search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIDS"

    • தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று காலை சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.
    • எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று காலை சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெகஜோதி தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் வரவேற்று பேசினார். மாநில பொருளாளர் ரமேஷ் தொடக்க உரையாற்றினார்.

    இதில் செயலாளர் மலர்விழி பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை விடுத்தனர்.

    போராட்டத்தில் ராமாயி, ஜெயபாரதி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும்
    • 423 மனுக்கள் பெறப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 423 மனுக்கள் பெறப்பட்டது அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68,400 மதிப்பீட்டில் தையல் எந்திரமும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,35,400 மதிப்பீட்டில் திறன்பேசியும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.36,200 மதிப்பீட்டில் 3 சக்கர மிதிவண்டியும், 12 பயனாளிகளுக்கு புதிரை வண்ணார் சாதிச்சான்றிதழ் என மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார். இக்கூட்டத்தில், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா , தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கொல்லிமலையில்‌ நடை பெற்ற வல்வில்‌ ஓரி நிறைவு விழாவில்‌ கலெக்டர் டாக்டர் உமா, சேந்த மங்கலம்‌ எம்.எல்.ஏ. பொன்னுசாமி முன்னிலை வகித்தனர்.
    • விழாவில் 437 பயனாளிகளுக்கு ரூ.3.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் நடை பெற்ற வல்வில் ஓரி நிறைவு விழாவில் கலெக்டர் டாக்டர் உமா, சேந்த மங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி முன்னி லையில் 437 பயனாளி களுக்கு ரூ.3.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், கலைநிகழ்ச்சிகள் நடத்திய கலை குழுவினர் மற்றும் மாணவ, மாண வியர்களுக்கு, சிறந்த அரங்கங்கள் அமைத்த அரசு துறையினருக்கு சான்றி தழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.வல்வில் ஓரி விழாவில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் கண்காட்சி அரங்குகளை கலெக்டர் உமா பார்வையிட்டார்.

    தொடர்ந்து வல்வில் ஓரி அரங்கில் சுற்றுலாத்துறை, கலைபண்பாட்டுத்துறை மற்றும் பள்ளிகல்வித்துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், கொக்கலி யாட்டம், மயிலாட்டம், மான்கொம்பு, பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், பரத நாட்டியம், தெருகூத்து,

    சேர்வை ஆட்டம், கொல்லிமலையில் சுற்றுலா முக்கியத்துவம் குறித்த நாடகம், பள்ளி மாணவ, மாணவியர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கலெக்டர் உமா பார்வையிட்டார்.

    கொல்லிமலை வட்டம், செம்மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் வருவாய் துறை சார்பில் 24 பயனாளி களுக்கு ரூ.4.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத் துறை சார்பில் 96 பயனாளி களுக்கு ரூ.1.23 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், தாட்கோ மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.64.51 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவி களையும், மகளிர் திட்டம் சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.98.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.28.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.69,150/- மதிப்பிலான நலத்திட்ட உதவி களையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.843/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திற னாளிகள் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.17,960/- மதிப்பிலான நலத்திட்ட உதவி களையும், பழங்குடியி னர் நலத்துறை சார்பில் 45 பயனாளி களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 138 பழங்குடியின மாணவிகளுக்கு ரூ.50,000/- மதிப்பில் ஸ்வெட்டர்க ளையும் என மொத்தம் 437 பயனாளி களுக்கு ரூ.3.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

    மேலும், வல்வில் ஓரி மற்றும் சுற்றுலா விழாவில் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட 17 பள்ளிகளை சேர்ந்த 427 மாணவ, மாண வியர்களுக்கும், 360 கலைஞர்க ளுக்கும், வல்வில் ஓரி அரங்கில் அமைக்கப்பட்ட 22 அரசுத்துறைகளின் பணி விளக்க கண்காட் சியில், சிறப்பாக அரங்கம் அமைத்த தற்காக முதல் இடம் ெபற்ற வனத்துறைக்கும், 2-ஆம் இடம் பெற்ற காவல் துறைக்கும், 3-ஆம் இடம் பெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் ஆகிய துறைகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களையும், தொடர்ந்து, வில்வித்தை போட்டி யில் வெற்றி பெற்ற போட்டியாளர்க ளுக்கும், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிய ருக்கும் கலெக்டர் உமா பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, நாமக்கல் வருவாய் ஆர்.டி.ஓ. சரவணன், வேளாண் இணை இயக்குநர் துரைசாமி, துணை இயக்குநர் தோட்டக்கலைத் துறை கணேசன், மாவட்ட மேலாளர் தாட்கோ ராமசாமி, பழங்குடியினர் திட்ட அலுவ லர்பீட்டர், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன், மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் முருகன், உதவி இயக்கு நர் பட்டுவளர்ச்சி முத்துப்பாண்டி யன், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) முரு கன், அத்மா குழுத்தலைவர் செந்தில் முருகன், கொல்லி மலை தாசில்தார் அப்பன்ராஜ், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டை அருகே 343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
    • கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 343 பயனாளிகளுக்கு ரூ.41.29 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படை யில் திருவேகம்பத்தூர் கிராமத்தில் நடந்த முகாமில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 287 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    அதில், தகுதியுடைய 218 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அம்மனுதாரர்க ளுக்கு நலத்திட்ட உதவி களும், அதன் பயன்களும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.இந்த முகாமில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் சிவராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மதினா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நோன்பு திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகம் மாலுமியார்பேட்டை மதினா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நோன்பு திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாநகர அவைத்தலைவர் பழனிவேல், பொருளாளர் ராஜேந்திரன், மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, மண்டல குழு தலைவர்கள் இளையராஜா, பிரசன்னா, மாநகராட்சி கவுன்சிலர்கள் பாலசுந்தர் மற்றும், விஜயலட்சுமி செந்தில், வட்ட செயலாளர்கள் நவ்ஷத் அலி, வெங்கடேஷ், ராஜேஷ், பகுதி அவைத் தலைவர் சண்முகம், மனோகர், தகவல் தொழில்நுட்ப அணி பிரவின், கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் ''நம் நலம் நம் செல்வம்'' என்ற தலைப்பில் செல்வ சுருதி கலைக்குழுவினரின் எய்ட்ஸ் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

    சமூக ஆர்வலர் ரஹ்மத் ஜவஹர் அலிகான், சுகாதார அமைப்பை சேர்ந்த ராஜா, கோட்டையம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர். நாடகம், பாட்டு, கரகாட்டம், மேளக்கச்சேரி ஆகிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • கோபாலபுரத்தில் மக்கள்தொடர்பு முகாம் நடந்தது.
    • 361 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் செங்கப்படை அடுத்துள்ள எஸ்.கோபாலபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலு தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை 361 பயனாளிகளுக்கு வழங்கினார்.

    கள்ளிக்குடி வருவாய்த்துறை உள்ளிட்ட 14 அரசுதுறைகளின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் 361 பயனாளிகளுக்கு சுமார் ரூ. 66 லட்சத்து 44 ஆயிரத்து 975 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட அலுவலர் சௌந்தரியா, கள்ளிக்குடி தாசில்தார் சுரேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நீலாதேவி, வருவாய் ஆய்வாளர் குமார், வி.ஏ.ஓ. முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் 24,318 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
    சேலம்:

    உலக எய்ட்ஸ் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலகம் மூலம் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு நடந்தது. இதை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி நின்றனர்.

    அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேலாளர்(பொறுப்பு) அருணாசலம் வரவேற்றார். அரசு ஆஸ்பத்திரி டீன் ராஜேந்திரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர்(பொறுப்பு) சத்யா, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எச்.ஐ.வி. கிருமியின் அளவை கணக்கீடு செய்யும் கருவியை கலெக்டர் ரோகிணி அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் மிக அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டத்தில் ஒன்றாக சேலம் மாவட்டமும் திகழ்கிறது. இருப்பினும் அவர்களுக்கான சிறப்பான மருத்துவ சிகிச்சை, எச்.ஐ.வி. தடுப்பு பணி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக செய்து வருகிறோம். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள எச்.ஐ.வி. கிருமியின் அளவினை கணக்கீடு செய்யும் கருவி மூலம் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களில் ஏ.ஆர்.டி. மையங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

    சேலம் மாவட்டத்தில் இதுவரை 24,318 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சேலம் மாவட்டத்தில் 94,858 பேர் எச்.ஐ.வி. பரிசோதனையும், ஆலோசனையும் பெற்றுள்ளனர். இதில் 363 பேருக்கு புதியதாக எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 15 கர்ப்பிணிகள் அடங்குவர்.

    இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அன்பு செலுத்தி அரவணைப்பதன் மூலம் சமூக புறக்கணிப்பு இல்லாமையை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மேற்பார்வை யாளர் நல்லதம்பி நன்றி கூறினார்.
    தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. #AIDS #TN
    சென்னை:

    சர்வதேச எய்ட்ஸ் நோய் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டது.

    அதில் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. அதுவும் புதிதாக இளைஞர்களை பெருமளவில் பாதித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டில் 20 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் 432 பேரை எய்ட்ஸ் தாக்கி இருந்தது. 2017-2018-ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 554 ஆக உயர்ந்துள்ளது.

    அதே நேரத்தில் நடப்பு ஆண்டில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே 318 பேரை எய்ட்ஸ் நோய் பாதித்துள்ளது.

    2015 முதல் 2016-ம் ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 435 பேரை எய்ட்ஸ் நோய் தாக்கியிருந்தது. அது 2017-2018-ம் ஆண்டில் 536 ஆக அதிகரித்தது. தற்போது ஏப்ரல் மற்றும் அக்டோபருக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் புதிதாக 435 எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகியுள்ளனர்.

    10 முதல் 19 வயது வரையிலான சிறுவர்களையும் எய்ட்ஸ் நோய் விட்டு வைக்கவில்லை. 2015-2016-ம் ஆண்டில் 160 பேரையும், 2017-2018-ம் ஆண்டில் 187 பேரையும் தாக்கியது. தற்போது ஏப்ரல்-அக்டோபர் மாதங்களுக்கு இடையே மேலும் 99 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



    பாதுகாப்பற்ற முறையில் ‘செக்ஸ்’ மற்றும் ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்துவது போன்ற காரணங்களால் 10 வயது சிறுவர்கள் முதல் 25 வயது இளைஞர்கள் வரை எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் 1,12,778 எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். அவர்களில் சென்னையில் தான் அதிக அளவில் இருக்கின்றனர் என பொது சுகாதார துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    எய்ட்ஸ் நோயை தடுக்க சமூக வலை தளங்கள், உள்ளிட்ட பல ஊடகங்களை பயன்படுத்தலாம். அதன் மூலம் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #AIDS #TN

    எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் எச்.ஐ.வி.-எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். #Edappadipalaniswami #AIDSDay
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. எச்.ஐ.வி. பரிசோதனை, சிகிச்சை மற்றும் எச்.ஐ.வி. தடுப்புப் பற்றி ‘‘உங்கள் நிலையை அறியவும்’’ இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தின மையக் கருத்து ஆகும்.

    தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் எச்.ஐ.வி. பரிசோதனை சிகிச்சையை விரிவுபடுத்துவதற்கும், தமிழகமெங்கும் எச்.ஐ.வி. தொற்றைகண்டறிய 2561 நம்பிக்கை மையங்களும், 15 நடமாடும் நம்பிக்கை மையங்களும் மற்றும் 2 நடமாடும் எச்.ஐ.வி.-எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு வாகனங்களும் செயல்பட்டு வருகின்றன.

    அத்துடன் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும், 194 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.


    மேலும், மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் எச்.ஐ.வி. தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து கருவில் உள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    எச்.ஐ.வி.-எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெறும் வகையில், எச்.ஐ.வி.-எய்ட்ஸ் தொற்றுள்ளோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வர கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்குதல், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியம் வழங்குதல், சூரிய ஒளி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வயது வரம்பை தளர்த்தி மாத ஓய்வூதியம் வழங்குதல், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக தமிழ்நாடு அரசின் அறக்கட்டளை 10 கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் ஏற்படுத்தப்பட்டு, அந்நிதியிலிருந்து வரும் வட்டியின் மூலம் அக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

    எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் எச்.ஐ.வி.-எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று, எச்.ஐ.வி.-எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களை மனித நேயத்துடன் அரவணைத்து, அவர்களது தன்னம்பிக்கை வளர உதவிட வேண்டுமென்று அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச் சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #Edappadipalaniswami #AIDSDay
    எய்ட்ஸ் நோய் எதனால் பரவுகிறது. இதன் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? அவ்வாறு தாக்கினால் அதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து காண்போம்.
    உலகளவில் மருத்துவத்துக்கு சவால் விடும் நோய்களில் எய்ட்ஸ் நோயும் ஒன்று. பொதுவாக பால்வினை நோய்களை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால் எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியாது. இந்நோய் கிருமிகளை அழிக்க இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் இந்நோய் குறித்த விழிப்புணர்வு அவசியம் தேவை.

    எய்ட்ஸ் நோய் எதனால் பரவுகிறது. இதன் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? அவ்வாறு தாக்கினால் அதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை ஏ.ஆர்.டி. மைய மருத்துவ அலுவலர் மாலா கூறியதாவது:-

    மனிதனின் எதிர்ப்பு சக்தியை குறைக்கக்கூடிய வைரஸ் கிருமிகளுக்கு எச்.ஐ.வி. என்று பெயர். இந்த கிருமிகளின் தாக்கத்தால் உண்டாகும் நோய் தான் எய்ட்ஸ் ஆகும். பொதுவாக எய்ட்ஸ் நோய் 4 வழிகளில் பரவுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவு, எச்.ஐ.வி. கிருமி உள்ள ஒருவரின் ரத்தத்தை பிறருக்கு செலுத்துதல், கருவுற்று இருக் கும் தாயின் மூலம் பிறக்கப் போகும் குழந்தைக்கும் பரவுதல், சுத்தம் செய்யப்படாத ஊசிகளை மீண்டும், மீண்டும் பயன்படுத்துதல் ஆகிய 4 காரணங்களால் எய்ட்ஸ் நோய் பரவுகிறது.

    பொதுவாக ரத்தத்தை நன்கு பரிசோதித்த பிறகுதான் அந்த ரத்தம் பிறருக்கு செலுத்தப்படுகிறது. அதேபோல் ஒரு முறை பயன்படுத்திய ஊசியை இப்போதெல்லாம் மீண்டும் பயன்படுத்துவதில்லை. அதனால் இந்த 2 முறைகளிலும் எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு குறைந்து விட்டது. மேலும் கருவுற்று இருக்கும் தாயின் மூலம் எய்ட்ஸ் பரவுதலும் குறைக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பற்ற உடலுறவால் மட்டுமே எய்ட்ஸ் நோய் இப்போது பரவி வருகிறது.

    பொதுவாக ஒருவருக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்று ஏற்பட்டவுடன் ரத்த பரிசோதனை செய்தால் அந்த ரத்தத்தில் கிருமிகள் இருப்பது உடனே தெரியாது. அதற்கு பிறகு 3 முதல் 6 மாதங்கள் கழித்தே பரிசோதனையின் முடிவில் எச்.ஐ.வி. கிருமிகள் உள்ளது தெரியவரும். இதுதவிர ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டாலும் அவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நன்கு இருந்தால் 8 அல்லது 10 ஆண்டுகள் வரை எய்ட்ஸ் நோய் குறித்த அறிகுறியோ, தொந்தரவோ இருக்காது. அதன்பிறகே எய்ட்ஸ் குறித்த பிரச்சினைகள் வெளியில் தெரியும்.

    அதேபோல் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வந்தாலும் அது சாதாரண காய்ச்சல் என்று நினைக்க கூடாது. இதுதவிர அடிக்கடி சுவாசக்கோளாறு, பல்வேறு தொந்தரவுகள் வந்தாலும் அதற்கு சிகிச்சை எடுக்கும்போது அதனுடன் எச்.ஐ.வி. பரிசோதனையையும் அவசியம் செய்ய வேண்டும்.

    எச்.ஐ.வி. கிருமி பாதிப்பால் தொடர்ந்து இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடலின் எடை குறைதல், தோல் வியாதிகள், பிறப்பு உறுப்புகளில் அரிப்பு, புண் ஏற்படுதல், கை, கால் இடுக்குகள் மற்றும் கழுத்தில் கட்டி உருவாகுதல், வாயில் புண் உண்டாகுதல், நுரையீரல் பாதிப்பு, இதயத்தை சுற்றியுள்ள சதை பகுதி பாதிப்பு, மூளை, சிறுநீரகம், கண், உணவு குழாய் பாதிப்பு உள்பட அனேக நோய்களின் அறிகுறிகள் தோன்றும்.

    இதுதவிர பெண்களாக இருந்தால் மேற்கூறிய அனைத்து அறிகுறிகளுடன் கர்ப்பப்பை புற்றுநோயும் கூடுதலாக வர வாய்ப்புண்டு.

    பொதுவாக ஒருவரின் ரத்தத்தில் எச்.ஐ.வி. வைரஸ் கிருமி தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய முதலில் எலிசா பரிசோதனை செய்ய வேண்டும். அதில் கிருமி தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டால் சி.டி-4 பரிசோதனை என்னும் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை குறித்த பரிசோதனை செய்ய வேண்டும்.

    அதன்பிறகு வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையில் ரத்தத்தில் உள்ள எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கை தெரியவரும்.



    எய்ட்ஸ் நோயாளிகள் ஏ.ஆர்.டி என்னும் கூட்டு மருந்துடன் கூடிய வாழ்நாள் சிகிச்சையை தொடங்க வேண்டும். இந்த கூட்டு மருந்தில் 2 நிலை மாத்திரைகள் உள்ளன. முதலில் 1-வது நிலை மாத்திரைகள் வழங்கப்படும். அந்த மாத்திரைக்கு எய்ட்ஸ் கிருமி கட்டுப்படவில்லையென்றால் அடுத்ததாக 2-ம் நிலை மாத்திரைகள் வழங்கப்படும்.

    இவ்வாறு சிகிச்சையை தொடங்கியவர்களுக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை சி.டி-4 பரிசோதனை செய்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? என்றும், வைரஸ் பரிசோதனை செய்து வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா? என்றும் பார்க்க வேண்டும்.

    அதேபோல் கருவுற்று இருக்கும் பெண்ணுக்கு எய்ட்ஸ் கிருமி தாக்குதல் இருந்தால் பிறக்கப்போகும் குழந்தைக்கும் எய்ட்ஸ் நோய் தாக்குதல் இருக்கும். இதனை தவிர்க்க அரசு மருத்துவமனைகளில் பெண்களுக்கு கர்ப்பகால சிகிச்சைகள் தொடங்கும் போதே, அந்த பெண்ணுக்கும், கணவனுக்கும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த பரிசோதனையில் யாருக்கு எய்ட்ஸ் கிருமி தொற்று உள்ளது என்று தெரிந்து விடும். அப்போதே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

    இதுதவிர அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு 1½ வயது வரை 3 முறை ரத்த பரிசோதனைகள் செய்யப்படும். குழந்தை பிறந்த 45-வது நாளில் முதல் ரத்த பரிசோதனையும், 6 முதல் 1 வருடத்துக்குள் 2-வது முறையும், 1½ வயதில் 3-வது முறையாக ரத்த பரிசோதனை செய்து எய்ட்ஸ் தாக்குதல் உள்ளதா? என்பது கண்டறியப்படும். அவ்வாறு கிருமி தொற்று உள்ளது என கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த குழந்தைக்கு சிகிச்சை தொடங்கப்படும்.

    பொதுவாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் ஐ.சி.டி.சி என்னும் நம்பிக்கை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்ளலாம். அங்கு இருக்கும் ஆலோசகர்களிடம் இந்நோய் குறித்த விவரங்களை முற்றிலும் அறிந்து கொள்ளலாம். இந்நோய் குறித்து சிறிய அளவில் அறிகுறிகள் தோன்றினாலும் கண்டிப்பாக எச்.ஐ.வி. பரிசோதனை செய்ய வேண்டும்.

    வாழ்வில் ஒருமுறை கூட எச்.ஐ.வி. பரிசோதனை செய்யாதவர்களுக்கு கண்டிப்பாக எச்.ஐ.வி பரிசோதனை செய்ய வேண்டும். அதனால் இந்நோயால் ஏற்படும் இறப்பை தடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதேபோல் திண்டுக்கல், பழனி அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டுவரும் ஏ.ஆர்.டி. மையத்தில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு வழங்கப்படும் மாத்திரைகளுடன் நல்ல சத்தான, உடலுக்கு ஒத்துக்கொள்ளும் எந்த உணவையும் உண்ணலாம். அதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு வாழ்நாள் அதிகரிக்கும்.

    எய்ட்ஸ் நோய் தாக்கிய ஒருவரை தொடுவதாலோ, அவருடன் நெருங்கி பழகுவதாலோ, அவரின் உடைகளை உடுத்துவதாலோ, அவர் இருமும், தும்மும் போதோ, அவருடன் இருப்பதாலோ, அவர்கள் பயன்படுத்திய கழிவறையை பிறர் பயன்படுத்தும் போதோ எய்ட்ஸ் நோய் பரவாது. அதனால் எய்ட்ஸ் நோயாளிகளுடன் பயமின்றி பழகலாம். மேலும் அவர்களை அலட்சியப்படுத்தாமல், அன்பு காட்டி, ஆதரவு கொடுக்க வேண்டும்.

    சமூகத்தால் அவர்களை ஒதுக்கக்கூடாது. எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்பதால் வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும். நாள்தோறும் மாத்திரைகளை தவறாமல் உண்ண வேண்டும். இதுதவிர பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறையை பயன்படுத்துவதும், நல்லொழுக்கமான வாழ்வும் இந்நோயிலிருந்து தப்பிக்க வழிவகுக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    ×