search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேனிலவு சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை பலி
    X

    தேனிலவு சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை பலி

    • புதுமணத்தம்பதி தனித்தனியாக குதிரையில் மாதேரான் மலை அழகை சுற்றிப்பார்த்து கொண்டு இருந்தனர்.
    • வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மும்பை:

    மகாராஷ்டிர தலைநகர் மும்பை முகமது அலி ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது காசிப் இம்தியாஸ் சேக் (வயது23). இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தனது மனைவியுடன் மும்பை அருகே உள்ள மாதேரான் மலை வாசஸ்தலத்துக்கு தேனிலவுக்கு சென்றார்.

    சம்பவத்தன்று புதுமணத்தம்பதி தனித்தனியாக குதிரையில் மாதேரான் மலை அழகை சுற்றிப்பார்த்து கொண்டு இருந்தனர்.

    முகமது காசிப் இம்தியாஸ் சேக் சென்ற குதிரை திடீரென வேகமாக ஓடத் தொடங்கியது. இதனால் அவர் நிலைதடுமாறி குதிரையில் இருந்து கீழே விழுந்தார். வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

    தேனிலவு சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை குதிரையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×