காரைக்கால் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில், மாணவர் சேர்க்கையை 150 ஆக உயர்த்த வேண்டும்: அமைச்சருக்கு கோரிக்கை

ஜிப்மரின் மாணவர் சேர்க்கை, 2 ஆண்டுகளுக்கு முன்னர் 62 ஆக உயர்த்த ப்பட்டது. 62 லிருந்து, மத்திய அரசின் மற்ற புதிய மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல 150 ஆக உயர்த்த ஆவன செய்ய வேண்டும்.
காரைக்கால் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில், மாணவர் சேர்க்கையை 150 ஆக உயர்த்த வேண்டும்: அமைச்சருக்கு கோரிக்கை
Published on

 புதுச்சேரி:

காரைக்கால் ஜிப்மர் உயர்சிகிச்சை மருத்துவக் கல்லூரிக்கான முன்னாள் ஆலோசகர் மோகன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் மன்சுக் மாண்டாவியாவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:-

2016-ல் சுமார் 50 மாணவர்களுடன் துவ ங்கப்பட்ட காரைக்கால் ஜிப்மரின் மாணவர் சேர்க்கை, 2 ஆண்டுகளுக்கு முன்னர் 62 ஆக உயர்த்த ப்பட்டது. 506 படுக்கைகள் கொண்ட காரைக்கால் மாவட்ட அரசு மருத்துவமனை மாண வர்களின் பயிற்சிக்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மாணவ மற்றும் மாணவியர் விடுதிகள் புதுச்சேரி அரசின் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது.

தற்போது ரூ.460 கோடி செலவில் கல்லூரி மற்றும் நிர்வாக வளாக கட்டிடம், மாணவர் விடுதிகள், மாணவியர் விடுதிகள், டீன், பேராசிரியர்கள், மருத்து வர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கான வீடுகள் மற்றும் குடியிருப்புகள், உணவுக்கூடங்கள் மற்றும் சமையல் கூடங்கள் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு போதுமான அறைகள் கொண்ட மாணவர் விடுதி களும் முழுமையாக உபயோ கப்படுத்தப்பட உள்ளது. காரைக்கால் ஜிப்மரின் மாணவர் சேர்க்கையை எதிர்வரும் கல்வியாண்டிலேயே தற்போதைய 62 லிருந்து, மத்திய அரசின் மற்ற புதிய மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல 150 ஆக உயர்த்த ஆவன செய்ய வேண்டும். இதன் மூலம் காரைக்கால் உட்பட புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட ப்ப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com