என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அரசுத் தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3.94 லட்சமாக அதிகரிப்பு  - அமைச்சர் அன்பில் மகேஸ்
    X

    அரசுத் தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3.94 லட்சமாக அதிகரிப்பு - அமைச்சர் அன்பில் மகேஸ்

    • திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • அனைவரும் வருக! கல்வியின் வழியே அறிவுலகை ஆள்க!

    தமிழ்நாடு அரசுத் தொடக்கப்பள்ளிகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை 3.94 லட்சமாக அதிகரித்துள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களின் பலனாக நேற்று வரையிலும் அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 3,94,016 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளார்கள் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரும் வருக! கல்வியின் வழியே அறிவுலகை ஆள்க!" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×