search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்பவர்கள் விவரம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    X

    அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்பவர்கள் விவரம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    • வருவாய் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • பெரம்பலூர், கன்னியாகுமரி, சேலம், தேனி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்போர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 20-ந்தேதி காலை 10 மணிக்கு வருவாய் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பெரம்பலூர், கன்னியாகுமரி, சேலம், தேனி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்போர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர்-செம்மலை, கன்னியாகுமரி-தளவாய்சுந்தரம், சேலம்-பா.வளர்மதி, தேனி-கோகுல இந்திரா, தஞ்சாவூர்-மோகன், திருச்சி-கல்யாண சுந்தரம் ஆகியோரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

    Next Story
    ×