search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attendance Record"

    • கொரோனா தொற்று தொடங்கியதால் பயோமெட்ரி எந்திரம் மூலம் கொரோனா பரவும் என்பதால் பயோமெட்ரிக் முறையை தமிழக அரசு நிறுத்தி வைத்தது.
    • இந்த நிலையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை, அனைத்து வகை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவை பிறப்பித்துள் ளது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளி லும் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் ஆசிரியர்கள் வருகை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது.

    2020-ம் ஆண்டு மார்ச் இறுதியில், கொரோனா தொற்று தொடங்கியதால் பயோமெட்ரி எந்திரம் மூலம் கொரோனா பரவும் என்பதால் பயோமெட்ரிக் முறையை தமிழக அரசு நிறுத்தி வைத்தது.

    இந்த நிலையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை, அனைத்து வகை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவை பிறப்பித்துள் ளது. . அதில் 3½ வருடங்க ளுக்கு முன்னர் பள்ளி களுக்கு வழங்கப்பட்ட பயோமெட்ரிக் எந்திரங்கள் எத்தனை? அதில் எத்தனை இயங்குகின்றன? எத்தனை இயங்கவில்லை? என்ற விவரத்தை அவசரமாக கேட்டுள்ளது.

    கேட்ட சில மணி நேரங்க ளிலே பயோமெட்ரிக் எந்திரங்களை அந்தந்த கல்வி அலுவலர்கள் பெற்று மாவட்ட அலுவலகங்களில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக முழு வதும் கொரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப் பட்டதால் தற்போது பள்ளி களில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இதன் மூலம் ஆசிரி யர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதை சென்னையில் இருந்தபடி கண்காணிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் தலைமையாசிரியர்க ளுக்கான கூட்டம் நடைப்பெற்றது.
    • ்கூட்டத்தில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர், மாணவர் வருகை பதிவேட்டை சரியாக பராமரிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    டாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளி தலைமையாசிரியர்க ளுக்கான கூட்டம் வலங்கை மான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி தலைமையில் நடைப்பெற்றது.

    ்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தலைமையா சிரியர்களுக்கு பள்ளி வயது குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்த்தல், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இறுதி வகுப்பை முடித்த மாணவர்கள் மேல்வகுப்பில் சேர்ந்துள்ளதை உறுதி செய்தல், மாணவர் சேர்க்கை.

    நீக்கல் விபரங்களை எமிஸ் தளத்தில் சரியாக பதிவு செய்தல், ஆசிரியர் , மாணவர் வருகைப் பதிவேட்டை சரியாக பராமரிப்பது, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்வது,ஆசிரியர் தினசரி பாடக்குறிப்புகளை தயார் செய்வது,மாண வர்களின் தமிழ்,ஆங்கிலம் வாசிப்பு த்திறனை மேம்படு த்துவது, மாணவ ர்களின் கற்றல் திறன் வெளிப்பாடுகளை சரியாக கண்காணிப்பது.ஜாலி போனிக்ஸ் மூலம் ஆங்கிலம் கற்பிப்பது , கணிதம் கற்றல் திறனை மேம்படுத்துவது ,எழுத்துப் பயிற்சி அளிப்பது, பள்ளியின் அனைத்துப் பதிவேடுகளையும் சரியாக வைத்துக்கொள்வது, இல்லம் தேடி கல்வித்திட்டத்தை மேற்பார்வை செய்யது, பள்ளிகளின் வளாகம் , வகுப்பறை,கழிவறை ஆகியவற்றை தூய்மையாக பராமரிப்பது ஆகியவை களை சரியாக வைத்து க்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    ×