search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband killed"

    • மனைவி கைது
    • ஒருவரையொருவர் சர மாரி தாக்கி கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல் பூதேரி கிராமத்தை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 37), கூலி தொழிலாளி.

    இவ ரது மனைவி மைதிலி(35). இவர் சென்னை அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி மைதிலியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், நேற்று முன் தினம் இரவு குடிபோ தையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் மைதிலியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, ஒருவரை யொருவர் சர மாரி தாக்கி கொண்டனர்.

    ஆத்திரமடைந்த மைதிலி, மணிகண்டனை கீழே தள்ளிவிட்டார். இதில் அவர் பலத்த காயமடைந்து மயங்கி கீழே விழுந்தார்.இதை கவனிக்காத மைதிலி தூங்க சென்றுவிட்டார்.

    நேற்று காலை மைதிலி மயங்கிய நிலை யில் இருந்த மணிகண் டனை எழுப்ப முயன்றார். ஆனால், அவர் எழுந்தி ருக்கவில்லை. அப்போது மணிகண்டன் இறந்தது தெரியவந்தது. இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல றிந்த மோரணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருவண்ணா மலை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மைதி லியை நேற்று கைது செய் தனர். பின்னர், அவரை மாஜிஸ்திரேட் முன்னி லையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்தார்
    • பெண்ணை ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் அடுத்த இலவம்பாடி கிராமம் கருநிகர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி லதா (29). இவர்களுக்கு 9 மற்றும் 7 வயதில் 2 மகள்கள், 5 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

    சுரே சுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் கண வன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த 14-ந் தேதி இரவு மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுரேஷ் மனை வியை சரமாரியாக தாக்கினார்.

    ஆத்திரம் அடைந்த லதா வீட்டில் இருந்த மண் எண்ணெய் கேனை எடுத்து வந்து சுரேஷ் மீது ஊற்றி தீ வைத்தார்.

    இதில் உடல் முழுவதும் தீப் பற்றியது. இதனால் சுரேஷ் அலறிதுடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்குவந்த சுரேஷ் உடலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேஷ் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக விரிஞ்சிபுரம் போலீசார் லதா மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே கணவரை கொன்று நாடகமாடிய மனைவியை 2 மாதத்திற்கு பின் போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது40). கூலித்தொழிலாளி. இவருக்கு வீரமணி (வயது36) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களாக ராஜதானி அருகில் உள்ள கொட்டபட்டியில் அய்யனார் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 12.3.19-ந் தேதியன்று அய்யனார் தலையில் காயங்களுடன் தோட்டத்தில் இறந்து கிடந்தார்.

    உறவினர்கள் அனைவரும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அய்யனார் உடலை எரிக்க முயன்றனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே தடுத்து நிறுத்தினர். மேலும் அய்யனார் எவ்வாறு இறந்தார் எனவும் விசாரணை நடத்தப்பட்டது.

    தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக வீரமணியே போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    பல்வேறு கோணங்களில் பலரை பிடித்து விசாரித்து வந்த நிலையில் மனைவி மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில் தனது கணவரை கொலை செய்ததாக ஒத்துக் கொண்டார்.

    போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் குடிபழக்கத்திற்கு அடிமையான தனது கணவர் அடிக்கடி குடித்துவிட்டு தன்னிடம் தகராறு செய்து வந்ததாகவும் சம்பவத்தன்று அதேபோல் தகராறு செய்ததால் கழுத்தை நெரித்து கொன்று விட்டு அரிவாளால் தலையில் தாக்கியதாக கூறினார். இதனையடுத்து போலீசார் வீரமணியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    நெற்குன்றத்தில் மது குடித்து வந்த தகராறில் கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

    போரூர்:

    நெற்குன்றம் மந்தை வெளி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். லாரி டிரைவர். இவரது மனைவி விமலா. ரமேஷ் தினமும் மது குடித்து விட்டு விமலாவை அடித்து உதைத்து வந்தார். கடந்த 18ந் தேதி குடிபோதையில் வந்த ரமேஷ்-விமலா இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது விமலாவை கடுமையாக தாக்கினார். அப்போது விமலா அடுப்பில் கொதித்து கொண்டு இருந்த வெந்நீரை ரமேஷ் மீது ஊற்றினார்.

    இதில் உடல் வெந்து அலறி துடித்த ரமேசை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வழக்குபதிவு செய்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் இன்று விமலாவை கைது செய்தனர்.

    வேலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் கணவனை கொன்று காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி கைது செய்யப்பட்டார். கூட்டாளிகளும் சிக்கினர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த பலவன்சாத்துகுப்பம் பாரதியார்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் வெங்கட்யுவராஜ் (வயது 28). தனியார் நிதிநிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவருடைய மனைவி கோமதி (23) அதேபகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலைபார்த்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற வெங்கட்யுவராஜ், அதன்பின்னர் திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து கோமதி, பாகாயம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமதி மற்றும் வெங்கட்யுவராஜின் நண்பர்கள், அவர் பணிபுரிந்த நிதி நிறுவனத்தில் விசாரணை நடத்தினர். ஆனால் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில், 15 மாதங்களுக்கு பின்னர் வேலப்பாடியை சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெங்கட்யுவராஜை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவரைபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடுத்த தகவலின்பேரில் பாகாயம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் மோர்தானா அணை பகுதிக்கு சென்று அங்குள்ள காட்டுப்பகுதியில் கிடந்த வெங்கட்யுவராஜின் எலும்புகூடுகளை கைப்பற்றினர்.

    விசாரணையில் கள்ளக்காதல் காரணமாக வெங்கட்யுவராஜை கொலைசெய்தது தெரியவந்தது.

    ராஜ்குமார், ஆரணியை சேர்ந்த அவரது நண்பர்களான செந்தில் (33), வேலு (32), கோட்டீஸ்வரன் (38), விஜய் (23), கோமதி ஆகியோர் கைது செய்யபட்டனர்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கோமதி வேலூரில் உள்ள மெடிக்கல், பியூட்டிபார்லர் ஆகியவற்றில் வேலை பார்த்தவர். அப்போது ராஜ்குமாருடன் கள்ளதொடர்பு ஏற்பட்டது.

    கணவன் இல்லாத நேரத்தில் கோமதி வீட்டுக்கு சென்று ராஜ்குமார் சந்தித்தார். இது வெளியே தெரிந்தது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த வெங்கட்யுவராஜ் கோமதியை வேலைக்கு அனுப்பவில்லை. மேலும் போன்பேசுவதை நிறுத்த செய்தார்.

    கள்ளக்காதலனை சந்திக்க முடியாததால் கோமதி ஆத்திரமடைந்தார். ராஜ்குமாரை தொடர்பு கொண்டு கணவனை கொலை செய்ய கூறியுள்ளார்.

    அவரது நண்பர் செந்தில், ராஜ்குமார் இருவரும் வெங்கட்யுவராஜை கொலை செய்ய திட்டமிட்டனர். அவருக்கு இருக்கும் மது பழக்கத்தை பயன்படுத்தி கொண்டனர்.

    கொலை செய்வதற்கு 2 மாதத்துக்கு முன்பாக வேலூரில் உள்ள மதுபாரில் வெங்கட்யுவராஜ் மது குடித்தார். அவரை தேடி சென்று செந்தில் பேச்சு கொடுத்தார். தான் ராணுவத்தில் வேலை செய்கிறேன்.

    அடிக்கடி மது கிடைக்கும் எனக்கூறி மது வாங்கி கொடுத்தார். அவரை அடிக்கடி அழைத்து மது வாங்கி கொடுக்க ஆரம்பித்தார்.

    செந்திலின் நட்பை உண்மையென நம்பிய வெங்கட்யுவராஜ் அவருடன் நீண்ட நேரம் பொழுதை கழித்தார். மாலை நேரம் வந்ததும் கணவனிடம் செல்லமாக பேசி கோமதி மது குடிக்க அனுப்பி வைத்துள்ளார்.

    அவர் சென்றதும் ராஜ்குமாரை வீட்டுக்கு வரவழைத்து வீட்டில் தனிமையில் ஜாலியாக இருந்தனர். 2 மாதங்கள் இது நீடித்தது.

    வெங்கட்யுவராஜிக்கு மது வாங்கி கொடுக்க பணம் அதிக செலவானது. இதனால் திட்டமிட்ட படி அவரை கொலை செய்ய செந்தில் அவரது கூட்டாளிகளுடன் ஒகேனக்கல் அழைத்து சென்றனர். அங்குள்ள காட்டுபகுதியில் மது குடித்தனர்.

    அப்போது வெங்கட் யுவராஜின் போனில் அவரது நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம் ஒகேனக்கல்லில் செந்திலுடன் இருப்பதை கூறிவிட்டார். இதனால் அங்கு வைத்து கொலை செய்யும் முடிவை கைவிட்டனர்.

    பின்னர் மோர்தானா அணை அருகே காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அதிக மது ஊற்றி கொடுத்து வெங்கட்யுவராஜை டவலால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு உடலை போட்டு சென்றுள்ளனர்.

    போலீசார் உடலை தேடி சென்றபோது எலும்பு கூடாகவே கிடந்தது. மேலும் வெங்கட்யுவராஜ் பேண்ட் கைபற்றினர் அவர்கள் குடித்த போது விட்டு சென்ற மதுவுடன் இருந்த பாட்டிலும் அப்படியே கிடந்தது அதையும் போலீசார் மீட்டனர்.

    கணவனை கொலை செய்துவிட்டு அவர் மாயமானதாக கோமதி நாடக மாடியுள்ளார்.

    கள்ளதொடர்பையும் தொடர்ந்தார் 15 மாதங்களுக்கு பிறகு கொலையில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.

    விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் பிரமுகரின் கழுத்தை அறுத்து கொலை செய்து வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிய மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் சாலாமேடு வி.ஜி.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்(வயது 48). தொழிலாளி. இவரது மனைவி செண்பகவள்ளி(40). இவர் விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மகளிரணி அமைப்பாளராக உள்ளார்.

    நேற்று இரவு கணவன்- மனைவி இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு அவர்களது குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் 5 பேர் கொண்ட மர்மகும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கதிர்வேலின் வீட்டுக்குள் நுழைந்தனர்.

    பின்னர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கதிர்வேலின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் கத்தியால் அறுத்தனர். இதில் கதிர்வேல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அப்போது திடுக்கிட்டு எழுந்த செண்பகவள்ளி தனது கணவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என கூச்சல் போட்டார். ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால் அவரது சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்கவில்லை. பொதுமக்கள் யாரும் அங்கு வரவில்லை.

    செண்பகவள்ளி சத்தம் போட்டதை தொடர்ந்து அந்த மர்மகும்பல் வீட்டை விட்டு வெளியே வந்தனர். பின்னர் கதிர்வேலின் வீட்டுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உடனே செண்பகவள்ளி வீட்டை விட்டு வெளியே வந்தார்.

    பின்னர் அவர் வீட்டின் அருகே புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் இரவு காவலாளியாக இருந்த நபரிடம் சென்று தனது கணவர் கொலை செய்யப்பட்ட விவரத்தையும், வீடு தீப்பற்றி எரிவதையும் கூறி அவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

    இதையடுத்து செண்பகவள்ளியும், காவலாளியும் சேர்ந்து பிணமாக கிடந்த கதிர்வேலின் உடலை மீட்டு வீட்டுக்கு வெளியே கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் செண்பகவள்ளி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட கதிர்வேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கதிர்வேலை கொலை செய்து வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிய மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    அந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புன்னம் கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம் (வயது 40). இவர் அப்பகுதியில் லேத் ஒர்க்ஷாப் பட்டறை வைத்து நடத்தி வந்தார்.

    இவரது மனைவி பெயர் ஹேமலதா (21). நேற்று மாலை வேலை முடிந்து கைலாசம் தனது மனைவி ஹேமலதாவுடன் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அந்தியூர் அருகே காட்டூர் பக்கம் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி வேமாக வந்து கைலாசத்தை வழி மறித்தார். திடீரென இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வழிமறித்த ஆசாமி திடீரென தான் கொண்டு வந்த கத்தியால் கைலாசத்தின் கழுத்தை அவரது மனைவி கண்முன்னால் அறுத்தார். இதில் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. இதைகண்டு மனைவி ஹேமலதா சத்தம்போடவே அவன் தப்பி ஓடிவிட்டான்.

    ரத்த வெள்ளத்தில் துடித்த கைலாசத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த படுகொலை குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைலாசத்தை கொலை செய்த ஆசாமி தலைமறைவாக உள்ளான். அவன் யார்? எதற்காக இந்த கொலையை செய்தான்? முன்பகை அல்லது தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கொலையை பற்றி துப்பு துலக்கவும், கொலையாளியை பிடிக்கவும் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    மனைவி கண் எதிரே கணவன் கொலை செய்யப்பட்டாலும் மனைவி ஹேமலதாவுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.

    மேலும் கொலைகாரன் பற்றியும் இந்த கொலைக்கு காரணம் எதுவும் உண்டா? என்று மனைவியிடமும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

    இன்று காலை நடந்த தொடர் விசாரணை மூலம் கைலாசம் கள்ளக்காதல் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கைலாசம் மனைவி ஹேமலதாவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்தான இந்த கொலையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    தக்கலை அருகே கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்ததை கணவர் பார்த்ததால் அவரை கொலை செய்தோம் என்று கைதான மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    நாகர்கோவில்:

    தக்கலை அருகே பள்ளியாடி பேராணி விளையைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சுதா.

    இவர்கள் இருவரும் 2002-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ராஜசேகர் வெளிநாட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஊருக்கு வந்திருந்த அவர், திடீரென மாயமானார். இது குறித்து சுதாவின் சகோதரர் ரவி, தக்கலை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 11 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் திருப்பமாக ராஜசேகரை அவரது மனைவி சுதா மற்றும் அவரது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட ராஜசேகரின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக்டேங்க்கில் வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் செப்டிக்டேங்க்கில் கிடந்த எலும்புக்கூட்டை கைப்பற்றினர். பின்னர் தடயவியல் சோதனைக்காக பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.

    சோதனையில் அந்த எலும்புக்கூடு ராஜசேகருடையது என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் ராஜசேகரின் மனைவி சுதாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுதா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    நானும், ராஜசேகரும் கடந்த 2002-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு ராஜசேகரின் நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். இதில் பள்ளியாடியைச் சேர்ந்த ஆன்லின் சிபுவும் அடிக்கடி வந்து சென்றார். அவருக்கும் எனக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    நாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். ஆன்லின் சிபுவுடன் நான், நெருக்கமாக இருந்ததை எனது கணவர் நேரில் பார்த்து கண்டித்தார். இதனால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம். கடந்த 9.2.2007-ம் ஆண்டு மதுவில் தூக்க மாத்திரை களை கலந்து கொடுத்தோம்.

    பின்னர் அரிவாளால் வெட்டியதுடன், தலையணையால் அமுக்கி கொன்றோம். வீட்டின் செப்டிக் டேங்க்கில் ராஜசேகர் உடலை வீசினோம். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் இருந்தோம். ராஜசேகரை சிலர் தேடினார்கள். அப்போது அவர் வெளிநாடு சென்று விட்டதாக கூறி நாடகமாடினேன்.

    எனது சகோதரருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டு விட்டது. இது தொடர்பாக எனக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அவரை தாக்கியது தொடர்பாக தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் என்மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட சுதாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர், தக்கலை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் சுதாவின் கள்ளக்காதலன் ஆன்லின் சிபு உள்பட 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆன்லின் சிபு தற்போது கேரளாவில் தலைமறைவாகி உள்ளார். மற்றொருவர் வெளிநாட்டில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

    மது குடித்து வந்து தகராறு செய்த கணவரை அடித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மேலகிருஷ்ணன்புதூர் சிவசக்தி தெருவைச் சேர்ந்தவர் குமரப்பராஜன், (வயது 51), தொழிலாளி.

    குமரப்பராஜனின் மனைவி பானுமதி. குமரப்ப ராஜன் மது பழக்கத்திற்கு அடிமையானவர். அடிக்கடி மது குடித்து விட்டு தெருவில் மயங்கி கிடப்பது வழக்கம். மனைவி மற்றும் உறவினர்கள் அவரை வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அப்போது அவர், மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். பின்னர் வீடு அருகே மயங்கி கிடப்பார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல மது குடித்து மயங்கி கிடந்த குமரப்பராஜன் திடீரென இறந்து போனார்.

    அதிக போதை காரணமாக குமரப்பராஜன் இறந்து விட்டதாக அவரது மனைவி பானுமதி தெரிவித்தார். உறவினர்களும் இதனை நம்பினர். 

    குமரப்பராஜன் தெருவில் இறந்து கிடந்ததால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனையில் குமரப்பராஜன் தலையில் அடிபட்டு இறந்திருப்பது தெரியவந்தது.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்ட தகவலை தொடர்ந்து போலீசார் குமரப்பராஜன் சாவு குறித்து ரகசிய விசாரணையில் இறங்கினர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. குமரப்பராஜனை அவரது மனைவியே அடித்து கொன்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குமரப்பராஜனின் மனைவி பானுமதியை பிடித்து விசாரித்தனர்.

    பானுமதி முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவரை கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவரை தள்ளி விட்டு கம்பால் அடித்ததாகவும் அவர், மயங்கி விழுந்து இறந்து போனதும் தெரியவந்தது. அதன் பிறகே பானுமதி போதையில் கணவர் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தெரிவித்து நாடகமாடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பானுமதியை கைது செய்தனர். அவர், போலீசாரிடம் அளித்த வாக்கு மூலம் வருமாறு:-

    நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருகிறேன். எனது கணவர் குமரப்பராஜன். கூலித் தொழிலாளி. வேலைக்கு சென்று கிடைக்கும் பணம் அனைத்தையும் குடித்தே செலவு செய்தார். குடும்பச் செலவிற்கு பணம் தருவதில்லை. தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்வார். என்னையும் அடித்து உதைப்பார். சம்பவத்தன்றும் இதுபோல குடித்து விட்டு வந்து என்னை அடித்து உதைத்தார். அவரிடம் இருந்து தப்பிக்க நான், கணவரை தள்ளி விட்டேன். கம்பலாலும் அடித்து விரட்டினேன். 

    அவர், சத்தம் போட்டப்படி வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வரவில்லை. பின்னர் தேடிச்சென்ற போது அவர், இறந்து விட்டது தெரியவந்தது. கணவரிடமிருந்து என்னை தற்காத்து கொள்ளவே அவரை தாக்கினேன்.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கள்ளக்காதல் தகராறில் கணவரை கொன்ற கேரள பெண்ணுக்கு 22 ஆண்டு ஜெயில் தண்டனையும், கள்ளக்காதலனுக்கு 27 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் புனலூர் பகுதியை சேர்ந்தவர் சாம் ஆபிரகாம் (வயது 34). இவரது மனைவி ஷோபியா (32). இந்த தம்பதிக்கு 9 வயதில் மகன் உள்ளான்.

    சாம் ஆபிரகாம் தனது குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போன் நகரில் வசித்து வந்தார். மேலும் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியிலும் அவர் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு தனது வீட்டில் சாம் ஆபிரகாம் இறந்துகிடந்தார். அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக மனைவி ஷோபியா தெரிவித்தார். மேலும் சாம் ஆபிரகாம் உடல் ஆஸ்திரேலியாவில் இருந்து புனலூருக்கு அனுப்பப்பட்டு அங்கு அடக்கமும் செய்யப்பட்டது.

    இதற்கிடையில் சாம் ஆபிரகாம் சாவில் மர்மம் இருப்பதாக ஆஸ்திரேலியா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து அவர்கள் அவரது மனைவி ஷோபியாவிடம் விசாணை நடத்தினார்கள். அப்போது அவர் சரியான தகவல்களை தெரிவிக்காததால் போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். இதில் கணவர் சாம் ஆபிரகாமை அவரது மனைவி ஷோபியாவே வி‌ஷம் வைத்து கொன்ற திடுக்கிடும் தகவல் தெரிவய வந்தது.

    சாம் ஆபிரகாம் வேலை பார்த்த கம்பெனியில் கேரளாவை சேர்ந்த அருண் என்ற வாலிபரும் பணிபுரிந்தார். அவர் அடிக்கடி சாம் ஆபிரகாமின் வீட்டிற்கு வந்து சென்றதால் அவருக்கும் ஷோபியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரிய வந்ததால் அவரை ஷோபியாவும் அருணும் சேர்ந்து உணவில் வி‌ஷம் கலந்து கொலை செய்து உள்ளனர். இதைதொடர்ந்து ஷோபியாவும், அருணும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மெல்போன் நகரில் உள்ள விக்டோரியா கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு ஷோபியாவுக்கு 22 ஆண்டு ஜெயில் தண்டனையும், கள்ளக்காதலன் அருணுக்கு 27 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது. தனது மகனின் எதிர்காலம் கருதி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று ஷோபியா கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது மகனை ஷோபியாவின் சகோதரனிடம் ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. #tamilnews

    என்னை விட்டு விலகியதால் கள்ளக்காதலியின் கணவரை கொன்றேன் சேலம் டிரைவர் கொலையில் கைதான வாலிபர் வாக்குமூலம்

    ஆட்டையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடியை சேர்ந்தவர் பெருமாள். இவர் கோவையில் செப்டிங் டேங்க் வண்டியின் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த முருகேஸ்வரி, குழந்தைகளுடன் சீரகாப்பாடிக்கு வந்து விட்டார். சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள டெய்லரிங்கடையில் வேலைக்கு சேர்ந்த அவருக்கு, பரமகுடியை சேர்ந்த அருள் என்கிற அருள்செல்வம் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் பெருமாளின் உறவினர்கள் சமாதானம் செய்து பெருமாளையும், முருகேஸ்வரியையும் சேர்த்து வைத்தனர். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி பெருமாள் திடீரென மாயமானார். பின்னர், அவர் இறந்த நிலையில் உடல் வீரபாண்டி ஏரியில் இருந்து மீட்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பெருமாளை கொலை செய்து விட்டதாக கூறி, கடந்த வாரம் அருள்செல்வம் பரமக்குடி கோர்ட்டில் சரண் அடைந்தார். நேற்று முன்தினம் முதல் அவரை ஆட்டையாம்பட்டி போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில், அருள் செல்வம் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    கார்மென்ட்ஸ் கடையில் வேலை செய்தபோது முருகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை பார்த்தவுடனே, அவரது அழகில் நான் மயங்கினேன். அவரை, எப்படியாவது எனது வலையில் வீழ்த்தி விட வேண்டும் என எண்ணினேன். இது முருகேஸ்வரிக்கு தெரியாது. தவறான கண்ணோட்டத்தில் பழகுவது குற்றம் என தெரிந்தும் பழகினேன்.

    முருகேஸ்வரி தனது குடும்பம் வி‌ஷயம் குறித்தும், கணவரை பற்றியும் என்னிடம் கூறி வருத்தப்பட்டார். நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். ஒரு நாள் அவர், தனியாக கார்மென்ட்ஸ் கடை தொடங்கப்போகிறேன். இதற்கு தேவையான உதவிகளை செய்ய முடியுமா? என கேட்டார். ஏற்கனவே, அவரது அழகில் மயங்கிய நான், அவர் உதவிகேட்டவுடன் மறுக்கவில்லை. உதவிகள் செய்து கொடுத்தேன்.

    ஊரில் உள்ளவர்களுக்கு எங்களது தொடர்பு பற்றி தெரிய தொடங்கியது. அவர்கள் முருகேஸ்வரிக்கு அறிவுரை கூறினார்கள். அருள்செல்வத்தை நம்பாதே உன்னை ஏமாற்றுகிறான் என்றனர். என் மீது ஒரு கட்டத்தில் முருகேஸ்வரிக்கும் சந்தேகம் ஏற்பட்டது. நான் ஏமாற்றுவதாக அறிந்தார். இதனால் என்னிடம் இருந்து விலக தொடங்கினார். இருந்தாலும் நான் அவரை விடவில்லை.

    இந்த நிலையில் திடீரென பெருமாளுடன் சேர்ந்து கொண்ட அவர், என்னுடன் பழகுவதை நிறுத்தி விட்டார். இது எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு பழி வாங்கவே பெருமாளை எனது வீட்டிற்கு வரவழைத்து மது ஊற்றி கொடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

    சென்னையில் இருந்து வந்த எனது நண்பர் உசிலம்பட்டி பால் பாண்டியுடன் சேர்ந்து பெருமாளின் உடலை வீரபாண்டி ஏரியில் கல்லை கட்டி வீசினோம். பின்னர் நாங்கள் இருவரும் தலைமறைவாகி விட்டடோம். ஆனால் போலீசார் சந்தேகம் அடைந்ததை அறிந்ததும் கோர்ட்டில் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறியதாக தெரிகிறது.

    கொலைக்கு துணையாக இருந்த உசிலம்பட்டியை சேர்ந்த பால்பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

    மனைவியுடன் சென்ற கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். ஒருதலைக் காதலால் இந்த விபரீத செயலில் இறங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியைச் சேர்ந்த வேலு மகன் கருப்பையா (24). இவர் மைசூரில் தேயிலை ஏஜெண்டாக உள்ளார்.

    இவருக்கும், திருமங்கலத்தை அடுத்த கண்டு குளத்தைச்சேர்ந்த மாரநாடு மகள் திவ்யாவுக்கும் (20) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    அதன் பிறகு மைசூரில் கணவருடன் வசித்து வந்தார். தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு கருப்பையாவும், திவ்யாவும் ஊருக்கு வந்தனர். நேற்று மாலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்தனர்.

    அங்கு காய்கறிகள் வாங்கிவிட்டு கண்டுகுளம் நோக்கி புறப்பட்டனர். தாளமுத்தையா கோவில் அருகே சென்ற போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்தார்.

    அவர் கண் இமைக்கும் நேரத்தில் கருப்பையா மற்றும் திவ்யாவை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கணவன்-மனைவி இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக இறந்தார். திவ்யா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து திருமங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கத்தியால் குத்திவிட்டு தப்பியவர், திவ்யாவின் வீடு அருகே வசிக்கும் பாலமுருகன் (23) என தெரியவந்தது. போலீசார் அதிரடியாக செயல்பட்டு அவனை கைது செய்தனர்.

    திவ்யாவை ஒருதலையாக காதலித்ததாவும், அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்ததால் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாததால் கத்தியால் குத்தியதாகவும் பாலமுருகன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    திருமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு தலைக்காதல் சம்பவம் கொலையில் முடிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருதலைக்காதலில் மாணவி மீது திராவகம் ஊற்றப்பட்டதில் அவர் பலியானார்.

    திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையைச் சேர்ந்த சோலைராஜா மனைவி மணிமாலா (27). கணவரை பிரிந்து தனியாக வாழும் இவர், தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று வேலை முடிந்து மணிமாலா வீட்டுக்கு திரும்பியபோது அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (22) என்பவர் வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மணிமாலா சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×