search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சசிகலாவை விரைவில் ஓ.பி.எஸ் சந்திப்பார்- தஞ்சையில் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. பேட்டி
    X

    சசிகலாவை விரைவில் ஓ.பி.எஸ் சந்திப்பார்- தஞ்சையில் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. பேட்டி

    • ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பமே பிரிந்து இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றுப்பட்ட அ.தி.மு.க.வை உருவாக்க வேண்டும் என்பது தான்.
    • அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் தான் 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி மலரும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவளரான ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசி இணைந்து செயல்படுவதாக அறிவித்தார். இந்த சந்திப்பின் போது மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றிருந்தார்.

    ஆனால் நான், பிரபாகரன், மனோஜ்பாண்டியன் ஆகியோர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சந்திப்பதால் செல்லவில்லை.

    ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பமே பிரிந்து இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றுப்பட்ட அ.தி.மு.க.வை உருவாக்க வேண்டும் என்பது தான். இதுதான் உண்மையான தொண்டர்களின் எதிர்பார்ப்பாகும். அதற்காக தான் அவர் பாடுபட்டு வருகிறார். மேலும் டி.டி.வி.தினகரனை சந்தித்து இணைந்து செயல்படுவதாக அறிவித்தார். விரைவில் சசிகலாவையும் சந்திக்க உள்ளார்.

    அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் தான் 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி மலரும். அதற்காக தான் ஓ.பி.எஸ் பாடுபட்டு வருகிறார்.

    திருச்சி மாநாட்டை போல் விரைவில் கொங்கு மண்டலத்தில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும். அதில் சசிகலா பங்கேற்க ஓ.பி.எஸ் அழைப்பு விடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×