என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சி மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகம் கட்
- பிரதான குழாயில் கசிவு சரி செய்யும் பணி நடைபெறுகிறது
- எந்தெந்தெந்த ஏரியா விவரங்கள்
திருச்சி,
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் பொது தரைமட்ட கிணற்றிலிருந்து 55 நீர்த்தேக்கத் தொட்டி களுக்கு குடிநீர் விநியோ கம் செய்யப்பட்டு வருகி றது. இந்த நீர்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகத்திற்காக, சர்க்கார் பாளையம் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள 900 எம்.எம்.விட்டமுள்ள குழாயில், நீர் கசிவு ஏற்பட்டு சாலையில் வீணாக சென்றது. அதனை சரிசெய்யும் பணி இன்று நடைபெற்று வருகிறது.எனவே , மாநகராட்சி மண்டலம் -2க்கு உட்பட்ட விறகுப்பேட்டை புதியது. சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, சுந்தராஜநகர் புதியது, சுந்தராஜபுரம் பழையது, காஜாமலை புதியது, மண்டலம் -3 அரியமங்கலம் கிராமம், அரியமங்கலம் உக்கடை, தெற்குஉக்கடை, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது, மலையப்பநகர் புதியது, மலையப்ப நகர் பழையது, ரயில்நகர் புதியது , ரயில்நகர் பழையது, மகாலெட்சுமி நகர், முன்னாள் இராணுவத்தினர் காலணி புதியது, முன்னாள் இராணுவத்தினர் காலணி பழையது, மேலகல்கண்டார்கோட்டை செக்ஸன் ஆபிஸ், மேலகல்கண்டார்கோட்டை நாகம்மை வீதி, மேலகல்கண்டார்கோட்டை நூலகம், பொன்னேரி புரம்புதியது, பொன்னேரி புரம்பழையது, பொன்ம லைப்பட்டி, ஐஸ்வர்யாநகர், மண்டலம் -4 ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ்நகர், எல்ஐசி புதியது, எல்ஐசி சுப்பிரமணிய நகர், தென்றல்நகர் புதியது, தென்றல்நகர் பழையது, தென்றல்நகர் ஈ.பி. காலனி, வி.என்.நகர் புதியது, வி.என்.நகர் பழையது, சத்தியவாணி முத்து கே.கே நகர், சுப்பிரமணிய நகர் புதியது, சுப்பிரமணிய நகர் பழையது, ஆனந்த நகர், கே.சாத்தனூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதிநகர், எடமலைப்பட்டிபுதூர் புதியது, காஜாமலை பழையது, கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்புநகர் பழையது, அன்புநகர் புதியது, ரெங்காநகர்ஆகிய உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நாளை(23ந்தேதி) ஒருநாள் குடிநீர் விநியோ கம் நடைபெறாது.நாளை மறுநாள் (24ந்தேதி) அன்று முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்