search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student admission"

    • ஜிப்மரின் மாணவர் சேர்க்கை, 2 ஆண்டுகளுக்கு முன்னர் 62 ஆக உயர்த்த ப்பட்டது.
    • 62 லிருந்து, மத்திய அரசின் மற்ற புதிய மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல 150 ஆக உயர்த்த ஆவன செய்ய வேண்டும்.

     புதுச்சேரி:

    காரைக்கால் ஜிப்மர் உயர்சிகிச்சை மருத்துவக் கல்லூரிக்கான முன்னாள் ஆலோசகர் மோகன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் மன்சுக் மாண்டாவியாவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:-

    2016-ல் சுமார் 50 மாணவர்களுடன் துவ ங்கப்பட்ட காரைக்கால் ஜிப்மரின் மாணவர் சேர்க்கை, 2 ஆண்டுகளுக்கு முன்னர் 62 ஆக உயர்த்த ப்பட்டது. 506 படுக்கைகள் கொண்ட காரைக்கால் மாவட்ட அரசு மருத்துவமனை மாண வர்களின் பயிற்சிக்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மாணவ மற்றும் மாணவியர் விடுதிகள் புதுச்சேரி அரசின் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது.

    தற்போது ரூ.460 கோடி செலவில் கல்லூரி மற்றும் நிர்வாக வளாக கட்டிடம், மாணவர் விடுதிகள், மாணவியர் விடுதிகள், டீன், பேராசிரியர்கள், மருத்து வர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கான வீடுகள் மற்றும் குடியிருப்புகள், உணவுக்கூடங்கள் மற்றும் சமையல் கூடங்கள் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு போதுமான அறைகள் கொண்ட மாணவர் விடுதி களும் முழுமையாக உபயோ கப்படுத்தப்பட உள்ளது. காரைக்கால் ஜிப்மரின் மாணவர் சேர்க்கையை எதிர்வரும் கல்வியாண்டிலேயே தற்போதைய 62 லிருந்து, மத்திய அரசின் மற்ற புதிய மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல 150 ஆக உயர்த்த ஆவன செய்ய வேண்டும். இதன் மூலம் காரைக்கால் உட்பட புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட ப்ப்பட்டுள்ளது.

    • 22 பாடப்பிரிவுகளுக்கு 864 இடங்கள் உள்ளன.
    • 30-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை பிற மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை, தமிழ், ஆங்கில இலக்கியம் உட்பட இளநிலையில் மட்டுமே 22 பாடப்பிரிவுகளுக்கு 864 இடங்கள் உள்ளன.சேர்க்கைக்கான பதிவுகளை www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். சேர்க்கைக்கான பதிவுக்கு மே 19 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் வருகிற 26ம் தேதி வெளியிடப்படுகிறது. தொடர்ந்து 29-ந் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், 30-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை பிற மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.

    • இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20,22-ந்தேதிகளில் நடந்தது.
    • விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்கலாம்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியில் சேர www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20 மற்றும் 22-ந்தேதிகளில் நடந்தது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். இதில் இடம் கிடைக்காத மாணவர்கள் அனைவரும் வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கண்டிப்பாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இளம் அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம், இயற்பியில், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் சில இடங்கள் உள்ளன. இளங்கலை பாடப்பிரிவுகளான ஆங்கிலம், பொருளியல், பி.காம். போன்றவற்றிலும் சில இடங்கள் உள்ளன. எனவே இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளை மறுநாளுக்குள் (வியாழக்கிழமை) விண்ணப்பித்து, வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு நடைபெறும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவிபெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் மாணவர்கள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
    • நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பபதிவு கடந்த 8-ந் தேதி தொடங்கியது.

    சேலம்:

    தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான இளங்கலை பாடப்பிரிவுகள் பயிற்று விக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பபதிவு கடந்த 8-ந் தேதி தொடங்கியது.

    சேலம், நாமக்கல்...

    சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் www.tngasa.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு, கல்லூரிகளில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப் பட்டுள்ள பேராசிரியர்கள், கணினி மூலம் மாண வர்களின் விண்ணப்பங் களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

    கல்லூரிகளில் திரண்டனர்

    இதனிடையே விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 19-ந்தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் 3 நாட்கள் கூடுதல் அவகாசம் தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை வழங்கியது. அதாவது இன்று (22-ந்தேதி) வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இன்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பிப்தற்காக மாணவ- மாணவிகள் கல்லூரிகளில் திரண்டனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. 

    • நெடுமானூர் காலனி பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • ஊர்வளத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள்,பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் நெடுமானூர் காலனி பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். ஆசிரியர் சிட்டிபாபு வரவேற்றார். அரசின் பிரச்சார வாகனம் ஊரைச்சுற்றி பிரச்சாரம் செய்தது. இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மாணவர் சேர்க்கை முழக்கங்களை முழங்கினார். ஊர்வளத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள்,பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் தலைமையாசிரியர்க ளுக்கான கூட்டம் நடைப்பெற்றது.
    • ்கூட்டத்தில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர், மாணவர் வருகை பதிவேட்டை சரியாக பராமரிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    டாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளி தலைமையாசிரியர்க ளுக்கான கூட்டம் வலங்கை மான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி தலைமையில் நடைப்பெற்றது.

    ்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தலைமையா சிரியர்களுக்கு பள்ளி வயது குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்த்தல், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இறுதி வகுப்பை முடித்த மாணவர்கள் மேல்வகுப்பில் சேர்ந்துள்ளதை உறுதி செய்தல், மாணவர் சேர்க்கை.

    நீக்கல் விபரங்களை எமிஸ் தளத்தில் சரியாக பதிவு செய்தல், ஆசிரியர் , மாணவர் வருகைப் பதிவேட்டை சரியாக பராமரிப்பது, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்வது,ஆசிரியர் தினசரி பாடக்குறிப்புகளை தயார் செய்வது,மாண வர்களின் தமிழ்,ஆங்கிலம் வாசிப்பு த்திறனை மேம்படு த்துவது, மாணவ ர்களின் கற்றல் திறன் வெளிப்பாடுகளை சரியாக கண்காணிப்பது.ஜாலி போனிக்ஸ் மூலம் ஆங்கிலம் கற்பிப்பது , கணிதம் கற்றல் திறனை மேம்படுத்துவது ,எழுத்துப் பயிற்சி அளிப்பது, பள்ளியின் அனைத்துப் பதிவேடுகளையும் சரியாக வைத்துக்கொள்வது, இல்லம் தேடி கல்வித்திட்டத்தை மேற்பார்வை செய்யது, பள்ளிகளின் வளாகம் , வகுப்பறை,கழிவறை ஆகியவற்றை தூய்மையாக பராமரிப்பது ஆகியவை களை சரியாக வைத்து க்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    • பெற்றோர்கள் 5 வயது நிரம்பிய தமது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து பயனடையுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கப்பட்ட பேரணி பஸ் நிலையம் வரை சென்றடைந்தது.

    திருவையாறு:

    திருவையாறில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கப்பட்ட பேரணி பஸ் நிலையம் வரை சென்றடைந்தது.

    இப்பேரணியில் திருவையாறு தாசில்தார் பழனியப்பன், தனி தாசில்தார் பூங்கொடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார், திருவையாறு ஊராட்சி ஒன்றித் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 200 மாணவர்கள் மற்றும் 66 ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டு, பெற்றோர்கள் 5 வயது நிரம்பிய தமது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து பயனடையுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இப்பேரணிக்கான ஏற்பாடுகளை திருவையாறு ஊராட்சி ஒன்றியம் மற்றும் தொடக்கக் கல்வித் துறையினர் செய்திருந்தனர்.

    • கடலூர் மாவட்டத்தில் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
    • அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் இணையதளத்தில் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

     கடலூர்:                               

    கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் நெய்வேலி தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2022 ஆம் ஆண்டு பயிற்சியாளர்கள் சேர்க்கை இணையவழிக் கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது.

    இதற்காக இணையதளம் வாயிலாக கடந்த 24- ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர் இந்ந வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் இணையதளத்தில் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாணவர்களின் விண்ணப்பங்கள் அடிப்படையில் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இதே இணையதளத்தில் வெளியிடப்படும். தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோரும் ரூ.750 - உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப்பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு செய்திடும் பொருட்டு கைக்கருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது.

    மேலும் பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய ஜூலை 20 ந்தேதி கடைசி நாளாகும்.

    இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 04142 - 290273 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாயை விண்ணப்பதாரர் செலுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது.
    • நகர பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பெற்றோர்களை மாணவர்கள் அதிகளவில் சேர்க்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது.

    கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 23-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 13-ந் தேதி தொடங்கி நடக்கிறது.

    நகர பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பெற்றோர்களை மாணவர்கள் அதிகளவில் சேர்க்கின்றனர்.

    1-ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து வருகின்றனர். மாற்று சான்றிதழ், தேர்ச்சி சான்றிதழ் தேவையில்லை என்பதால் எளிதில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஏற்கனவே கடந்த 2 ஆண்டாக கொரோனவால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர்.

    இதனால் அரசு பள்ளிகளுக்கு கூடுதலாக மவுசு ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுவதும்,

    சி.பி.எஸ்.இ பாடத்திட்டம், ஆங்கில வழிக்கல்வி ஆகியவையும் பெற்றோர்களிடம் அரசு பள்ளிகள் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

    அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த கல்வியாண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி வட்டாட்சியர் அலுவலகம்,பேருந்து நிலையம் வழியாக புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியை வந்தடைந்து.

    அரவேணு:

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தலின்படி நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் வழிகாட்டுதலின் படி கோத்தகிரி வட்டாரத்தில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி வட்டாட்சியர் அலுவலகம்,பேருந்து நிலையம் வழியாக புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியை வந்தடைந்து. நிகழ்ச்சிக்கு கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி தலைமை தாங்கினார்.

    வட்டார கல்வி அலுவலர் பாலமுருகன், சுப்ரமணி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜ்குமார் பேரணியின் முக்கிய அம்சங்களை விளக்கி பேசினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன், காவல்துறை உதவி ஆய்வாளர் அன்பழகன், குன்னூர் ஜெ.சி.ஐ. அமைப்பு தலைவர் பாவனா, எப்.பி.டி. தன்னார்வ அமைப்பு ஜோசப், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தன், ஹேரி உத்தம் சிங், தன்னார்வலர்கள் நிர்மலா யமுனா உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர்களுக்கு கோத்தகிரி நெல்லை கண்ணன் அவர்கள் குளிர்பானம் வழங்கினார்.

    • அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை.
    • விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. இதனை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நெல்லை கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் டைட்டன்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் தொடக்க கல்வி இயக்கத்தின் சார்பாக முதன்மை கல்வி அலுவலகத்தின் மூலம் ஊராட்சி, ஒன்றியம், நகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர்களை அரசு பள்ளிகள் சேர்த்து படிக்கும் வகையில் இல்லம் தேடி சென்று பெற்றோர்களை சந்தித்தல் மற்றும் அரசு பள்ளியில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சி மூலம் 5 வயதுக்கு மேற்பட்ட 5521 குழந்தைகளும், ஆறாம் வகுப்பிற்கு 4564 மாணவர்களும், ஒன்பதாம் வகுப்பிற்கு 5651 மாணவர்களும், பிளஸ்-1 வகுப்பிற்கு 6193 மாணவர்களும் அரசு பள்ளியில் சேர்ந்து பயன் அடைவார்கள்.

    இந்த விழிப்புணர்வு மூலம் பொதுமக்களை சந்தித்து அரசு பள்ளியில் மாணவர்கள் படித்தால் வரக்கூடிய இலவச கல்வி, உயர்கல்வியில் இட ஒதுக்கீடு மற்றும் நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளில் சிறப்பு பயிற்சி பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மாணவர்கள் எவ்வாறு தங்களது தனித் திறமையை வளர்க்க வேண்டும். நுழைவு தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்தும் விளக்கப்படும்.

    இந்த விழிப்புணர்வு வாகன பேரணி வண்ணார்பேட்டை, புதிய பஸ் நிலையம், பாளை பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் பொது மக்களின் பார்வைக்கு நின்று செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் அரசு பள்ளிகளில் உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்ப ட்டதை அடுத்து மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை கீழராஜ வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது.

    அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்க ப்பட்டன. முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நடவடிக்கையால் அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். பல பெற்றோரும்தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ .1000 வழங்குதல் என்பன உள்ளிட்ட

    பல்வேறு சலுகை களை முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அறிவித்து ள்ளார். மேலும் அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் அரசு பள்ளிகளில் உள்ளன. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த பள்ளியில் கூட முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகளவில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது உடன் மாவ ட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி இருந்தார்.

    ×