search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நெல்லை மாநகர பகுதியில் 10 ஆயிரம் காமிராக்கள் பொருத்தம்-துணை கமிஷனர் சீனிவாசன் பேட்டி
    X

    சி.சி.டி.வி. காமிரா இயக்கத்தை தொடங்கி வைத்து ஆய்வு செய்த துணை கமிஷனர் சீனிவாசன்.

    குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நெல்லை மாநகர பகுதியில் 10 ஆயிரம் காமிராக்கள் பொருத்தம்-துணை கமிஷனர் சீனிவாசன் பேட்டி

    • நெல்லை மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க 3-வது கண் எனப்படும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படுகிறது.
    • இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஒரு போக்குவரத்து காவலர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க 3-வது கண் எனப்படும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படுகிறது.

    ஏற்கனவே சந்திப்பு, டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற சம்பவங்கள் தடுக்கப் பட்டும், குற்றவாளிகள் விரைவில் அடையாளம் காணப்பட்டும் வருகிறது.

    இந்நிலையில் கொக்கிரகுளத்தில் இருந்து சமாதானபுரம் வரை மாநகர காவல்துறை சார்பில் 54 காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கான கட்டுப்பாட்டு அலுவலகம் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சி.சி.டி.வி. காமிராக்களின் இயக்கத்தை கிழக்கு மண்டல துணை கமிஷனர் சீனிவாசன் இன்று தொடங்கி வைத்தார்.

    அப்போது ஏட்டுகள் அருண் ஷோபா, கண்ணன் ஆகியோரை அழைத்து சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை இயக்கி வைக்குமாறு அறிவுறுத்தினார்.

    பின்னர் அவ்வழியாக ஹெல்மட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு சிறு பரிசுளும், இனிப்புகளும் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

    இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஒரு போக்குவரத்து காவலர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்.

    குற்ற சம்பவங்களை தடுக்க சி.சி.டி.வி. காமிராக்கள் அமைப்பது கட்டாயம் ஆகிவிட்டது.

    மாநகர பகுதி முழுவதும் 10 ஆயிரம் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரும். இதன்மூலம் மாநகரில் குற்ற சம்பவங்கள், போக்கு வரத்து விதிமீறல்கள் பெருமளவு குறைக்கப்படும்.

    போதை பொருட்கள் குறித்து பொதுமக்கள் 100 என்ற அவசர எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

    நாளை மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் மாநகர கமிஷனர் அவினாஷ் குமார் தலைமையில் துணை கமிஷனர் சீனிவாசன், சரவண குமார் மேற்பார்வையில் 6 உதவி கமிஷனர்கள், 24 இன்ஸ்பெக்டர்கள், 40 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    அஞ்சலி செலுத்த வருவோர் அமைதியான முறையில் காலை 9.15 மணி முதல் மாலை 5.15 வரை மரியாதை செலுத்தி செல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×