என் மலர்
நீங்கள் தேடியது "மனைவி கைது"
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் வைத்து வெங்கடசாமியை கொலை செய்தார்.
- கணவரின் பிணத்தை எடுத்துச் சென்று வனப்பகுதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்தார்.
கர்நாடகா மாநிலம் மைசூர் அடுத்த சிக்க ஹெஜ்ஜுவை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 54). விவசாயி. இவரது மனைவி சல்லாபுரி (48).
இவர்களின் கிராமத்தை சேர்ந்த சிலர் வனவிலங்குகள் தாக்கி இறந்தால் அரசிடமிருந்து அதிக அளவில் இழப்பீடு தொகை கிடைக்கும் என பேசிக்கொண்டு இருந்தனர்.
இதனைக்கேட்ட சல்லாபுரி தனது கணவரை கொலை செய்து காட்டில் வீசி விட்டால் பணம் கிடைக்கும் என ஆசைப்பட்டார்.
அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் வைத்து வெங்கடசாமியை கொலை செய்தார். கணவரின் பிணத்தை எடுத்துச் சென்று வனப்பகுதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்தார்.
பின்னர் ஹினாசுரு போலீஸ் நிலையம் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் தனது கணவரை காணவில்லை எனவும், வயலில் வேலை செய்து கொண்டு இருந்தபோது புலி அவரை கடித்துக்கொன்று வனப்பகுதியில் இழுத்துச் சென்று இருக்கலாம் என தெரிவித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடசாமியை தேடி வந்தனர். வயல்வெளியில் புலி வந்து சென்றதற்கான எந்த அடையாளமும் இல்லை.
கிராம மக்களுடன் சேர்ந்து போலீசார் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை வனப்பகுதியில் அழுகிய நிலையில் வெங்கடசாமியின் உடல் கிடந்தது.
மேலும் அவரது உடலின் தோலின் நிறம் மாறி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சல்லாபுரியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காட்டு விலங்கு தாக்கி இறந்தால் அதிக அளவு அரசிடம் இருந்து இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என நம்பி கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து, உடலை வனப்பகுதியில் வீசியதாக தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சல்லாபுரியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- கணவருக்கு கொடுத்த உணவில் 15 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார்.
- மின்சாரம் தாக்கி இறந்ததால் கரண் தேவின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் வாங்கிச் சென்ற உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர்.
டெல்லி உத்தம் நகரை சேர்ந்தவர் கரண் தேவ் (வயது 36). இவரது மனைவி சுஷ்மிதா. கரண்தேவின் உறவினர் ராகுல் (24). ராகுல் அடிக்கடி சகோதரர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
அப்போது சுஷ்மிதாவுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கரண்தேவ் வேலைக்கு சென்ற பிறகு சுஷ்மிதா ராகுலுடன் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்தார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கரண்தேவுக்கு தெரியவந்தது.
கள்ளக்காதலை கைவிடுமாறு மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்தார்.
இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட சுஷ்மிதா முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 13-ந்தேதி இரவு கணவருக்கு கொடுத்த உணவில் 15 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார். தூக்க மாத்திரை கலந்த உணவை சாப்பிட்ட கரண் தேவ் சாகாமல் மயங்கி கிடந்தார்.
சுஷ்மிதா, ராகுலுக்கு போன் செய்து தனது வீட்டிற்கு வரவழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து கரண் தேவின் உடலில் மின்சாரம் பாய்ச்சி துடிதுடிக்க கொலை செய்தனர்.
இதையடுத்து கரண் தேவை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கரண்தேவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
கரண்தேவின் உறவினர்களிடம் மின்சாரம் தாக்கியதில் கணவர் இறந்து விட்டதாக சுஷ்மிதா தெரிவித்தார். மின்சாரம் தாக்கி இறந்ததால் கரண் தேவின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் வாங்கிச் சென்ற உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர்.
இந்த நிலையில் கரண்தேவின் சகோதரர் குணால் சுஷ்மிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தார். அதில் சுஷ்மிதா ராகுலுடன் நீண்ட நேரம் அரட்டை அடித்தது தெரியவந்தது. மேலும் கணவரை கொலை செய்வது குறித்து ராகுலுடன் ஆலோசித்ததும் தெரிந்தது.
போலீசார் சுஷ்மிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராகுல் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- சுமங்கலா தனது கள்ளக்காதலன் நாகராஜூவை கடுஷெட்டிஹள்ளி உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்தார்.
- போலீசார் சுமங்கலா மற்றும் நாகராஜு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகாவில் உள்ள நோனவினகெரே அருகே உள்ள கடுஷெட்டிஹள்ளியில் வசித்து வந்தவர் சங்கரமூர்த்தி (வயது 50). இவருடைய மனைவி சுமங்கலா (43).
திப்தூர் நகரில் உள்ள கல்பதரு கல்லூரியின் பெண்கள் விடுதியில் சமையல்காரராக சுமங்கலா பணிபுரிந்து வந்தார். அதே விடுதியில் சமையல் உதவியாளராக கரடலு சாந்தே கிராமத்தை சேர்ந்த நாகராஜூ என்பவரும் வேலை பார்த்து வந்தார்.
இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏறப்பட்டது. 2 பேரும் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த விஷயத்தை அறிந்த சங்கரமூர்த்தி மனைவி சுமங்கலாவை கண்டித்தார். இது பற்றி சுமங்கலா தனது கள்ளக்காதலன் நாகராஜூவிடம் தெரிவித்தார். தகாத உறவுக்கு சங்கரமூர்த்தி ஒரு தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ய சுமங்கலாவும், நாகராஜுவும் ஒரு திட்டத்தை வகுத்தனர்.
அதன்படி கடந்த 24-ந்தேதி இரவு சுமங்கலா தனது கள்ளக்காதலன் நாகராஜூவை கடுஷெட்டிஹள்ளி உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்தார். பண்ணை வீட்டில் சங்கரமூர்த்தி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அவரது கால்களை நாகராஜூ இறுக்கமாக பிடித்துக் கொண்டார். சுமங்கலா, கணவரின் கண்களில் மிளகாய் பொடி, உப்பு பொடி கலந்து ஊற்றினார். இதனால் சங்கரமூர்த்தி சத்தம் போடவே, அவரை கம்பால் அடித்து அவரது கழுத்தை மிதித்து துடிக்க, துடிக்க சுமங்கலா கொலை செய்தார்.
பின்னர் சுமங்கலாவும், கள்ளக்காதலனும் சேர்ந்து சங்கரமூர்த்தியின் உடலை ஒரு சாக்குப் பையில் அடைத்து, சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள துருவேகெரே தாலுகாவில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கொண்டு சென்று அங்கே வீசினர். பின்னர் எந்த சந்தேகமும் ஏற்படாதபடி இருவரும் கிராமத்திற்கு திரும்பினர்.
இதையடுத்து சுமங்கலா தனது கணவர் மாயமானதாக நோனவினகெரே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சங்கரமூர்த்தி மீது காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.
முதலில் சுமங்கலாவின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆராய்ந்த போலீசார் சுமங்கலாவின் கள்ளக்காதல் மற்றும் கொடூரமான சதித்திட்டத்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து சங்கரமூர்த்தியின் பண்ணை வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு சங்கரமூர்த்தி தூங்கிக் கொண்டிருந்த படுக்கையில் மிளகாய், உப்பு பொடி மற்றும் ஒருவர் இழுத்துச் செல்லப்பட்டதற்கான அடையாளமும் காணப்பட்டன.
இதனால் போலீசார் சுமங்கலாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது தானும், கள்ளக்காதலனும் சேர்ந்து சங்கரமூர்த்தியை கொலை செய்ததை சுமங்கலா ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சுமங்கலா மற்றும் நாகராஜு ஆகிய இருவரையும் கைது செய்தனர். தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து சங்கரமூர்த்தியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது
கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த கணவரின் கண்களில் மனைவி மிளகாய், உப்புப் பொடியை ஊற்றி, அவரது கழுத்தை மிதித்து கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கணவரை கொலை செய்ய வேண்டும் என்பதில் சோனம் உறுதியாக இருந்துள்ளார்.
- கணவர் ராஜாரகுவன்ஷியை சி.சி.டி.வி. கேமரா இல்லாத மலை உச்சிக்கு சோனம் அழைத்து சென்றுள்ளார்.
மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த சோனம் (வயது25) என்ற புதுப்பெண் தனது கணவர் ராஜாரகுவன்ஷியை (28) மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்து சென்று கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொழில் அதிபரின் மகளான சோனத்துக்கு கடந்த மே 11-ந்தேதி ராஜாரகுவன்ஷியுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பு அவருக்கு தனது தந்தையின் நிறுவனத்தில் வேலை பார்த்த தந்தையுடன் 3 வயது குறைவான ராஜ்குஷ்வாகாவுடன் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால் மனம் இன்றி ராஜாரகுவன்ஷியை திருமணம் செய்த சோனத்துக்கு அவருடன் வாழப்பிடிக்கவில்லை.
இதனால் காதலன் ராஜ்குஷ்வாகாவுடன் சேர்ந்து தனது கணவரை கொல்ல சதித்திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி கணவர் ராஜாரகுவன்ஷியை மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்து சென்ற சோனம் அங்கு காதலனால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையினரான ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் மூலம் ராஜாரகுவன்ஷியை கொலை செய்துள்ளார்.
இதற்காக ராஜாரகுவன்ஷியும், சோனமும் தேனிலவுக்கு புறப்பட்ட போதே ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் திருமண தம்பதியை பின் தொடர்ந்துள்ளனர். ஆனால் ராஜ்குஷ்வாகாவால் அங்கு செல்ல முடியவில்லை. எனவே கொலை திட்டத்தை ரத்து செய்துவிடலாம் என அவர் கூறி உள்ளார்.
ஆனால் கணவரை கொலை செய்ய வேண்டும் என்பதில் சோனம் உறுதியாக இருந்துள்ளார். அவர் கூலிப்படைக்கு ரூ.20 லட்சம் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். தொடர்ந்து முன்பணமாக ரூ.4 லட்சத்தையும் வழங்கி உள்ளார்.
பின்னர் சோனம் வகுத்து கொடுத்த திட்டப்படி மேகாலயா சென்ற கூலிப்படையினரான ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் அங்கு ராஜா ரகுவன்ஷியிடம் தங்களை மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று அறிமுகமாகி உள்ளனர்.
அவர்களுடன் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் உடன் சென்றுள்ளார். ஆனால் அவரை சோனம் நாங்கள் தனிமையில் இருக்க விரும்புகிறோம் என கூறி திருப்பி அனுப்பி உள்ளார்.
பின்னர் கணவர் ராஜாரகுவன்ஷியை சி.சி.டி.வி. கேமரா இல்லாத மலை உச்சிக்கு சோனம் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களை பின் தொடர்ந்து சென்ற கூலிப்படையினர் ராஜாரகுவன்ஷியை கோடாரியால் தாக்கி கொலை செய்துள்ளனர். தனது கணவர் கண்முன்னே கொலை செய்யப்படுவதை சோனம் வேடிக்கை பார்த்துள்ளார். பின்னர் ராஜாரகுவன்ஷி உடலை 200 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசி உள்ளனர். பின்னர் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் சுமார் 25 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார். பிறகு ரெயில், பஸ்கள் மூலம் அவரவர் ஊர்களுக்கு திரும்பி உள்ளனர்.
சோனம் இந்தூர் சென்று காதலன் ராஜ்குஷ்வாகாவை சந்தித்துள்ளார். பின்னர் 3 நாட்கள் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். தொடர்ந்து அங்கேயே இருந்தால் போலீசில் சிக்கி கொள்வோம் என சோனம் கருதி உள்ளார்.
சோனத்தின் காதலன் ராஜ்குஷ்வாகா உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். அவர் சோனத்தை உத்தரபிரதேசம் செல்ல ஏற்பாடு செய்து அங்குள்ள தனது நண்பர்கள் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளார். இதற்கிடையே ராஜாரகுவன்ஷி பற்றி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவல் மூலம் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதை அறிந்த சோனம் வேறு வழியின்றி தானாக முன்வந்து போலீசில் சரண் அடைந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ராஜாரகுவன்ஷியை கொலை செய்தபோது அவரிடம் ரூ.15 ஆயிரம் இருந்துள்ளது. அதையும் சோனம் கூலிப்படையினரிடம் எடுத்து கொடுத்ததும் தெரியவந்தது. கைதான சோனம் உள்ளிட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கொலை தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள பகதூர்பூரை சேர்ந்தவர் தேவேந்திரகுமார். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி மாயா தேவி.
சம்பவத்தன்று தேவேந்திர குமார் திடீரென மாயமானார். போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி ஹரித் கிராமத்தில் ஒரு பிளாஸ்டிக் பையில் மனித கைகளும், கால்களும் கிடந்தன. தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு அருகில் உள்ள கிணற்றில் மனித உடல் கண்டு எடுக்கப்பட்டது.
ஆனால் கொலை செய்யப்பட்டவரின் தலை கிடைக்கவில்லை. இதற்கிடையே கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டது தேவேந்திர குமார் என்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அவரது மனைவி மாயாதேவியை போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். தொடர்ந்து நடந்த விசாரணையில் மாயாதேவிக்கு அதே பகுதியை சேர்ந்த அனில்யாதவ் என்பவருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இவர்களது கள்ளக்காதலை அறிந்த தேவேந்திர குமார் மனைவியை கண்டித்ததால் ஆத்திரமடைந்த அவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கை, கால், தலை என உடல் பாகங்களை 6 துண்டுகளாக வெட்டி நள்ளிரவில் எடுத்து சென்று வெவ்வேறு பகுதிகளில் வீசி எறிந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாயாதேவி மற்றும் அவரது கள்ளக்காதலன் அனில் யாதவ், அவரது கூட்டாளிகள் 2 பேர் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவிக்கு போதைப் பழக்கம் ஏற்பட்டது.
- மனைவி போதைப் பழக்கத்திற்கு அடிமையானதை சைலு அடிக்கடி கண்டித்து வந்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், பதலிங்கப் பள்ளியை சேர்ந்தவர் சைலு (வயது 45). இவரது மனைவி கவிதா. தம்பதிக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வசித்து வருகின்றனர். சைலு தனது குழந்தைகளுடன் படலிங்க பள்ளியில் தாய் வீட்டில் வசித்து வந்தார். கவிதா நிஜாம் பேட்டையில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.
அப்போது கவிதாவுக்கு போதைப் பழக்கம் ஏற்பட்டது. மனைவி போதைப் பழக்கத்திற்கு அடிமையானதை சைலு அடிக்கடி கண்டித்து வந்தார். இதனால் கவிதாவுக்கு கணவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. கணவரை தீர்த்து கட்ட கவிதா முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 18-ந் தேதி கணவருக்கு போன் செய்து கவிதா மித்ரா ஹில்சில் உள்ள தனது தங்கை ஜோதி வீட்டிற்கு வரவழைத்தார். மது போதையில் வந்த சைலு மனைவியுடன் சண்டையிட்டார். பின்னர் அங்கேயே படுத்து தூங்கினார்.
நள்ளிரவு கவிதா தனது தங்கை ஜோதி மற்றும் அவரது கணவர் மல்லேஷுடன் சேர்ந்து சைலு உடலில் மின்சாரம் பாய்ச்சினார்.
பின்னர் ஜோதி சாயின் கால்களை பிடித்துக் கொண்டார். கவிதா கத்தியை எடுத்து வந்து தனது கணவரின் தொண்டையில் வெட்டினார். பின்னர் மர்ம உறுப்பை வெட்டி எறிந்து கொடூரமான முறையில் கொலை செய்தார்.
உடலை தார் பாயில் சுற்றி வனப்பகுதியில் வீசுவதற்காக ஆட்டோவில் எடுத்துச் சென்றனர். ஆட்டோ டிரைவர் சந்தேகம் அடைந்து கேட்டதால் பிணத்தை மீண்டும் தங்கையின் வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
மறுநாள் அதிகாலை அதே பகுதியில் உள்ள கட்டிட கழிவுகளை கணவர் பிணத்தின் மீது போட்டு மூடி விட்டு வந்தனர். ஆட்டோ டிரைவர் 3 பேர் மர்மமான பொருளை வனப்பகுதியில் வீசுவதற்கு தனது ஆட்டோவில் கொண்டு வந்ததாக போலீசில் புகார் செய்தார்.
போலீசார் கவிதாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது தனது தங்கை அவரது கணவருடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதா, அவரது தங்கை, தங்கையின் கணவர் மல்லேஷ் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- பக்கத்து வீட்டை சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் வழிப்பிரச்சினை உள்ளது.
- கையாலும், கட்டையாலும் தருமனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள காட்டு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் தருமன் (வயது 42). இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் வழிப்பிரச்சினை உள்ளது.
இந்நிலையில் திருப்பதி யும் அவரது மனைவி புவனேஸ்வரியும் சேர்ந்து கையாலும், கட்டையாலும் தருமனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த தருமன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ
மனையில் அனும திக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து தருமன் கொடுத்த புகாரின்பேரில் வேப்ப னப்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து திருப்பதி, புவனேஸ்வரி 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருமணத்துக்கு பிறகு வினோதினி கணவர் கதிரவனுடன் சென்னையில் குடியேறிய பிறகும் அந்தோனி ஜெகனின் காதலை தொடர்ந்துள்ளார்.
- கணவரை கொலை செய்துவிட்டு காதலனுடன் சேர்ந்துவிடலாம் என வினோதினி திட்டம் போட்டார். இதற்காகவே திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை திருவான்மியூர் கடற்கரையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மனைவி வினோதினியுடன் கடற்கரைக்கு சென்றிருந்த என்ஜினீயர் கதிரவன் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நானும், கணவர் கதிரவனும் கண்ணை கட்டிக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினோம்.
கணவரின் கண்ணை கட்டி விளையாடியபோது வழிப்பறி கொள்ளையர்கள் அவரை தாக்கியதுடன் எனது தாலி செயினையும் பறித்துச்சென்றுவிட்டனர் என்று தெரிவித்தார்.
வினோதினியின் செயல்பாடுகள் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கடற்கரை பகுதியில் கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கதிரவனை, வினோதினிக்கு தெரிந்த நபரே வந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
அந்த நபர் வினோதினியின் காதலனான அந்தோனி ஜெகன் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர். காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றுவிட்டு வினோதினி வழிப்பறி நாடகம் ஆடியது அம்பலமானது.
இதுதொடர்பாக போலீசார் மேலும் நடத்திய விசாரணையில் வினோதினியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்பது தெரியவந்தது. வினோதினியும், அந்தோனி ஜெகனும் காதலித்து வந்த நிலையில் கதிரவன், வினோதினியை திருமணம் செய்துள்ளார். இவரது ஊர் தூத்துக்குடி ஆகும். காதலன் அந்தோனி ஜெகன் விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்தவர்.
திருமணத்துக்கு பிறகு வினோதினி கணவர் கதிரவனுடன் சென்னையில் குடியேறிய பிறகும் அந்தோனி ஜெகனின் காதலை தொடர்ந்துள்ளார். அப்போதுதான் கணவரை கொலை செய்துவிட்டு காதலனுடன் சேர்ந்துவிடலாம் என வினோதினி திட்டம் போட்டார். இதற்காகவே திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வினோதினி, அந்தோனி ஜெகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் திருவான்மியூர் போலீசார் கேமரா காட்சி ஆவணங்களை முறையாக தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையிலேயே இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பலத்த காயம் அடைந்து இருந்த வேல்முருகன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
- கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை சாலிகிராமம், மதியழகன் நகர் கே.கே சாலையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது40) கட்டிட கூலி தொழிலாளி. இவரது மனைவி வினோதினி, வீட்டு வேலை பார்த்து வருகிறார்.
வேல்முருகன் தினசரி பணி முடிந்து இரவு மது குடித்துவிட்டு வந்து வினோதினியிடம் ரகளையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி மதுபோதையில் வீடு திரும்பிய வேல்முருகனை வினோதினி கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வினோதினி அருகில் கிடந்த காய்கறி வெட்டும் கத்தியால் வேல்முருகனை சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த வேல்முருகனை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் வைத்து வினோதினி சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் பலத்த காயம் அடைந்து இருந்த வேல்முருகன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரை வினோதினி ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றார். மேலும் அங்கிருந்த டாக்டர்களிடம் வேல்முருகன் மதுபோதையில் தானாகவே கத்தியால் குத்தி கொண்டார் என்றும் வினோதினி கூறினார். ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த டாக்டர்கள் உடனடியாக இதுபற்றி விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் வினோதினியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார். அப்போது வேல்முருகனை கத்தியால் குத்தி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இது குறித்து வினோதினி போலீசாரிடம் கூறியதாவது:- கணவர் வேல்முருகன் தினசரி மது குடித்துவிட்டு வீட்டை அசுத்தம் செய்து தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் விரக்தி அடைந்த நான் கணவரை கத்தியால் குத்தினேன். அப்போது அவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததால் அவரது அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.
மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கணவரை சிகிச்சைக்கு அழைத்து சென்றால் விஷயம் வெளியே தெரிந்து சிக்கிவிடுவோம் என்பதால் வீட்டிலேயே வைத்து நானே சிகிச்சை அளித்தேன். ஆனால் அதிக ரத்தம் வெளியேறி வந்ததால் கணவர் வேல்முருகன் உயிரிழந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 நாட்களாக வீட்டிலேயே வைத்து கணவருக்கு வினோதினி சிகிச்சை அளித்துள்ளார்.
- ரத்தம் வெளியேறி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கணவரை அழைத்து சென்றார்.
சென்னை:
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தர் வேல்முருகன். கட்டிட தொழிலாளியான இவர் மதுப்பழக்கத்தக்கு அடிமையானார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடித்து விட்டு வந்து மனைவி வினோதினியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வேல்முருகனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
வயிற்றில் இடது புறத்தில் கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த வேல்முருகனின் வயிற்றில் இருந்து ரத்தம் வெளியேறியது.
ஆத்திரத்தில் கணவரை கத்தியால் குத்திய நிலையில் அதன் பின்னர் போலீசுக்கு பயந்து சிகிச்சைக்காக வெளியில் எங்கும் அழைத்துச் செல்லவில்லை.
இதனால் 2 நாட்களாக வீட்டிலேயே வைத்து கணவருக்கு வினோதினி சிகிச்சை அளித்துள்ளார். இதில் ரத்தம் வெளியேறி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கணவரை அழைத்து சென்றார். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி ஆஸ்பத்திரியில் இருந்து விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வினோதினியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கணவர் குடித்து விட்டு வந்து தனக்கு தானே கத்தியால் குத்திக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு கணவரை கத்தியால் குத்தி கொலை செய்ததை வினோதினி ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பரபரப்பான வாக்குமூலம் வருமாறு:-
கணவர் வேல்முருகன், குடித்து விட்டு வந்து அடிக்கடி வீட்டில் தகராறு செய்வார். தற்போதும் அது போன்று குடித்து விட்டு வந்தவர் என்னைப் பற்றி தவறாக பேசி அடித்து உதைத்தார். அப்போது அவர் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு கடுமையான வார்த்தைகளால் திட்டி தாக்கினார். ஏன் இப்படி குடித்து விட்டு வந்து பேசுகிறீர்கள் என்று நான் கண்டித்தும் அவர் கேட்கவில்லை. என்னை தாக்குவதையும் நிறுத்தவில்லை.
இதனால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தினேன். இதில் அவரது உடலில் இருந்து ரத்தம் அதிக அளவில் வெளியேறியது.
இதனால் கணவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு என்னிடம் கூறினார். ஆனால் நான் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாமல் மருந்து கடையில் மருந்து வாங்கி வந்து சிகிச்சை அளித்தேன். ஆனால் கணவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர் மயக்க நிலைக்கு சென்றார். இதனால் பயந்து போய் அவரே கத்தியால் குத்திக்கொண்டதாக நாடகம் ஆடினேன்.
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது போலீசில் சிக்கி கொண் டேன். ஆஸ்பத்திரியில் எனது கணவரை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதேன். இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு வினோதினி வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2-ந்தேதி வீடு திரும்பிய கணவர் சதீஷுக்கு நீத்து பானத்தில் தூக்கமாத்திரையை கலந்துகொடுத்தார்.
- நீத்துவையும், அவரது கணவர் சதீஷையும் அடிக்கடி வந்து சந்தித்துச்சென்ற ஹர்பால் என்பவரை போலீசார் பிடித்தனர்.
காஜியாபாத்:
டெல்லி அருகே உள்ள காஜியாபாத் நகரில் வசிக்கும் சோட்டேலால் என்பவர், கடந்த 10-ந்தேதி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், தனது சகோதரர் சதீஷ் பாலை (வயது 42) ஒரு வாரமாக காணவில்லை என்று தெரிவித்திருந்தார்.
சதீஷ் பால் காணாமல் போய் சில நாட்கள் ஆகியும் அவர் மனைவி நீத்து ஏன் புகார் தெரிவிக்கவில்லை என்று போலீசார் சந்தேகப்பட்டு விசாரித்தனர். ஆனால் அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
இந்நிலையில் நீத்துவையும், அவரது கணவர் சதீஷையும் அடிக்கடி வந்து சந்தித்துச்சென்ற ஹர்பால் என்பவரை போலீசார் பிடித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், நீத்து, கவுரவ் என்பவரின் உதவியுடன் சதீஷை கொன்று புதைத்ததை ஒப்புக்கொண்டார். சதீஷ்-நீத்து குடும்பத்துக்கு பழக்கமான ஹர்பாலுக்கும், நீத்துவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கணவரை கொன்றுவிட்டு, திருமணம் செய்துகொள்ள அவர்கள் முடிவெடுத்துள்ளனர். சதீஷை கொல்வதற்கு தனது நண்பரான கவுரவ் என்பவரை பயன்படுத்திக்கொள்ள ஹர்பால் முடிவெடுத்துள்ளார்.
கடந்த 2-ந்தேதி வீடு திரும்பிய கணவர் சதீஷுக்கு நீத்து பானத்தில் தூக்கமாத்திரையை கலந்துகொடுத்தார். அவர் ஆழ்ந்து உறங்கியதும் நீத்துவும், மற்ற இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
கள்ளக்காதலன் ஹர்பாலும், அவரது நண்பர் கவுரவும் கொத்தனார்கள். நீத்துவின் வீட்டின் அருகே புதிதாக ஒரு வீட்டை அவர்கள் கட்டிக்கொண்டிருந்தனர். அங்கேயே சதீஷின் உடலைப் புதைக்க அவர்கள் தீர்மானித்தனர்.
அதன்படி உடலை தரதரவென்று இழுத்துச் சென்று அங்கு புதைத்தனர். பின்னர் அதன் மீது கழிவுநீர் தொட்டி(செப்டிக் டேங்க்) கட்டிவிட்டனர்.
கள்ளக்காதலனின் வாக்குமூலத்தில் இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்தநிலையில், கட்டப்படும் வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெற்று போலீசார் செப்டிங் டேங்கை உடைத்தனர். புதைக்கப்பட்டிருந்த சதீஷின் உடல் பாகங்களை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
கள்ளக்காதலனுடன் பெண் நீத்துவை கைது செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள நண்பர் கவுரவை தேடிவருகின்றனர்.
'திரிஷ்யம்' பட பாணியில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் காஜியாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குடித்துவிட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவரை கொதிக்கும் நீரை ஊற்றி கொலை செய்த சம்பவம் திருவெறும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் செல்வராஜின் மனைவி, மாமியார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 27). இவரது மனைவி டயானா மேரி (வயது 22). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
ஆட்டோ டிரைவரான செல்வராஜ் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி பலமுறை கண்டித்தும் திருந்தவில்லை.
இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரிடம், கோபித்துக் கொண்டு அதே பகுதியில் வசித்து வரும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் அவர் கணவர் வீட்டுக்கு திரும்ப செல்லவில்லை. உறவினர்கள் சமரசம் செய்து வைத்தும் அதனை டயானா மேரி ஏற்கவில்லை.
இந்தநிலையில் சம்பவத்தன்று செல்வராஜ் மனைவியைத் தேடி மாமியார் வீட்டுக்குச் சென்றார். அப்போது டயானா மேரியிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் ஒப்புக்கொள்ள மறுப்பு தெரிவித்தார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு மூண்டது.
இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், மனைவி டயானா மேரியை சரமாரியாக அடித்ததாக தெரிகிறது. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர் வீட்டில் இருந்த அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரை எடுத்து வந்து சற்றும் யோசிக்காமல் கணவர் மீது ஊற்றிவிட்டார்.
இதில் உடல் வெந்து செல்வராஜ் வலியால் அலறி துடித்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் செல்வராஜ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மனைவி ஊற்றிய சுடுநீர் அவரது அடிவயிற்றில் பட்டு ஆழமான காயம் ஏற்பட்டதால் கிட்னி பாதித்து இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் செல்வராஜின் மனைவி டயானா மேரி, மாமியார் இன்னாசியம்மாள் (43) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
குடித்துவிட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவரை கொதிக்கும் நீரை ஊற்றி கொலை செய்த சம்பவம் திருவெறும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






