search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்
    X

    பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடந்தது.

    பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்

    • வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் தலைமையாசிரியர்க ளுக்கான கூட்டம் நடைப்பெற்றது.
    • ்கூட்டத்தில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர், மாணவர் வருகை பதிவேட்டை சரியாக பராமரிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    டாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளி தலைமையாசிரியர்க ளுக்கான கூட்டம் வலங்கை மான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி தலைமையில் நடைப்பெற்றது.

    ்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தலைமையா சிரியர்களுக்கு பள்ளி வயது குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்த்தல், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இறுதி வகுப்பை முடித்த மாணவர்கள் மேல்வகுப்பில் சேர்ந்துள்ளதை உறுதி செய்தல், மாணவர் சேர்க்கை.

    நீக்கல் விபரங்களை எமிஸ் தளத்தில் சரியாக பதிவு செய்தல், ஆசிரியர் , மாணவர் வருகைப் பதிவேட்டை சரியாக பராமரிப்பது, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்வது,ஆசிரியர் தினசரி பாடக்குறிப்புகளை தயார் செய்வது,மாண வர்களின் தமிழ்,ஆங்கிலம் வாசிப்பு த்திறனை மேம்படு த்துவது, மாணவ ர்களின் கற்றல் திறன் வெளிப்பாடுகளை சரியாக கண்காணிப்பது.ஜாலி போனிக்ஸ் மூலம் ஆங்கிலம் கற்பிப்பது , கணிதம் கற்றல் திறனை மேம்படுத்துவது ,எழுத்துப் பயிற்சி அளிப்பது, பள்ளியின் அனைத்துப் பதிவேடுகளையும் சரியாக வைத்துக்கொள்வது, இல்லம் தேடி கல்வித்திட்டத்தை மேற்பார்வை செய்யது, பள்ளிகளின் வளாகம் , வகுப்பறை,கழிவறை ஆகியவற்றை தூய்மையாக பராமரிப்பது ஆகியவை களை சரியாக வைத்து க்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    Next Story
    ×