என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணைய சேவை முடக்கம்"

    • விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினா்
    • கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

    ஒடிசா மாநிலம் தெபிகரா பகுதியில் உள்ள நதி படித்துறையில் துா்கா சிலையை கரைக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் கடந்த 3-ந்தேதி நள்ளிரவில் ஊா்வலமாகச் சென்றனா்.

    தா்கா பஜாா் வழியாகச் ஊா்வலம் சென்றபோது, அதிக சத்தத்தில் பாடல் ஒலித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து வாக்கு வாதம் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

    அப்போது துா்கா சிலை ஊா்வலத்தினா் மீது கற்கள், கண்ணாடி பாட்டில்கள் வீசப்பட்டன. இந்தச் சம்பவம் தொடா்பாக 6 போ் கைதுசெய்யப்பட்டனா்.

    இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் தடை உத்தரவை மீறி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினா்.வித்யாதா்பூர் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணி, வன்முறை நடைபெற்ற தா்கா பஜாா் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து நகரத்தின் மேற்குப் பகுதியான சி.டி.ஏ செக்டாா் 11-ல் முடிவடைந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.

    அப்போது அவா்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப் பட்டன. மேலும் கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

    நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். வன்முறையை தடுக்க கட்டாக்கில் 13 காவல் நிலைய எல்லை பகுதிகளில் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை ஒடிசா அரசு பிறப்பித்தது.

    இந்த ஊரடங்கு உத்தரவு நேற்று இரவு 10 மணி முதல் தர்கா பஜார், மங்களாபாக், பூரிகாட், லால் பாக் மற்றும் ஜகத்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலானது.

    மேலும், பொய்யான தகவல் பரப்பப்படுவதைத் தடுக்க கட்டாக் மாநகராட்சி, கட்டாக் வளா்ச்சி ஆணையம் மற்றும் 42 மவுஜா மண்டலம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் இன்று இரவு 7 மணி வரையில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே துா்கா சிலை கரைப்பின்போது ஏற்பட்ட வன்முறைக்கு எதிராக கட்டாக் நகரில் இன்று 12 மணி நேர கடை அடைப்புக்கு விஷ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்தது.

    கட்டாக் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். முக்கியப் பகுதிகளில் போலீசார் மற்றும் விரைவு நடவடிக்கை படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

    அமைதி காக்கும்படி முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

    • கருப்பு டி-சர்ட் அணிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பெட்ரோல் பாட்டில்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மணிப்பூரில் ஐந்து நாட்களுக்கு இணைய சேவையைத் தடை செய்து ஆளுநர் உத்தரவிட்டார்.

    மணிப்பூரில் அரம்பாய் தெங்கோல் (AT) என்ற மெய்தேய் அமைப்பின் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து, மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இளைஞர்கள் தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கருப்பு டி-சர்ட் அணிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பெட்ரோல் பாட்டில்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    "நாங்கள் ஆயுதங்களை திரும்ப வழங்கினோம், வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டோம், இப்போது நீங்கள் எங்களைக் கைது செய்கிறீர்களா?" என்று அவர்கள் ஆவேசமாகக் குற்றம் சாட்டினர்.

    முன்னதாக தலைவர் கைதைக் கண்டித்து, சனிக்கிழமை இரவு டயர்களை எரித்து சாலைகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்பாலின் பல பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் மெய்தேய் தன்னார்வக் குழுவான அரம்பாய் தெங்கோலின் (AT) உறுப்பினர்களான இளைஞர்கள் ஆவார்.

    வன்முறை மேலும் பரவாமல் தடுக்க, மணிப்பூரில் ஐந்து நாட்களுக்கு இணைய சேவையைத் தடை செய்து ஆளுநர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு சனிக்கிழமை இரவு 11:45 மணிக்கு அமலுக்கு வந்தது. இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல், பிஷ்ணுபூர் மற்றும் காக்சிங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இந்தத் தடை அமலில் இருக்கும்.   

    • மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் (AT) தலைவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியது.
    • ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் (AT) தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியதை தொடர்ந்து போராட்டம் வெடித்துள்ளது.

    நேற்று இரவு தலைநகர் இம்பாலில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. கைது செய்யப்பட்ட தலைவரின் பெயர் மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில் தங்கள் தலைவரை விடுவிக்கக் கோரி குவாகிடெல் மற்றும் உரிபோக்கில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையின் நடுவில் டயர்களை எரித்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் மெய்தேய் தன்னார்வக் குழுவான அரம்பாய் தெங்கோலின் (AT) உறுப்பினர்களான இளைஞர்கள் ஆவார்.

    நிலைமையைக் கட்டுப்படுத்த, இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல், பிஷ்ணுபூர் மற்றும் காக்சிங் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இணைய சேவைகளை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கடந்த 2023 இல் மணிப்பூரில் குக்கி - மெய்தேய் இனத்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் இதுநாள் வரை தொடர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு தற்போது ஜனாதிபதி ஆட்சி அங்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் யாரிடமும் நேற்று முதல் பேச முடியவில்லை.
    • சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்கள், நண்பர்களை தொடர்பு கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

    சென்னை:

    மழை வெள்ளத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி இருந்த நிலையில் பாதுகாப்பு கருதி மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் 2 நாட்களாக இருளில் மக்கள் மூழ்கினார்கள்.

    இந்த நிலையில் நேற்று இணைய தள சேவையும் முடங்கியது. அனைத்து தனியார் நிறுவனங்களின் செல்போன் இணைப்புகளும் செயல்படவில்லை. செல்போன் சேவை செயல் இழந்ததால் தகவல் பரிமாற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    மழை பாதிப்பு, நிலவரம் குறித்த தகவல்களை சமூக ஊடகங்கள் வழியாக பார்த்து தெரிந்து கொண்ட மக்கள் அவை செயல் இழந்ததால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    ஏற்கனவே மின்சாரம் இல்லாததால் டி.வி., கேபிள் டி.வி. செயல்படவில்லை. இந்த நிலையில் இண்டர்நெட், வாட்ஸ் அப் சேவை உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் சென்னையில் முடங்கியதால் மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள்.

    செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் யாரிடமும் நேற்று முதல் பேச முடியவில்லை. இன்றும் அதே நிலை நீடிக்கிறது.

    இதனால் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்கள், நண்பர்களை தொடர்பு கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

    வீடுகளில் இருளில் முடங்கிய மக்களுக்கு தகவல் பரிமாற்றம் பேருதவியாக இருந்தது. ஆனால் அவை இன்று 2-வது நாளாக முடங்கியதால் யாரையும் எளிதில் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    ஒரு சில பகுதிகளில் இன்று மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதை தொடர்ந்து மோட்டார் பம்ப் செட், மிக்சி, செல்போன் சார்ஜர் செய்வது போன்றவை பயன்பாட்டிற்கு வந்தது.

    • காசாவில் பொதுமக்கள் பலியாவது அதிகரித்து வரும் நிலையில் தாக்குதலை குறைக்குமாறு இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
    • உணவு, தண்ணீர், மருந்து தட்டுப்பட்டால் தவிக்கும் மக்கள் தற்போது உரிய மீட்பு நடவடிக்கையும் கிடைக்காத சூழலில் உள்ளனர்.

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 3-வது மாதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    இதில் குழந்தைகள், பெண்கள் என அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். காசாவில் பலி எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    காசா முனை முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. வடக்கு, மத்திய, தெற்கு காசா என அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது.

    நேற்று இரவு கான் யூனிஸ் நகரில் குண்டுகள் வீசப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 179 பேர் பலியாகி உள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கான் யூனிஸ் நகரில் ஹமாஸ் அமைப்பினர்- இஸ்ரேல் ராணுவம் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் ஆஸ்பத்திரியில் இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தி வருவதால் அங்குள்ள நோயாளிகள், பொதுமக்கள், டாக்டர்கள் தவித்து வருகிறார்கள் என்று ஐ.நா. தெரிவித்து உள்ளது.

    இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் காசாவில் மீண்டும் இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாலஸ்தீனிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூறும்போது, காசாவில் இணைய சேவை மீண்டும் துண்டிக்கப்பட்டு உள்ளன. காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், காசாவின் அரசாங்க ஊடக அலுவலக தகவல் தொடர்பு முடக்கப்பட்டதால் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களை அடைவது கடினமாக இருக்கும் என்று தெரிவித்தது.

    இணைய சேவை மற்றும் தகவல் தொடர்பு முடக்கம் காரணமாக காசாவில் மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உணவு, தண்ணீர், மருந்து தட்டுப்பட்டால் தவிக்கும் மக்கள் தற்போது உரிய மீட்பு நடவடிக்கையும் கிடைக்காத சூழலில் உள்ளனர்.

    இந்த நிலையில் காசாவில் பொதுமக்கள் பலியாவது அதிகரித்து வரும் நிலையில் தாக்குதலை குறைக்குமாறு இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

    அமெரிக்க தேசிய பாது காப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், இஸ்ரேல் பிரத மர் பெஞ்சமின் தென்யாகு வுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, வரும் நாட்களில் ஹமாஸ் மீதான போரை குறைக்குமாறு தெரிவித்தார். காசாவில் பொதுமக்களின் உயிர்களை காப்பாற்ற இஸ்ரேல் அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார்.

    • காலை 8 மணி முதல் மதியம் 1:30 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும்.
    • 650,000 பேர் பரீட்சைக்கு பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த போட்டித் தேர்வின் (JGGLCCE) முறைகேடுகளைத் தடுக்க, மாநிலம் முழுவதும் விரிவான இணையத் தடையை ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் 24 மாவட்டங்களில் உள்ள பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெறுவதை ஒட்டி, காலை 8 மணி முதல் மதியம் 1:30 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜார்க்கண்ட் முழுவதும் மொபைல் இணையம், மொபைல் டேட்டா மற்றும் மொபைல் வைஃபை சேவைகளை அனைத்து சேவை வழங்குநர்களிடமிருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், இந்த காலகட்டத்தில் நிலையான தொலைபேசி இணைப்புகள் வழியாக கால் அழைப்பதற்கும்பிராட்பேண்ட் இணைப்பு தொடர்ந்து செயல்படக்கூடும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

    இதுகுறித்து ஜார்கண்ட் அரசு கூறுகையில், "முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் சில நேர்மையற்ற நபர்கள் பல்வேறு மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி முறைகேடாக தேர்வு எழுதிய சம்பவம் நடந்தது."

    ஏறக்குறைய 650,000 பேர் பரீட்சைக்கு பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அது "இலவசமாகவும், நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும்" நடத்தப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

    • அரியானா, பஞ்சாப் எல்லையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
    • வங்கிசேவைகள் தொடர்ந்து செயல்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2021-ம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது.

    விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும் இன்னும் அதற்கு தீர்வு காணப்படவில்லை. இதனை வலியுறுத்தி விவசாயிகள் தற்போது மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். டெல்லியில் முகாமிட்டு போராட்டத்தைத் தொடர முடிவு செய்தனர்.

    கடந்த 6 மற்றும் 8-ந் தேதிகளில் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். ஆனால் பாதுகாப்பு படையினர் தடுப்புகளை அமைத்து அவர்களை முன்னேறி செல்லவிடாமல் தடுத்தனர். இதையும் மீறி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதில் விவசாயிகள் சிலர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் குறைந்த பட்ச ஆகார விலையை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி இன்று பேரணி செல்கிறார்கள்.

    அரியானா மாநிலம் ஷம்பு எல்லை பகுதியில் இருந்து 101 விவசாயிகள் அமைப்பு இன்று பிற்பகலில் டெல்லியை நோக்கி ஊர்வலமாக செல்கிறார்கள். இதை விவசாயிகள் அமைப்பான கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர் சர்வான் சிங் பாந்தர் இன்று காலை தெரிவித்தார்.

    டெல்லியை நோக்கி விவசாயிகள் போராட்டம் நடத்த வருவது 3-வது முயற்சியாகும். விவசாயிகள் டெல்லியை நோக்கி அணி வகுத்து வருவதையொட்டி அரியானா, பஞ்சாப் எல்லையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

    இதற்கிடையே விவசாயிகள் குவிவதை தடுக்கும் வகையில் அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள 12 கிராமங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை 6 மணி முதல் வருகிற 17-ந் தேதி வரை இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் செல்போன் சேவை, வங்கிசேவைகள் தொடர்ந்து செயல்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×