என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
- பாளை மூன்றடைப்பை சேர்ந்தவர் பட்டுராஜா (வயது 35). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
- பனயங்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் (50) என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் திருட்டு போய் இருந்தது.
நெல்லை:
பாளை மூன்றடைப்பை சேர்ந்தவர் பட்டுராஜா (வயது 35). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் பார்த்த போது அதனை காணவில்லை. இதேப்போல் பனயங்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் (50) என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் திருட்டு போய் இருந்தது.
இதுதொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களை திருடிச் சென்ற நபர்களை தேடிவருகின்றனர்.
Next Story






