search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டுத் தோட்டத்தில் பூத்த பிரம்ம கமலம் பூக்கள்
    X

    வீட்டு தோட்டத்தில் பூத்த பிரம்ம கமலம் மலர்கள்.

    வீட்டுத் தோட்டத்தில் பூத்த பிரம்ம கமலம் பூக்கள்

    • கள்ளி வகையை சேர்ந்த தாவரம், ‘பிரம்ம கமலம்
    • இலையை வெட்டி வைத்தாலே வளரும் தன்மை

    வாழப்பாடி:

    ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய பிரம்ம கமலம் மலர்கள், வாழப்பாடியில் ஒரு வீட்டு தோட்டத்தில் பூத்து குலுங்கியது. எபிபைலம் ஆக்ஸிபெட்டலம் எனும் தாவரவியல் பெயர் கொண்ட கள்ளி வகையை சேர்ந்த தாவரம், 'பிரம்ம கமலம்' என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவை தாயகமாக கொண்ட இத்தாவரம், இந்தியாவிலும் பரவலாக காணப்படுகிறது. ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வெண்ணிறத்தில் நள்ளிரவு நேரத்தில் பூக்கும் அதிசய தன்மையும், தகவமைப்பும் கொண்ட இத்தாவரத்தின் பூக்களுக்குள், பிரம்மா கடவுள் உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.ஆன்மீக உணர்வை ஏற்படுத்தும் தோற்றத்திலும், மருத்துவ குணத்தையும் கொண்டதால், 'பிரம்ம கமலம்' பூக்கள் சிறப்பு இடத்தை பெற்றுள்ளது.

    இலையை வெட்டி வைத்தாலே வளரும் தன்மையை கொண்டுள்ள பிரம்ம கமலம் மலர்களை, சமீப காலமாக தமிழகத்திலும் பரவலாக விரும்பி வளர்த்து வருகின்றனர். மேலும் இந்த அதிசய பூக்களை தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.சேலம் மாவட்டம் வாழப்பாடி சுப்பராயர் தெருவைச் சேர்ந்த லட்சுமி தனபால், பிரம்ம கமலம் செடியை, ஓசூரில் இருந்து வாங்கி வந்து, 2 ஆண்டுகளாக வீட்டு தோட்டத்தில் வளர்த்து வருகிறார்.

    இதில் தற்போது மலர்கள் பூத்துள்ளது. இந்த மலர்களை காண இப்பகுதி மக்கள் ஆர்வம் காட்டினர். மேலும் இந்த பிரம்ம காலம் மலர்களை வாழப்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    Next Story
    ×