search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "some places"

    சேலம் மாவட்டத்தில் வீரகனூர், கெங்கவல்லி உள்பட பல பகுதிகளில் 2-வது நாளாக கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் வீரகனூர், கெங்கவல்லி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    2-வது நாளாக நேற்றிரவு வீரகனூர், கெங்கவல்லி உள்பட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. சங்ககிரி தம்மம்பட்டி, பெத்த நாயக்கன் பாளையம், கரியகோவில் ஆகிய பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடிந்தது.

    இன்று காலையும் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதுடன் வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது. சேலம் மாவட்டத்தில் பெய்யும் இந்த தொடர் மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

    வீரகனூரில் 46 மி.மீ, கெங்கவல்லி 45.4, சங்ககிரி 14.3, தம்மம்பட்டி 11.2, பெத்தநாயக்கன் பாளையம் 7, கரியகோவில் 6, வாழப்பாடி 5, எடப்பாடி 4, ஆத்தூர் 2.4, ஆனைமடுவு 2, சேலம் 0.4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 143.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்த நிலையில், இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 98 டிகிரி வெப்பநிலை காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி மழை அளவு விவரம் வருமாறு:-

    புதுக்கோட்டை, திருப்பத்தூர், தாராபுரம், கோவிலான்குளம், அருப்புக்கோட்டை, கோத்தகிரி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 3 சென்டி மீட்டர் மழையும், பெரியார், இரணியல், சிவகாசி, தாளவாடி, திருமயம், ராயக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    தளி, பாப்பிரெட்டிபட்டி, குளச்சல், சூலூர், பவானிசாகர், பீளமேடு, தக்கலை, சத்தியமங்கலம், குடவாசல், அரவக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. 
    ×