search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை நிறுவனங்கள் வழங்கவில்லை-எம்.பி. குற்றச்சாட்டு
    X

    விவசாயிகளிடம் குறைகளை கேட்ட மாணிக்கம் தாகூர் எம்.பி.

    விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை நிறுவனங்கள் வழங்கவில்லை-எம்.பி. குற்றச்சாட்டு

    • விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை நிறுவனங்கள் வழங்கவில்லை.
    • மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டினார்.

    விருதுநகர்

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு 14 வாரம் ஊதியம் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து மத்திய நிதி மந்திரிகளுக்கும், பிரதமர்களுக்கும் கடிதம் எழுதியும் உள்ளேன். இதன் எதிரொலியாக தற்போது 13 வாரங்களுக்கு மட்டும் ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்சினையை நடவடிக்கை எடுத்த மத்திய நிதி மந்திரிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனர். அவர்களுக்கு கடந்த 2020-21-ம் நிதியாண்டிற்கு பயிர் காப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்பட வில்லை. இந்த பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க படவில்லை. இதற்காக நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். பிரதமர் கிஷான் திட்டத்தில் மத்திய அரசு, மாநில அரசை தவிர்த்து நேரடியாக விவசாயிகளுக்கு நிதி அனுப்ப நடவடிக்கை எடுப்பது நல்ல நடைமுறையாகாது.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களை திருப்பி அனுப்பி உள்ளார். தமிழக அரசு அரசியல் சாசனப்படி இதற்காக சட்ட சபையை கூட்டி மசோதா தாக்கலை நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இப்பிரச்சி னையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டிய நேரம் வந்து விட்டது. சுதந்திர போ ராட்டத்தில் பழங்குடியினர் பங்கு குறித்து மாநில அரசு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கும்.

    விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் மத்திய நிதி மந்திரியின் நிகழ்ச்சிகள் பற்றி எனக்கு இதுவரை எந்த தகவலம் இல்லை. இதில் என்னை புறக்கணிப்பது மாவட்ட மக்களை புறக்கணிப்பது ஆகிறது. 5 மாநில சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, மீனாட்சி சுந்தரம், வக்கீல் சீனிவாகன், நாகேந்திரன், வெயிலுமுத்து மற்றும் பலர் உடனிருந்தனர்.

    100 நாள் தொழிலாளர்கள் மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு நன்றி

    விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு கடந்த 14 வார கால ஊதியம் வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மாணிக்கம் தாகூர் எம்.பி. கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக அவர் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தார். மேலும் போராட்டத்தையும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 13 வார கால ஊதியம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருதுநத்தத்தை சேர்ந்த 100 நாள் திட்ட பணியாளர் சகுந்தலா கூறுகையில், மாணிக்கம் தாகூர் எம்.பி.யின் நடவடிக்கையால் சம்பள நிலுவை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    பணித்தள பொறுப்பாளர் மகாலட்சுமி கூறுகையில், கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட சம்பள நிலுவை தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.13 வார கால நிலுவை தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இன்றும் சில நாட்களில் மீதியுள்ள சம்பள நிலுவை தொகையும் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குரல் கொடுத்த மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


    Next Story
    ×