-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதன்படி, கட்சி தலைவர் கன்ராட் சங்மா முதல் மந்திரியாக பதவியேற்க கூடும் என கூறப்படுகிறது. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    • தேர்தல் வெற்றியைத்தொடர்ந்து மேகாலய ஆளுநர் பாகு சௌஹானை நேரில் சந்தித்தார் கான்ராட் சங்மா.
    • பாஜக மற்றும் மற்ற கட்சி ஆதரவு தேசிய மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது.

    வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதலமைச்சர் கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

    அங்கு 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 27ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி, 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலை என்.பி.பி. கட்சியும், பா.ஜ.க.வும் தனித்தனியே சந்தித்தன. இந்தத் தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின.

    பதிவான வாக்குகள், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இங்கு 59 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடந்ததால் தனிப்பெரும்பான்மை பெற 30 இடங்கள் தேவை. ஆனால், இங்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தது போலவே எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.

    தற்போதைய ஆளும் கட்சியான என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

    இந்தநிலையில், மேகாலயாவில் ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை உள்ளதாக அக்கட்சியின் தேசிய மக்கள் கட்சி தலைவரும், முதலமைச்சருமான கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றியைத்தொடர்ந்து மேகாலய ஆளுநர் பாகு சௌஹானை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க கான்ராட் சங்மா இன்று உரிமை கோரினார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கான்ராட் சங்மா, பாஜக எங்களுக்கு முழு ஆதரவைக் கொடுப்பதாக அறிவித்துள்ளது. அதனால் ஆளுநர் பாகு சௌஹானைச் சந்தித்து ஆட்சி அமைக்க நாங்கள் உரிமை கோரினோம். ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்தோம்.

    பாஜக மற்றும் மற்ற கட்சி ஆதரவு தேசிய மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

    • மேகாலயாவில் உள்ள துரா என்ற நகரில் இருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு 29 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.

    யூகா:

    மேகாலயா மாநிலத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று காலை 6.57 மணிக்கு மேகாலயாவில் உள்ள துரா என்ற நகரில் இருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு 29 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.

    முன்னதாக வடகிழக்கு பகுதியான மணிப்பூர் அருகே உள்ள நோனி பகுதியில் இன்று அதிகாலையில் 2.46 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது.

    சுமார் 5 மணி நேரத்தில் வடகிழக்கு பகுதியில் பதிவான 2 நிலநடுக்கங்களால் அப்பகுதி மக்கள் சற்று பீதியடைந்தனர்.

    • பூமிக்கடியில் 25.கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

    மேகாலயாவின் தூர நகரில் இருந்து 27 கி.மீ தொலைவில் இன்று காலை 9.40 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    பூமிக்கடியில் 25.கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதை அடுத்து, பீதியமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

    • வாரிசு அரசியலின் பிடியில் இருந்து மேகாலயா மாநிலம் விடுதலை பெற வேண்டும்.
    • தமது நாட்கள் எண்ணப்படுவதாக கூறிய பிரதமர், மக்கள் தாமரை தொடர்ந்து மலரும் என வாழ்த்துவதாக கூறினார்.

    ஷில்லாங்:

    மேகாலயா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இதனை ஒட்டி, ஷில்லாங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாலை பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பேரணியில், இரு புறமும் திரண்டு நின்றிருந்த தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர், பிரசார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, வாரிசு அரசியலின் பிடியில், இருந்து மேகாலயா மாநிலம் விடுதலை பெற வேண்டும் என்றார். மக்களால் நிராகரிக்கப்பட்டு விரக்தியின் குழியில் உள்ள சிலர், தமது நாட்கள் எண்ணப்படுவதாக கூறிய பிரதமர், ஆனால், மக்கள் தாமரை தொடர்ந்து மலரும் என வாழ்த்துவதாக கூறினார்.

    மேகாலயாவில், எங்கு பார்த்தாலும் பாஜக காணப்படுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, சமதள பகுதி முதல் மலைப்பகுதி வரை கிராமம் முதல் நகரம் வரை எல்லா இடங்களிலும் தாமரை மலர்ந்து கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

    • பாஜக ஆட்சி செய்து வரும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து என்னால் பேச முடியாது.
    • இந்தியாவில் பாஜக ஆட்சி செய்து வரும் 9 ஆண்டுகளில் எந்த கிறிஸ்தவ ஆலயங்களும் இடிக்கப்படவில்லை. இவை வெற்று அரசியல் பிரசாரம்தான்.

    மேகாலயாவில் வருகிற 27ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் மேகாலயா மாநில பாஜக தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பாஜக கட்சியில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எந்த தடையும் இல்லை. மேகாலயாவில் அனைத்து தரப்பு மக்களும் மாட்டிறைச்சி சாப்பிட்டு வருகிறார்கள். நானும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன். எங்களின் சொந்த உணவு பழக்க வழக்கங்களையே நாங்கள் கடை பிடித்து வருகிறோம். அதை பின்பற்றுவதற்கு எந்த தடையும் கிடையாது. பாஜக ஜாதி, மதம் பார்க்காது.

    யாராலும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தடுக்க முடியாது. எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்ற எந்தவிதமான கட்டுப்பாடுகளும் எங்களுக்கு இல்லை. ஜாதி, மதம், பழக்க வழக்கங்கள் சார்ந்து பாஜக எந்த காரணத்தை கொண்டும் யோசிக்காது.

    பாஜக ஆட்சி செய்து வரும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து என்னால் பேச முடியாது. நாங்கள் இருப்பது மேகாலயா. இங்குள்ள கலாச்சார முறையை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். இங்கு பெரிய கறிக்கடைகள் இயங்கி வருகின்றன. அந்த கடைகளில் மாட்டுக்கறி, பன்றி இறைச்சி ஆகியவை வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    பாஜக கிறிஸ்தவர்களுக்கு எதரான கட்சி என்று சில அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். பாஜக கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி இல்லை. இந்தியாவில் பாஜக ஆட்சி செய்து வரும் 9 ஆண்டுகளில் எந்த கிறிஸ்தவ ஆலயங்களும் இடிக்கப்படவில்லை. இவை வெற்று அரசியல் பிரசாரம்தான்.

    மேகாலயா கிறிஸ்தவர்கள் அதிக அளவில் வசிக்கும் மாநிலம். இங்குள்ள தேவாலயங்களுக்கு அனைத்து தரப்பினருமே வருகிறார்கள். கோவா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் கிறிஸ்தவ மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அந்த மாநிலங்களிலும் ஒரு தேவாலயம் கூட தாக்கப்படவில்லை. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜக, கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என்ற கருத்தை பரப்பி வருகின்றன. ஆனால் அவை எல்லாமே பொய் பிரசாரம் தான்.

    நானும் ஒரு கிறிஸ்தவன்தான். நான் தேவாலயத்துக்கு செல்லக்கூடாது என்று யாருமே என்னிடம் கூறியது கிடையாது. மேகாலயாவில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்த தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேகாலயாவில், இம்மாதம் 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
    • மேகாலயாவில் எந்த வளர்ச்சியும் இல்லை.

    ஷில்லாங் :

    வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், இம்மாதம் 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசும் போட்டியிடுகிறது.

    இந்தநிலையில், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மேகாலயாவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    மேகாலயாவில் எந்த வளர்ச்சியும் இல்லை. மருத்துவ கல்லூரி இல்லை. நல்ல ஆஸ்பத்திரி இல்லை. ஆனால் ஊழல் மட்டும் இருக்கிறது.

    மேகாலயாவில் நடக்கும் கான்ராட் சங்மா அரசு, எந்த வளர்ச்சி பணியும் மேற்கொள்ளவில்லை. ஊழலில்தான் ஈடுபடுகிறது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் இந்த அரசை மாற்றி, மேகாலயாவை வளர்ச்சி அடைய செய்ய முடியும்.

    மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள். டெல்லியில் இருந்து பா.ஜனதா ஆட்சியை அகற்றுகிறோம்.

    வெளியில் இருந்து வரும் யாரும் உங்கள் மீது குடியுரிமை திருத்த சட்டத்தையோ, தேசிய குடிமக்கள் பதிவேட்டையோ திணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×