search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "charge"

    • ஜெர்மனி அதிகாரிகள் இடையே நடந்த உரையாடல் மூலம் நேட்டோ படையின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது.
    • ஜெர்மனி அதிகாரிகளின் ஆடியோ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து வருகிறது.

    ஆனாலும் போரில் ரஷியாவின் கையே ஓங்கி உள்ளது. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, நேட்டோ அமைப்பு தங்களது படைகளை அனுப்பினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியா எச்சரித்து உள்ளது.

    இந்த நிலையில் ரஷியாவின் கிரீமியா பாலத்தை ஏவுகணை மூலம் தாக்க ஜெர்மனி திட்டமிட்டதாக ரஷியா குற்றம் சாட்டியது. இது தொடர்பாக ஜெர்மனி ராணுவ அதிகாரிகள் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் கிரீமியா பாலத்தில் தாக்குதல் நடத்துவது குறித்து சாத்தியக் கூறுகள் ஜெர்மனி ராணுவ ஜெனரல்கள் விவாதித்த பதிவு இருப்பதாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

    நீண்ட தூர டாரஸ் ஏவுகணைகளை பயன்படுத்து வது உள்பட கிரிமீயா பாலத்தின் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஜெர்மனி ராணுவ அதிகாரிகள் பரிசீலித்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெர்மனி அதிகாரிகள் இடையே நடந்த உரையாடல் மூலம் நேட்டோ படையின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது.

    உக்ரைனில் நேட்டோ ராணுவ நடவடிக்கைகள் குறித்து ரஷியா உறுதியாக நம்புகிறது என்றார்.

    உக்ரைன் போரில் மற்ற நாடுகள், நேட்டோ அமைப்பு தலையிட கூடாது என்று ரஷியா எச்சரித்து வரும் நிலையில் ஜெர்மனி அதிகாரிகளின் ஆடியோ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது மிகவும் தீவிரமான விஷயம். இதனால் மிகவும் கவனமாகவும், தீவிரமாகவும் விரைவாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார். இதற்கிடையே ஆடியோ விவகாரம் தொடர்பாக முழு விசாரணைக்கு ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் உத்தரவிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஆடியோவில் மாற்றங்கள் செய்யப்பட்டதா? என்பது எங்களால் உறுதியாக கூற முடியவில்லை" என்றார்.

    • விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை நிறுவனங்கள் வழங்கவில்லை.
    • மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டினார்.

    விருதுநகர்

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு 14 வாரம் ஊதியம் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து மத்திய நிதி மந்திரிகளுக்கும், பிரதமர்களுக்கும் கடிதம் எழுதியும் உள்ளேன். இதன் எதிரொலியாக தற்போது 13 வாரங்களுக்கு மட்டும் ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்சினையை நடவடிக்கை எடுத்த மத்திய நிதி மந்திரிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனர். அவர்களுக்கு கடந்த 2020-21-ம் நிதியாண்டிற்கு பயிர் காப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்பட வில்லை. இந்த பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க படவில்லை. இதற்காக நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். பிரதமர் கிஷான் திட்டத்தில் மத்திய அரசு, மாநில அரசை தவிர்த்து நேரடியாக விவசாயிகளுக்கு நிதி அனுப்ப நடவடிக்கை எடுப்பது நல்ல நடைமுறையாகாது.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களை திருப்பி அனுப்பி உள்ளார். தமிழக அரசு அரசியல் சாசனப்படி இதற்காக சட்ட சபையை கூட்டி மசோதா தாக்கலை நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இப்பிரச்சி னையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டிய நேரம் வந்து விட்டது. சுதந்திர போ ராட்டத்தில் பழங்குடியினர் பங்கு குறித்து மாநில அரசு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கும்.

    விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் மத்திய நிதி மந்திரியின் நிகழ்ச்சிகள் பற்றி எனக்கு இதுவரை எந்த தகவலம் இல்லை. இதில் என்னை புறக்கணிப்பது மாவட்ட மக்களை புறக்கணிப்பது ஆகிறது. 5 மாநில சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, மீனாட்சி சுந்தரம், வக்கீல் சீனிவாகன், நாகேந்திரன், வெயிலுமுத்து மற்றும் பலர் உடனிருந்தனர்.

    100 நாள் தொழிலாளர்கள் மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு நன்றி

    விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு கடந்த 14 வார கால ஊதியம் வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மாணிக்கம் தாகூர் எம்.பி. கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக அவர் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தார். மேலும் போராட்டத்தையும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 13 வார கால ஊதியம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருதுநத்தத்தை சேர்ந்த 100 நாள் திட்ட பணியாளர் சகுந்தலா கூறுகையில், மாணிக்கம் தாகூர் எம்.பி.யின் நடவடிக்கையால் சம்பள நிலுவை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    பணித்தள பொறுப்பாளர் மகாலட்சுமி கூறுகையில், கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட சம்பள நிலுவை தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.13 வார கால நிலுவை தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இன்றும் சில நாட்களில் மீதியுள்ள சம்பள நிலுவை தொகையும் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குரல் கொடுத்த மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


    • நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
    • நகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.

    சேலம்:

    சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆக இருந்த கற்பகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாறுதல் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து காலியாக இருந்த நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.அவர் இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.

    • பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகையை தி.மு.க. அரசு வழங்குகிறது.
    • வருகிற நாடாளு மன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை அ.தி.மு.க.வுக்கு வழங்கி வெற்றிபெறசெய்ய வேண்டும்.

    மதுரை

    பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் அ.தி.மு.க. சார்பில் டி.எம்.கோர்ட் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    இந்த நாட்டின் பொதுக்களத்தில் நிற்கும் உரிமை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் அண்ணா, பெரியார். பெண்கள் பொது வாழ்க்கையில் வரவும் வித்திட்டவர்கள் இவர்கள்தான். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை உருவாக்கியவர் அண்ணா. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று பெயர் பெற்றவர். தி.மு.க. அண்ணாவால் உருவாக்கப்பட்டது. ஐம்பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்டது தி.மு.க.

    அண்ணா இருக்கும் வரை கலைஞரை முன்னி லைப்படுத்தவில்லை. தாய் எப்படி அனைத்து பிள்ளை களையும் ஒரே மாதிரி வளர்ப்பாரோ அதுபோல் தான் அண்ணா அனை வரையும் ஒன்றாக நினைத்தார். பல தலைவர்களை உருவாக்கிய பெருமை அண்ணாவிற்கு உண்டு.

    தற்போது அரசியல் தலைவர்கள் நட்சத்திர விடுதிகளில் தங்கி பிரசாரம் செய்கிறார்கள், சுற்றுப் பயணம் செய்கிறார்கள். ஆனால் பட்டினி கிடந்து தொண்டர் வீட்டில் தங்கி கட்சியை வளர்த்தவர் அண்ணா. தி.மு.க.வை வளர்த்தவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து பிரிந்து வந்த பிறகு அ.தி.மு.க.வை உருவாக்கினார். இருப்பினும் அண்ணாவை நினைவு கூறும் வகையில் அ.தி.மு.க.வின் கொடியில் அண்ணா உருவ படத்தை பொறித்தார். இறந்தும் இறைவனாக எம்.ஜி.ஆர். இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

    அண்ணா, எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா யாரும் வாரிசு அரசியல் செய்யவில்லை. தன்னுடைய வாரிசுகளை கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. காலத்தில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் தற்போது தி.மு.க. ஆட்சியில் மூடு விழா கண்டுள்ளது.

    மதுரையில் 2 அமைச்சர்கள் இருக்கி றார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

    தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கலாம். 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்து இருக்கிறார்கள். இன்னும் 6 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அதற்காகத்தான் கொடுக்கிறார்கள்.

    வாக்குறுதிகள் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பாராளுமன்ற தேர்தலுக்காகவே பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமையை தொகையை தி.மு.க. அரசு வழங்குகிறது. பொம்மை முதலமைச்சராகவே அவர் இருக்கிறார். பிறர் எழுதிக் கொடுப்பதை பேசுகிறார்.

    தி.முக. ஆட்சியை விரைவில் பொதுமக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். வருகிற நாடாளு மன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை யான வாக்குகளை அ.தி.மு.க.வுக்கு வழங்கி வெற்றிபெறசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கான அறிவிப்பை மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் பிரேம் அறிவித்து உள்ளார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர், பா.ஜ.க.வின் இளைஞர் அணி மாவட்ட பொதுசெயலாளராக அறிவிக்கபட்டு உள்ளார்

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதல்படி, மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆலோசனைபடி இதற்கான அறிவிப்பை மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் பிரேம் அறிவித்து உள்ளார்.

    பா.ஜ.க மாவட்ட இளைஞர் அணி மாவட்டபொது செயலாளராக பொறுப்பேற்று உள்ள காட்டேரி பிரகாஷ்சுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குழப்பத்தின் மொத்த வடிவம் என்று முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
    • தி.மு.க. கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகிறது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு ஒரு கோடி பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப் படும் என்று அறிவித்து 7,000 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனை வருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்குவோம் என வாக்கு றுதியை அளித்தனர்.தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. இந்த குடும்ப அட்டைகளில் உள்ள பெண்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

    ஆனால் ஆட்சி பொறுப் பேற்றவுடன் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்ற குழப்பத்தை முதலில் ஏற்படுத்தினர். தற்போது மேலும் பல நிபந்தங்களை விதித்துள்ள னர்.

    அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விண் ணப்பத்தை கொடுத்து விட்டு, தற்போது தகுதி உள்ளவர்கள் என கூறுவது ஒரு முரண்பாடு ஏற்பட்டுள் ளது. ஒரு கோடி பேருக்கு வழங்குவோம் என்று அறி வித்துவிட்டு, 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டை களுக்கு விண்ணப்பம் வழங்கி, தற்போது பல நிபந்தனைகளை விதித்து இருப்பது குழப்பத்தின் மொத்த வடிவமாக உள்ளது.

    முதலில் அனைவருக்கும் வழங்குவோம் என முதலில் அறிவித்துவிட்டு, அதனை தொடர்ந்து தகுதி உள்ள வர்களுக்கு வழங்குவோம் என்று அறிவித்துவிட்டு, தற்போது பல நிபந்தங்களை விதிப்பது குழப்பத்தின் மொத்த வடிவமாக உள்ளது. திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகிறது. அதுபோல மகளிர் உரிமைத் திட்டத்தில் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கலால் வரி செலுத்தாமல் தமிழகத்தில் 24 மணி நேரமும் தடையின்றி மது விற்பனை செய்யப்படுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
    • இந்த 24x7 மது விற்பனையால் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆகவே இதனை சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் டாஸ்மார்க் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது. டாஸ்மாக் மது விற்பனை நிலையங்களை பயன்படுத்தி இன்றைக்கு, ஊழலுக்கான யுக்தியை தி.மு.க. அரசு கையாண்டு வருகிறதோ என்கிற மிகப்பெரிய ஒரு கேள்விக்குறி எழுந்துள்ளது.

    மாநிலத்தில் பல மாவட்டங்களுக்கு பார்கள் ஒதுக்கீடு செய்வதற்கான டெண்டர் தொடர்பான, வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசார ணையில் உள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக யாருக்கும் பார்கள் உரிமைகளை, அரசு இன்னும் வழங்கவில்லை என்கிற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

    சட்டவிரோதமாக பார்களில், மதுபானங்கள் அதிக விலைக்கு 24 மணி நேரமும் தடையின்றி விற்கப்பட்டு வருக்கின்றன. இதனால் அரசின் கஜானாவிற்கு செல்ல வேண்டிய வரிப்பணம், இந்த துறையின் அமைச்சருக்கு சொல்லுகிறதோ என்று தி.மு.க. கட்சிக்காரர்களே பேசிகொள்கிற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

    மது உற்பத்தியாளர்கள் கலால் வரியை முறையாக செலுத்தாமல், மதுபானங்கள் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன என்பது அதிர்ச்சி தகவலாக இருக்கிறது.

    அதாவது ஹாலோகிராம் அச்சடிக்கப்படாததால், கலால் வரியை செலுத்தப் படாமல் அரசுக்கு கணக்கில் வராமல் மது பானங்கள் கடத்தப்படுகின்றன. கணக்கில் வராத இந்த மதுபானங்கள் சட்ட விரோதமாக நடத்தப்படும் பார்களை சென்றடைகிறது. இதன் மூலம் வரக்கூடிய பணம் முழுவதும் தனிப்பட்ட முறையில் ஆட்சி யாளர்களுக்கு செல்கிறது.

    இது அரசின் கஜானாவுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி ஆதாரத்தோடு புள்ளிவிவரத்தோடு தெரிவித்துள்ளார்.

    மதுரை ஐகோர்ட்டு கிளையில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும், அரசு 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கப்படவில்லை என்று உறுதிப்படுத்த வேண்டும், அதேபோன்று நேரத்தையும் முறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது.

    24x7 என்று மருத்துவத்திற்கு தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் மது விற்பனைக்கு 24x7 நாம் பார்த்ததில்லை இதை தமிழகத்தில் கண்டு இன்றைக்கு சிரிப்பாய் சிரிக்கிறது.

    • நெல்லை மாநகர கிழக்கு மண்டல புதிய போலீஸ் துணை கமிஷனராக சீனிவாசன் பதவியேற்றுக்கொண்டார்.
    • போலீஸ் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர கிழக்கு மண்டல புதிய போலீஸ் துணை கமிஷனராக இன்று சீனிவாசன் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றார்.

    அதன்பின்னர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், வல்லம், கும்பகோணம், தென்காசி, திருச்சி, கோட்டை, பொன்மலை ஆகிய இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றி உள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.

    2021-ம் ஆண்டு நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனராகவும், பின்னர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், அதன் பின்னர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றினார்.

    இவர் பணி காலத்தில் அண்ணா பதக்கம் மற்றும் அத்திவரதர் பதக்கம் பெற்றுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டனர்.

    டெல்லி காங்கிரஸ் தலைவராக முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். #SheilaDikshit #DelhiCongress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவராக பொறுப்பு வகித்து வந்த அஜய் மக்கான் உடல் நலக்குறைவால் சமீபத்தில் பதவி விலகினார். இதையடுத்து, டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் (வயது 80), புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதவியேற்பு நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான ராஜீவ் பவனில் நடைபெற்றது. அப்போது, டெல்லி காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் பொறுப்பேற்றுக் கொண்டார். 

    இதேபோன்று தேவேந்தர் யாதவ், ஹரூண் யூசுப் மற்றும் ராஜேஷ் லிலோத்யா ஆகிய 3 பேரும் புதிய செயல் தலைவர்களாக தீட்சித்துடன் பொறுப்பேற்று கொண்டனர். விழாவில், கட்சியின் மூத்த தலைவர்கள் கரண் சிங், ஜனார்த்தன் திவேதி, மீரா குமார், பிசி சாக்கோ, சந்தீப் தீக்சித், அஜய் மக்கான் ஆகியோர் பங்கேற்றனர்.

    டெல்லியில் காங்கிரஸ் கட்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக கூறிய தீட்சித், இதற்கு அடிமட்ட தொண்டர்களின் உதவி வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  மேலும், பாராளுமன்றத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற முழு முயற்சியுடன் காங்கிரஸ் கட்சி பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.

    ஷீலா தீட்சித் பதவியேற்பு விழாவில், கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றவாளியான ஜெகதீஷ் டைட்லரும் கலந்து கொண்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. #SheilaDikshit #DelhiCongress
    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.15 லட்சம் வரை கட்டண பாக்கி உள்ளதால் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். இதானால் பணிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன.
    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் பகுதியில் புதிய கலெக்டர் அலுவலகம் உள்ளது. இங்கு வருவாய்த்துறை, பஞ்சாயத்துத்துறை, தமிழ்த்துறை, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன.

    இங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்குள்ள துறைகளில் கம்ப்யூட்டர்கள் மூலம் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் மின் இணைப்புக்கான கட்டணம் பல மாதங்களாக கட்டப்படாமல் இருந்தது. ரூ.15 லட்சம் வரை கட்டண பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்துக்கு மின்வாரியம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை.

    மின்சார கட்டணம் கட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று மாலை மின்வாரிய ஊழியர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அந்த கட்டிடத்திற்கான மின் இணைப்பை துண்டித்தனர். உடனே அங்கிருந்த அதிகாரிகள் மின் ஊழியர்களிடம், மின் இணைப்பை ஏன் துண்டித்தீர்கள் என கேட்டனர்.

    அதற்கு அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பல மாதங்களாக மின் கட்டணம் கட்டப்படாமல் இருந்தது. அதனால் மின் இணைப்பை துண்டித்துள்ளோம் என்றனர்.

    மின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் இயங்கிய பல துறைகளின் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன்று 2-வது நாளாகவும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. பணிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர்கள் அனைத்தும் செயலிழந்தன. ஊழியர்கள் பணியில் ஈடுபட முடியாமல் தவித்து வருகிறார்கள். #tamilnews
    சென்னையில் 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்சார கார், பைக்குகளுக்கு ‘சார்ஜ்’ ஏற்றும் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. #MetroTrain #ChennaiMetro
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வரை சுரங்கபாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. பயணிகள், பொதுமக்களிடையே பெரிதும் வரவேற்பு ஏற்பட்டதையொட்டி மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணிகள், பொதுமக்கள் தினமும் 55 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் உள்பட அனைவரும் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.

    மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு பெரும்பாலான பயணிகள் மின்சார கார், பைக்குகளில் வருகிறார்கள். அங்குள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காகவும், சுற்றுச்சூழல் பசுமையை பாதுகாக்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் நிறுவனம் மின்சார கார், பைக்குகளுக்கு ‘சார்ஜ்’ ஏற்றும் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.


    திருமங்கலம், செயின்ட் தாமஸ்மவுண்ட், கோயம்பேடு, ஆலந்தூர் ஆகிய 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்சார ‘சார்ஜ்’ நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 10 பைக்குகள், 5 கார்களுக்கு மின்சார ‘சார்ஜ்’ செய்யும் வசதி உண்டு.

    முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மகேந்திரா மற்றும் ஓலா, உபர், டூரிஸ்ட், வாடகை கார் நிறுவனங்கள் மின்சார கார்களை இயக்கி வருகின்றனர். இந்த கார் நிறுவனங்கள் மின்சார சார்ஜ் நிலையங்களை பெரிதும் வரவேற்றுள்ளன.

    திருமங்கலம், ஏர்போர்ட் மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாடகை டூவிலர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டி பெப் பிளஸ் உள்ளிட்ட மோட்டார் சைக்கிள்கள் மணிக்கு ரூ.75 வீதம் வாடகைக்கு விடப்படுகிறது. டூவீலர்களை வாடகைக்கு எடுத்து செல்ல ரூ.2 ஆயிரம் முன் பணமாக வைப்பு தொகை செலுத்த வேண்டும். #MetroTrain #ChennaiMetro
    சென்னை மெட்ரோ ரெயிலில் 5 நாட்களில் சுமார் 6½ லட்சம் பயணிகள் இலவசமாக பயணம் செய்துள்ள நிலையில் இன்று முதல் மீண்டும் கட்டண பயணம் செயல்படுத்தப்பட்டது. #MetroTrain #ChennaiMetro
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் பயணத்தை பயணிகளிடம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலவச பயண அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டது.

    மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக இருந்ததால் ஏழை, நடுத்தர மக்கள் அதில் பயணம் செய்ய தயங்கிய நிலையில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டதையொட்டி கூட்டம் அலை மோதியது.

    முதலில் 3 நாட்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களின் ஆர்வத்தை பார்த்து மேலும் 2 நாட்களுக்கு சலுகை நீட்டிப்பு செய்யப்பட்டது. குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் மெட்ரோ ரெயிலில் சொகுசு பயணத்தை அனுபவிக்க திரண்டனர்.

    சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை குடும்பமாக பயணம் செய்து நேரத்தை செலவிட்டனர். விடுமுறை நாட்கள் தவிர வேலை நாட்களில் கூட இலவச பயணம் நீட்டிக்கப்பட்டதால் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், கம்பெனிகளில் வேலை செய்பவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என பலரும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.

    5 நாட்களில் 6 லட்சத்து 41 ஆயிரம் பேர் இலவசமாக பயணம் செய்திருப்பதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரெயிலில் உள்ள வசதிகள், பாதுகாப்பு, இணைப்பு போக்குவரத்து வசதி, நேரம் மிச்சப்படுதல் போன்றவற்றை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த இலவச பயணம் அறி விக்கப்பட்டிருந்தது.

    இதன் மூலம் மெட்ரோ ரெயிலில் கட்டணம் கொடுத்து வழக்கமாக பயணம் செய்வோரின் எண்ணிக்கை உயரும் என்ற எதிர்பார்ப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    5 நாட்கள் இலவச பயணத்திற்கு பிறகு இன்று மீண்டும் கட்டண பயணம் செயல்படுத்தப்பட்டது. இன்று எவ்வளவு பேர் பயணம் செய்கிறார்கள் என்பதை மெட்ரோ நிர்வாகம் கணக்கெடுக்கிறது. இலவச பயணம் மூலம் விழிப்புணர்வு பெற்று பயணிகள் மெட்ரோ ரெயிலை அதிகம் பயன்படுத்துகிறார்களா என்று ஆய்வு செய்கிறார்கள்.

    மெட்ரோ ரெயிலில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.10 ஆகவும் அதிகபட்சமாக ரூ.70 ஆகவும் உள்ளது. திட்டச் செலவு, பராமரிப்பு செலவு ஆகியவற்றை கணக்கிட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


    இது மற்ற நகரங்களை விட அதிகமாக இருப்பதாகவும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் பொது மக்கள் வலியுறுத்தினார்கள்.

    ஆனால் கட்டணத்தை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும் திட்டம் முழுமையாக பயன்பட்டிற்கு வரும் போது பயணிகள் எண்ணிக்கை உயரும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

    பயணிகள் எண்ணிக்கை உயரும் போது தான் மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகையை சரி செய்ய முடியும். கட்டணத்தை குறைத்து வருவாயை பெருக்குவதே சிறந்த வணிக யுக்தியாகும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். #MetroTrain #ChennaiMetro
    ×