என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Imphal"

    • மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் (AT) தலைவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியது.
    • ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் (AT) தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியதை தொடர்ந்து போராட்டம் வெடித்துள்ளது.

    நேற்று இரவு தலைநகர் இம்பாலில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. கைது செய்யப்பட்ட தலைவரின் பெயர் மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில் தங்கள் தலைவரை விடுவிக்கக் கோரி குவாகிடெல் மற்றும் உரிபோக்கில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையின் நடுவில் டயர்களை எரித்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் மெய்தேய் தன்னார்வக் குழுவான அரம்பாய் தெங்கோலின் (AT) உறுப்பினர்களான இளைஞர்கள் ஆவார்.

    நிலைமையைக் கட்டுப்படுத்த, இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல், பிஷ்ணுபூர் மற்றும் காக்சிங் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இணைய சேவைகளை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கடந்த 2023 இல் மணிப்பூரில் குக்கி - மெய்தேய் இனத்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் இதுநாள் வரை தொடர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு தற்போது ஜனாதிபதி ஆட்சி அங்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மணிப்பூரில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், இரண்டு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #CitizenshipAmendmentBill #ManipurProtest
    இம்பால்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அசாம், மேகாலயா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாகலாந்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மணிப்பூர் மாநிலத்திலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு சமூக அமைப்புகள் தனித்தனி குழுக்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் இம்பால் நகரில் உள்ள 4 பெண்கள் மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் பெண்கள், பிரதான மார்க்கெட்டில் அமர்ந்து தர்ணா போராடத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வீடு திரும்ப மறுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து  போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இந்த சம்பவத்தில் 6 பெண்கள் காயமடைந்தனர். இதேபோல் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே போராட்டம் நடைபெறுகிறது.



    இவ்வாறு போராட்டம்  தீவிரமடைந்திருப்பதால் இம்பால் கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, புதன்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவை நிறைவேற்றினால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தேசிய மக்கள் கட்சி விலகும், என மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா கூறியது குறிப்பிடத்தக்கது. #CitizenshipAmendmentBill #ManipurProtest
    ×