search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem District"

    • 18-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 வரை கணபதி ஹோமம், அபிஷேகம் நடைப்பெற்று ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்துப்படி நடைப்பெற உள்ளது.
    • இரவு 8 மணியளவில் தினமும் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி புறப்பாடு நடைப்பெறும்.

    சேலம்:

    சேலம் ராஜகணபதி கோவிலில் வருகிற 18-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. 18-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 வரை கணபதி ஹோமம், அபிஷேகம் நடைப்பெற்று ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்துப்படி நடைப்பெற உள்ளது.

    இந்த விழாவை முன்னிட்டு 18-ந் தேதி முதல் 12 நாட்களுக்கு காலை, மாலையில் மூலமந்திர ஹோமம், லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 12 மணி வரை மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற உள்ளது.

    இரவு 8 மணியளவில் தினமும் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி புறப்பாடு நடைப்பெறும். மேலும் மாலை வேலையில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளது.

    12-ம் நாள் காலை 7 மணி முதல் 10 மணி வரை மஞ்சள் நீராட்டு, வசந்த உற்சவமும், காலை 10 மணி முதல் 12.30 மணி வரை உற்சவ ஆஸ்தான பூஜைகள், 1008 லிட்டர் பால் அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து புஷ்பாஞ்சலி மற்றும் அன்னதானம் நடைப்பெற உள்ளது.

    எனவே அனைத்து பக்கதர்கள், பொதுமக்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்று இறைவன் அருள் பெற வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா, அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    7 பேர் ஓய்வு

    சேலம்:

    சேலம் மாநகர காவல் துறையில் இன்று ஒரே நாளில் போலீஸ் துணை கமிஷனர் உட்பட 7 பேர் ஓய்வு பெறுகிறார்கள்.

    அதன்படி, சேலம் மாநகர துணை கமிஷனர் குணசே கரன், மாநகர போலீஸ் கமிஷனரின் நேர்முக உதவி யாளர் மாலதி, நுண்ணறிவு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், அம்மாபேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமி முத்து, கொண்ட லாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேக ரன், நில அபகரிப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அமீர்ஜான், போக்குவரத்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் அழகுவேல் ஆகி யோர் ஓய்வு பெறுகின்றனர். 

    • கடந்த 2022-ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது
    • நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசருக்கு தகவல்

    சேலம்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பாப்பிசெட்டி பள்ளி அடுத்த ராசன்ன பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் மகன் இனோ ஆண்ட்ரூஸ் (வயது 41). இவர் மீது கடந்த 2013-ம் ஆண்டு ஈமு கோழி பண்ணை பண மோசடி தொடர்பாக நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    நாமக்கல் கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து கடந்த 2022-ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதன்பின்னர் தலைமறை வான இவரை நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் தலைமை யிலான போலீசார் சீலநா யக்கன்பட்டி பகுதியில் உள்ள விடுதிகளில் வழக்க மான சோதனையை மேற்கொண்டனர். அப்போது ஒரு விடுதியில், நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வரும் இனோ ஆண்ட்ரோஸ் இருப்பது தெரியவந்தது.

    அதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் இன்று காலை சேலத்திற்கு வந்து இனோ ஆண்ட்ரூசை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    • பக்ரீத் பண்டிகை விடுமுறையையொட்டி, நேற்று ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
    • வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும்

    அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சமீப காலமாக கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள், வார விடுமுறை, பண்டிகை நாட்களில் ஏற்காட்டுக்கு அதிகப்படி யான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர். குடும்பத்துடன் காட்டேஜ், ஓட்டல், விடுதி களில் தங்கி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, மான்பூங்கா உள்ளிட்ட வற்றை சுற்றிப் பார்த்து செல்கின்றனர். மேலும், ஏற்காடு படகு இல்லம், சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடிஸ்சீட் காட்சி முனையம் போன்ற இடங்களுக்கு சென்று இயற்கை அழகை ரசிக்கின்றனர்.

    பக்ரீத் பண்டிகை விடுமுறையையொட்டி, நேற்று ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால், கடைகளில் வியாபாரம் களை கட்டியது. சாலை யோர கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்தது.அதே சமயம் ஏற்காட்டில் நேற்று காலை முதலே கடும் பனி மூட்டம் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இதனால், மலைப்பாதையில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. கொண்டை ஊசி வளைவுகளில் பனி மூட்டமும் சூழ்ந்தது.நண்பகல் வேளையில் படகு இல்லம் மற்றும் ஏரி பகுதி, ஒண்டிக்கடை

    ரவுண்டானா ஆகிய பகுதிகளில் சாலை தெரியாத அளவிற்கு பனிமூட்டம் படர்ந்திருந்தது. இதனால் அவ்வழியே சென்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.

    ஏற்காட்டில் நிலவிய இந்த இதமான சீதோஷண நிலையால் சுற்றுலா வந்த பயணிகள் மகிழ்ச்சிய டைந்தனர். இதேபோல், அருகில் உள்ள வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்தனர். 

    • விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விடைத்தாள் மற்றும் கேள்விக்கான பதில் ஆகியவற்றை பார்வை யிடலாம்.
    • விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விடைத்தாள் மற்றும் கேள்விக்கான பதில் ஆகியவற்றை பார்வை யிடலாம்.

    சேலம்:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி), மல்டி டாஸ்கிங் (தொழில் நுட்பம் அல்லாத) பணியாளர்கள் மற்றும் ெஹவில்தார் பணிகளுக்கான தேர்வு- 2022 அறிவிப்பு சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து தேர்வு நாடு முழுவதும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில், சேலம், நாமக்கல்லை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் எழுதினர். விண்ணப்பதாரர்கள் எழுதிய விடைத்தாள் மற்றும் கேள்விக்கான அதிகாரபூர்வ விடைகள் தேர்வாணையம் வெளி யிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விடைத்தாள் மற்றும் கேள்விக்கான பதில் ஆகியவற்றை பார்வை யிடலாம். இந்த வசதி அடுத்த மாதம் 4-ந்தேதி மாலை 5 மணி வரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு காலக்கெடு கிடையாது.

    தேர்வாணைய இணையதளத்தில் உள்ள இவற்றின் லிங்க் வசதியை பயன்படுத்தி விண்ணப்ப தாரர்கள் தங்களுக்குரிய பதிலளிப்புத் தாள்களுடன் தற்காலிக விடை குறிப்புகளை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

    • கள்ளி வகையை சேர்ந்த தாவரம், ‘பிரம்ம கமலம்
    • இலையை வெட்டி வைத்தாலே வளரும் தன்மை

    வாழப்பாடி:

    ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய பிரம்ம கமலம் மலர்கள், வாழப்பாடியில் ஒரு வீட்டு தோட்டத்தில் பூத்து குலுங்கியது. எபிபைலம் ஆக்ஸிபெட்டலம் எனும் தாவரவியல் பெயர் கொண்ட கள்ளி வகையை சேர்ந்த தாவரம், 'பிரம்ம கமலம்' என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவை தாயகமாக கொண்ட இத்தாவரம், இந்தியாவிலும் பரவலாக காணப்படுகிறது. ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வெண்ணிறத்தில் நள்ளிரவு நேரத்தில் பூக்கும் அதிசய தன்மையும், தகவமைப்பும் கொண்ட இத்தாவரத்தின் பூக்களுக்குள், பிரம்மா கடவுள் உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.ஆன்மீக உணர்வை ஏற்படுத்தும் தோற்றத்திலும், மருத்துவ குணத்தையும் கொண்டதால், 'பிரம்ம கமலம்' பூக்கள் சிறப்பு இடத்தை பெற்றுள்ளது.

    இலையை வெட்டி வைத்தாலே வளரும் தன்மையை கொண்டுள்ள பிரம்ம கமலம் மலர்களை, சமீப காலமாக தமிழகத்திலும் பரவலாக விரும்பி வளர்த்து வருகின்றனர். மேலும் இந்த அதிசய பூக்களை தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.சேலம் மாவட்டம் வாழப்பாடி சுப்பராயர் தெருவைச் சேர்ந்த லட்சுமி தனபால், பிரம்ம கமலம் செடியை, ஓசூரில் இருந்து வாங்கி வந்து, 2 ஆண்டுகளாக வீட்டு தோட்டத்தில் வளர்த்து வருகிறார்.

    இதில் தற்போது மலர்கள் பூத்துள்ளது. இந்த மலர்களை காண இப்பகுதி மக்கள் ஆர்வம் காட்டினர். மேலும் இந்த பிரம்ம காலம் மலர்களை வாழப்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். 

    சேலம் மாவட்டத்தில் வீரகனூர், கெங்கவல்லி உள்பட பல பகுதிகளில் 2-வது நாளாக கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் வீரகனூர், கெங்கவல்லி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    2-வது நாளாக நேற்றிரவு வீரகனூர், கெங்கவல்லி உள்பட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. சங்ககிரி தம்மம்பட்டி, பெத்த நாயக்கன் பாளையம், கரியகோவில் ஆகிய பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடிந்தது.

    இன்று காலையும் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதுடன் வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது. சேலம் மாவட்டத்தில் பெய்யும் இந்த தொடர் மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

    வீரகனூரில் 46 மி.மீ, கெங்கவல்லி 45.4, சங்ககிரி 14.3, தம்மம்பட்டி 11.2, பெத்தநாயக்கன் பாளையம் 7, கரியகோவில் 6, வாழப்பாடி 5, எடப்பாடி 4, ஆத்தூர் 2.4, ஆனைமடுவு 2, சேலம் 0.4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 143.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    சேலம் பாராளுமன்ற தொகுதியில் 161 பதட்டமான வாக்குச்சாவடிகள் என்றும் மாவட்டம் முழுவதும் 240 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்றும் மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார். #LSPolls #SalemDistrict #CollectorRohini
    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளது. சேலம் பாராளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 92 ஆயிரத்து 487 வாக்காளர்கள் உள்ளனர்.

    583 மையங்களில் 1809 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. சேலம் பாராளுமன்ற தொகுதியில் 161 பதட்டமான வாக்குச்சாவடிகள் என்றும் மாவட்டம் முழுவதும் 240 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

    தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் புகார்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், உதவு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 4257020-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொதுமக்கள் தேர்தல் மீறல்கள் தொடர்பான புகார்களை சி விஜில் என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் பதுவு செய்யலாம்.

    சேலம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங்கள் கல்லூரியில் அமைக்கப்பட உள்ளது.

    தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும், அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தபபட உள்ளது.

    பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்பதை அறிந்துது கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண். 1950-க்கு நேரடியாக அழைத்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    அரசியல் கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது, பொது சுவர்களில் அனுமதி இல்லாமல் விளம்பரம்செய்யக் கூடாது, ஏற்கனவே செய்யப்பட்ட விளம்பரங்களை அழிக்கும் செலவு அரசியல் கட்சியினர் தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.

    அரசு புதுத் திட்டங்களை தொடங்கக் கூடாது, பழைய திட்டங்களை விரிவுபடுத்தக் கூடாது, பேனர்கள் வைக்கக் கூடாது. பதட்டமான வர்குச் சாவடிகளுக்கு துணை ராணுவம் அல்லது மத்திய பாதுகாப்பு படையை அழைப்பது குறித்து ஆலோசனை செய்து தேர்தல் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.

    மத வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது, இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணி வரை கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது, பள்ளிகள் அருகில் பிரசாரம் செய்யக் கூடாது. 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும். அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிதிகள் மட்டும் ரூ. 1 லட்சம் வரை எடுத்துச் செல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #SalemDistrict #CollectorRohini
    சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இதனால் கடந்த சில நாட்களாக சேலத்தில் வெயில் சுட்டெரித்தது. மதிய நேரங்களில் வெயில் மேலும் அதிக அளவில் வாட்டி வதைத்ததால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கினர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    கடந்த 23-ந் தேதி 100.1 டிகிரியாக இருந்த வெயில் 24-ந் தேதி 101.2 டிகிரியாகவும், 25-ந் தேதி 102.2 டிகிரியாகவும், 26-ந் தேதி 101.9 டிகிரியும் பதிவானது. நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 100 டிகிரியாக பதிவானது.

    இதனால் இனி வரும் நாட்களில் வெயிவின் தாக்கம் குறையுமா? அல்லது வெயிலின் தாக்கம் அதிகரிக்குமா? என்ற அச்சத்தில் பொது மக்கள் இருந்தனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

    இந்த மழை சேலம் மாநகர், ஓமலூர், ஏற்காடு, தீவட்டிப்பட்டி, காமலாபுரம் உள்பட பல பகுதிகளில் பரவலாக பெய்தது.

    ஏற்காட்டில் அதிகாலை தொடங்கிய மழை காலை வரை நீடித்தது. சேலம் மாநகரில் கலெக்டர் அலுவலகம், 4 ரோடு, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன் உள்பட பல பகுதிகளில் காலை 9 மணியளவில் மழை பெய்தது. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் குடை பிடித்த படி சென்றனர்.

    இந்த மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதுடன் ரம்மியமான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக வெயிலில் தவித்த மக்களுக்கு இந்த மழை சற்று நிம்மதியாக இருந்தது. மேலும் இந்த மழை தொடருமா? என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தங்கள் தாகத்தை தீர்க்க பழக்கடை, கரும்பு ஜூஸ் கடைகளை நாடி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று வெயில் வாட்டி வதைத்தது. உடலில் நெருப்பை அள்ளி போட்டதை போல வெயில் சுட்டெரித்தது. இதனால் இரவு நேரம் கடும் புழுக்கமாக உள்ளது.

    இதைபோல் இன்றும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. சாலையில் நடந்து சென்றவர்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டனர். வீடுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்விசிறியை பயன்படுத்தினால் அனல் காற்றாக வீசுகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.

    வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ள பலர் குடை பிடித்தபடியும், மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள் துப்பட்டாவில் தலை மற்றும் முகத்தை மூடியபடியும் சென்றனர்.

    பொதுமக்கள் தங்கள் தாகத்தை தீர்க்க பழக்கடை, கரும்பு ஜூஸ் கடை, இளநீர் கடை, மோர் கடை, கம்பங்கூழ், கேழ்வரகு கடை, சர்பத் கடை போன்ற கடைகளை நாடி வருகின்றனர்.

    இதனால் ஏற்காடு அடிவாரம் செல்லும் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பழைய பஸ் நிலையம், கடைவீதி, புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரமாக இருக்கும் கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் விற்பனை களை கட்டி வருகிறது.

    நுங்குகள், வெள்ளரிக்காய், தர்பூசணி ஆகியவற்றை விவசாயிகள் கலெக்டர் அலுவலக சாலை ஓரமாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    சேலம்-கோவை, சேலம்-சென்னை, சேலம்-பெங்களூரு உள்ளிட்ட நெடுஞ்சாலையோரமாக இருக்கும் தள்ளுவண்டி கடைகளில் இளநீர் விற்பனை சூடுபிடித்தது.
    சேலம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர். #DoctorsProtest
    சேலம்:

    அரசு டாக்டர்கள் காலமுறை ஊதியம் மற்றும் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் புகார் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் 4-ந் தேதியான இன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் வெளி நோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

    இதையொட்டி சேலம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி உள்பட பல பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவை அரசு டாக்டர்கள் புறக்கணித்தனர்.

    ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவை டாக்டர்கள் முற்றிலும் புறக்கணித்ததால் காய்ச்சல், தலை வலிக்கு கூட சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர். இதனால் சில அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவு வெறிச்சோடி காணப்பட்டது.

    சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்களை வைத்து புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதனால் காய்ச்சல், தலைவலி உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பலர் சிகிச்சை பெறாமல் திரும்பி சென்றதுடன் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்றனர். இதனால் தனியார் ஆஸ்பத்திரிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

    இது குறித்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல முறை போராட்டம் நடத்தியும் அரசு கண்டு கொள்ளவில்லை. இதனால் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக சங்க தலைமை நிர்வாகிகள் முடிவுபடி போராட்டம் தீவிரம் அடையும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ஜனநாயக தமிழ்நாடு டாக்டர்கள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. #DoctorsProtest
    சேலம் மாவட்டத்தில் 24,318 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
    சேலம்:

    உலக எய்ட்ஸ் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலகம் மூலம் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு நடந்தது. இதை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி நின்றனர்.

    அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேலாளர்(பொறுப்பு) அருணாசலம் வரவேற்றார். அரசு ஆஸ்பத்திரி டீன் ராஜேந்திரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர்(பொறுப்பு) சத்யா, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எச்.ஐ.வி. கிருமியின் அளவை கணக்கீடு செய்யும் கருவியை கலெக்டர் ரோகிணி அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் மிக அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டத்தில் ஒன்றாக சேலம் மாவட்டமும் திகழ்கிறது. இருப்பினும் அவர்களுக்கான சிறப்பான மருத்துவ சிகிச்சை, எச்.ஐ.வி. தடுப்பு பணி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக செய்து வருகிறோம். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள எச்.ஐ.வி. கிருமியின் அளவினை கணக்கீடு செய்யும் கருவி மூலம் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களில் ஏ.ஆர்.டி. மையங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

    சேலம் மாவட்டத்தில் இதுவரை 24,318 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சேலம் மாவட்டத்தில் 94,858 பேர் எச்.ஐ.வி. பரிசோதனையும், ஆலோசனையும் பெற்றுள்ளனர். இதில் 363 பேருக்கு புதியதாக எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 15 கர்ப்பிணிகள் அடங்குவர்.

    இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அன்பு செலுத்தி அரவணைப்பதன் மூலம் சமூக புறக்கணிப்பு இல்லாமையை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மேற்பார்வை யாளர் நல்லதம்பி நன்றி கூறினார்.
    ×