என் மலர்
நீங்கள் தேடியது "Honeymoon"
- இந்தூரைச் சேர்ந்த ராஜா (29) மற்றும் சோனம் (24) இந்த ஆண்டு மே 11 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
- ஹோம்ஸ்டேயில் இருந்து வெளியே வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு காணாமல் போனது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மேகாலயவின் சோஹ்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 790 பக்க குற்றப்பத்திரிகையை SIT சமர்ப்பித்தது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா (29) மற்றும் சோனம் (24) இந்த ஆண்டு மே 11 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
இருப்பினும், சோனம் ஏற்கனவே தங்கள் குடும்பத்தின் தளபாடங்கள் தொழிலில் கணக்காளராக பணிபுரியும் ராஜ் குஷ்வாஹாவை காதலித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
திருமணத்திற்குப் பிறகு தேனிலவுக்காக மேகாலயா சென்றிருந்த இந்த ஜோடி, மே 23 அன்று ஒரு ஹோம்ஸ்டேயில் இருந்து வெளியே வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு காணாமல் போனது.
ஜூன் 2 ஆம் தேதி ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
அதுவரை தலைமறைவாக இருந்த சோனம், ஜூன் 8 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் போலீசில் சரணடைந்தார். அவருக்கு உதவிய நண்பர்களை போலீசார் முன்னதாக கைது செய்தனர்.
ஜூன் 11 ஆம் தேதி, விசாரணையில் சோனம் தனது காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தனது கணவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
- ஒரு பெண் என்பதால் அடக்கமான வாழ்க்கை வாழ வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளார்.
- விட்டு வெளியேறவோ, மிகச் சிலரைத் தவிர வேறு யாரிடமும் பேசவோ அனுமதிக்கவில்லை. அவரது வாழ்க்கை மிகவும் கண்டிப்பானதாக இருந்தது.
மேகலயாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதான சோனம் என்ற பெண்ணின் வழக்கு தேசிய அளவில் கவனம் பெற்று வருகிறது.
சோனமின் சகோதரர், தனது தங்கையுடனான உறவுகளை முறித்துக்கொண்டதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டு அவளை தூக்கிலிடவேண்டும் என்றும் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியும் வைரலாகி வருகிறது.
யார் இந்த சோனம்?
24 வயதான சோனம், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள குஷ்வாஹா நகரில் ஒரு கிராமப்புற குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை தேவி சிங் ரகுவன்ஷி, 25 ஆண்டுகளாக ஒட்டுப்பலகை (plywood) தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
MBA பட்டம் பெற்று, குடும்பத்தின் கட்டுப்பாடுகளை மீறி வாழ வேண்டும் என்பதே சோனமின் கனவாக இருந்தது. ஆனால், தந்தை தேவி சிங், சோனம் ஒரு பெண் என்பதால் அடக்கமான வாழ்க்கை வாழ வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளார்.
சோனம், வீட்டை விட்டு வெளியேறவோ, மிகச் சிலரைத் தவிர வேறு யாரிடமும் பேசவோ அனுமதிக்கவில்லை. அவரது வாழ்க்கை மிகவும் கண்டிப்பானதாக இருந்தது.
சோனம் தனது வாழ்க்கையை வேலை மற்றும் வீடு என இரண்டிற்குள் சுருக்கிக் கொண்டார். பெற்றோரின் கட்டுப்பாட்டால், சோனம் தனது குடும்பத்தின் பிளைவுட் தொழிற்சாலையிலேயே வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சோனமின் சகோதரர் கோவிந்தின் முயற்சியால் குடும்பத் தொழில் மேம்பட்டாலும், சோனமின் மீதான கட்டுப்பாடுகள் தளரவில்லை. அவரது MBA படிக்கும் ஆசை நிறைவேறாமலேயே போனது.
இந்தக் காலகட்டத்தில்தான் சோனம் தனது தந்தையின் தொழிற்சாலையில் பில்லிங் பிரிவில் பணிபுரிந்த ராஜ் குஷ்யாவை சந்தித்தார். முதலில் அவர்களின் அறிமுகம் வணிக ரீதியானது என்றாலும், நாளடைவில் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இருப்பினும் கண்டிப்பான சூழலால் தனது உறவை குடும்பத்தினரிடம் இருந்து மறைத்தார்.
இந்தச் சூழலில்தான், சோனமிற்கு அவரது விருப்பத்தை கேட்காமலேயே திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். சமூக திருமண வரன் பார்த்தல் அமைப்பு மூலம் ராஜா ரகுவன்ஷி குடும்பத்தை அவர்கள் தொடர்பு கொண்டனர்.
இரு குடும்பங்களுக்கும் இடையே ஏற்கனவே அறிமுகம் இல்லை. இரு குடும்பங்களின் அந்தஸ்து உள்ளிட்ட பயோடேட்டா ஒற்றுமைய மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டது.
கல்வி நிறுவனங்களுக்கு வாடகை பேருந்துகளை வழங்கும் "ரகுவன்ஷி டிரான்ஸ்போர்ட்" என்ற குடும்ப நிறுவனத்தை ராஜா நடத்தி வந்தார். அவர் மூன்று சகோதரர்களில் இளையவர்.
ராஜாவின் குடும்பத்தினர் தங்கள் மகனுக்கு இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து வைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சோனமின் குடும்பத்தினர் நான்கு மாதங்களுக்குள் திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினர். மே 11 அன்று திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணத்தன்று சோனமின் முகம் மகிழ்ச்சியாக இல்லை என்பதை ராஜாவின் மாமியார் இப்போது நினைவுகூறுகிறார்.
திருமணத்திற்குப் பிறகு, சோனம் சாப்பிடுவதற்காக மட்டுமே மேலறைக்கு வந்ததாகவும், குடும்பத்தில் யாரிடமும் பேசவில்லை என்றும், எப்போதும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும் ராஜாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர். அதில் யாரும் தலையிடவில்லை. சோனம் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என ராஜா குடும்பத்தினர் நினைத்துள்ளனர். அவர்கள் யாரும் சோனமை சந்தேகிக்கவில்லை, தங்கள் மகனுக்கு சோனம் சரியான மனைவி என்று நம்பினர்.
திருமணத்திற்குப் பிறகு பயணம் செய்வது குறித்து குடும்பத்தில் எந்தப் பேச்சும் இல்லை. ஆனால், சோனம் ஒரு பயணம் செல்ல விரும்புவதாகக் கூறினார். முதலில் மறுத்த ராஜா, சோனமின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து சம்மதித்தார். பயணத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளையும் சோனம் தான் முன்பதிவு செய்துள்ளார்.
பயணத்தின்போது விலையுயர்ந்த நகைகளை அணிய வேண்டும் என்றும் சோனம் வலியுறுத்தியுள்ளார். அப்போதும் ராஜாவின் குடும்பத்தினர் எதையும் சந்தேகிக்கவில்லை. ராஜாவின் மரணம் குறித்து இறுதியில் அறிந்ததும், குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
- ராஜா ரகுவன்சியின் சடலம் ஜூன் 2ம் தேதி கண்டெடுக்கப்பட்டது .
- மனைவி சோனம் உத்தரப்பிரதேசத்தில் போலீசிடம் சரணடைந்தார்
மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (29) மற்றும் அவரது மனைவி சோனம் ஆகியோர் மேகலாயாவுக்கு தேனிலவு சென்றுள்ளனர். இந்நிலையில், மே 23ம் தேதி முதல் இருவரையும் காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதனிடையே ராஜா ரகுவன்சியின் சடலம் ஜூன் 2ம் தேதி , வெய்சாவ்டோங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது .
இதனையடுத்து, மனைவி சோனம் உத்தரப்பிரதேசத்தில் போலீசிடம் சரணடைந்தார். மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
- கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா ரகுவன்ஷி என உறவினர்கள் உறுதி செய்தனர்.
இந்தூர்:
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜா ரகுவன்ஷி(வயது 30). இவருக்கும் சோனம் ரகுவன்ஷி(27) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது, கடந்த மாதம் 23-ந் தேதி மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள சோஹ்ரா பகுதியில் தேனிலவு கொண்டாட பயணம் மேற்கொண்டனர். முதலில் ஷில்லாங் சென்ற அவர்கள், அங்கிருந்து இரு சக்கர வாகனம் வாடகைக்கு எடுத்துக் கொண்டு சோஹ்ராவிற்கு சென்றனர். கிழக்கு காசி மலை மாவட்டத்தில், தொடர்மழை பெய்யும் சிரபுஞ்சிக்கு சென்றனர். அங்குள்ள நான்கிரியாட் கிராமத்தில் விடுதியில் தங்கி தேனிலவை கொண்டாடினர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை, அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் வாடகைக்கு எடுத்த இரு சக்கர வாகனம், ஓஸ்ரா மலைப் பகுதியில் உள்ள சோஹ்ரா ரிம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அதனால் அவர்கள் ட்ரெக்கிங் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்பட்டது. தகவலறிந்த மேகாலயா போலீசாரும் உள்ளூர் மக்களும் இணைந்து தீவிர தேடுதல் பணியைத் தொடங்கினர். இந்தூர் காவல் ஆணையர் சந்தோஷ் சிங், குற்றப்பிரிவு துணை ஆணையர் ராஜேஷ் குமார் மேகாலயா விரைந்து விசாரணையை துரிதப்படுத்தினர்.
மத்தியப் பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், மேகாலயா முதல்-மந்திரிகான்ராட் சங்மாவுடன் பேசி, புதுமணத் தம்பதியை கண்டுபிடிக்க உதவி கோரினார். ராஜாவின் சகோதரர் விபின் மற்றும் சோனமின் சகோதரர் கோவிந்த் ஆகியோர் இந்தூரிலிருந்து ஷில்லாங் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஓஸ்ரா மலைப் பகுதி குற்றச் செயல்களுக்கு பெயர் பெற்றது. புதுமணத் தம்பதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் சோஹ்ரா பகுதி அருவிக்கரையில், ராஜா ரகுவன்ஷி இறந்த நிலையில் உடல் பாதி சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரது கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா ரகுவன்ஷி என உறவினர்கள் உறுதி செய்தனர்.
ராஜாவின் உடலில் இருந்து இரண்டு மோதிரங்கள், ஒரு தங்கச் சங்கிலி, வளையல், பர்ஸ், மொபைல் ஆகியவற்றை காணவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே ராஜா ரகுவன்ஷி இறந்த நேரம் மற்றும் பிற தகவல்கள் தெரியவரும். போலீசார் அரிவாள் போன்ற ஆயுதத்தையும் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் ராஜா ரகுவன்ஷி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தொடர்ந்து அவரது மனைவி சோனத்தை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து பெண்ணின் வெள்ளை சட்டை, உடைந்த அலைபேசி மீட்கப்பட்டுள்ளதால், ராஜாவை கொன்ற கும்பல் சோனத்தை கடத்திச் சென்றார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். முன்னதாக தேனிலவின் போது, சோனம் தனது மாமியாருடன் தொலைபேசியில் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி பெண் உஷிலா பட்டேல் (வயது 31). இவரும் லண்டனை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளரான சந்தாரியாவும் (33) ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
இருவீட்டாரின் சம்மதத்தோடு கடந்த மாதம் 19-ந்தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் அவர்கள் தேன்நிலவுக்காக லண்டனில் இருந்து இலங்கைக்கு சென்றனர். அங்கு காலே நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருவரும் அறை எடுத்து தங்கினர். இங்கு தங்கியிருந்து பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, பின்னர் மாலத்தீவு செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் 25-ந்தேதி 2 பேருக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த வாந்தி மற்றும் கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி உஷிலா பட்டேல் பரிதாபமாக இறந்தார். உடலில் நீர்வறட்சி மற்றும் தொடர் வாந்தி காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தனது மனைவி இறப்புக்கு ஓட்டல் உணவு தான் காரணமென்றும் அவர்கள் அளித்த உணவில் ஏதோ துர்நாற்றம் வீசியதாகவும் சந்தாரியா கூறினார். ஆனால், ஓட்டல் நிர்வாகம் இதனை மறுத்துள்ளது.
இந்நிலையில் விசாரணை முடியும் வரை சந்தாரியாவை நாட்டுக்கு அனுப்ப இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சந்தாரியா கைது செய்யப்படவோ அல்லது அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவோ இல்லை என்றும், எனினும் விசாரணை முடியும் வரை அவர் இலங்கையில் தங்கி இருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.






