என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சண்முகநாதன்"

    • ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் ராஜா கைது செய்யப்பட்டார்.
    • ராஜா மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜா மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மோசடி வழக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் தூத்துக்குடி மாநகராட்சியின் 59-வது வார்டு கவுன்சிலராகவும் எதிர்கட்சி தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார்.
    • தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பு, முத்தையாபுரம் பல்க் சந்திப்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் பதிவை புதுப்பித்து கொள்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் படிவம் விநியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை படிவங்களை நிர்வாகி களிடம் வழங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் என். சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் வக்கீல் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் வீரபாகு, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, முன்னாள் அரசு வக்கீல்கள் யு.எஸ்.சேகர், சுகந்தன் ஆதித்தன், ஆண்ருட்மணி,முனியசாமி, எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் வலசை வெயிலூமுத்து, பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், முன்னாள் துணை மேயர் சேவியர், சார்பு அணி செயலாளர்கள் டேக் ராஜா, பில்லா விக்னேஷ், கே.ஜே.பிரபாகர், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, ஓன்றிய செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், பகுதி இளைஞரணி செய லாளர் திருச்சிற்றம்பலம், துணைசெயலாளர் டைகர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தூத்துக்குடி மத்திய தெற்கு பகுதி அ.தி.மு.க சார்பில் தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பும், முத்தையாபுரம் பல்க் சந்திப்பிலும் அமைக்கப்பட்டு இருந்த கோடை கால தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முக நாதன் திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர்பானங்கள், இளநீர், பழவகைகள் வழங்கினார்.

    கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதனுக்கு (87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    2021- 22ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில் இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி அன்று வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதனுக்கு (87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ‘கலைஞர் எழுதுகோல் விருது’க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் திரு. ஐ.சண்முகநாதன் அவர்கள் (வயது 87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன் அவர்கள்  1953-ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுநாள்வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்துவருகிறார்.

    பெரும் மக்களுக்கான இதழியலில் இவ்வளவு நெடிய பணி அனுபவம் என்பது எளிதில் நிகழ்த்தற்கரிய சாதனை ஆகும். பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி, சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டைத் தீர்மானித்தவர்களில் ஒருவராகச் செயல்பட்டிருப்பவர் என்பதோடு, சமகால வரலாற்றைத் தொகுத்து அளிக்கும் பணிகளிலும் சமூகநீதி விழுமியப் பார்வையோடு அப்பணியை மேற்கொண்டிருக்கிறார் திரு.சண்முகநாதன்.

    அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, தினத்தந்தி குழுமத்தினால் வெளியிடப்பட்ட ‘வரலாற்றுச் சுவடுகள்’ நூல் தொகுப்புப் பணி ஆகும். பல்லாயிரம் பிரதிகள் விற்ற இந்நூலானது, சமகால வரலாற்றைப் பார்க்க உதவுகிறது.

    முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, 2021-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை மூத்த பத்திரிகையாளர் திரு. ஐ.சண்முகநாதன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை (3.6.2022) வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்.. வசனகர்த்தா ஆரூர்தாசுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது- அரசு அறிவிப்பு
    ×