என் மலர்
நீங்கள் தேடியது "JothiMani MP"
- மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட இருப்பதும் மகிழ்ச்சியான செய்தி.
- மகளிர் உரிமைத் தொகை அடுத்த 2 மாதங்களுக்கு நமது சகோதரிகள் கையில் கிடைக்கக்கூடாது என்று சதி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை பெறும் 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்தி இருக்கும் திட்டத்தை காங்கிரஸ் பெண் எம்.பி. ஜோதி மணி வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்பை வரவேற்கிறேன். ரூ. 5000 மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதும், எதிர்காலத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட இருப்பதும் மகிழ்ச்சியான செய்திகள்.
பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு ரூபாயும் மிகுந்த பொறுப்போடும், கவனத்தோடும் செலவிடப்படும். வீட்டுக்கும், நாட்டிற்கும் பயன்படும். அவர்கள் அதை தங்களுக்காகவும் செலவு செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் இந்த நேரத்தித்தில் வெளிப்படுத்த விரும்புகிறேன்.
மகளிர் உரிமைத் தொகை அடுத்த 2 மாதங்களுக்கு நமது சகோதரிகள் கையில் கிடைக்கக்கூடாது என்று சதி செய்த பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முறியடித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவானதற்கு காரணம், முக்கிய தேசிய விவகாரங்களில் பேச எதிர்க்கட்சிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் உரிமை மறுக்கப்பட்டதுதான்.
- காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள், எம்.பி.க்கள். உறுதியானவர்கள், அச்சமற்றவர்கள், அமைதியானவர்கள்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, "காங்கிரஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிகத் தரக்குறைவான நடத்தையைக் கண்டு பெருமை கொள்கிறது!! நாங்கள் அனைத்து பாஜக எம்.பி.க்களையும் தடுத்து நிறுத்தி, பெண் எம்.பி.க்களை காங்கிரஸ் எம்.பி.க்களை எதிர்கொள்ள அனுமதிக்காமல் இருந்திருந்தால், நிலவரம் அங்கு மோசமான காட்சியாக மாறியிருக்கும். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் காப்பதில் எங்களுக்கு மிகுந்த அக்கறை உள்ளது." என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வீடியோவை மறுபகிர்வு செய்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
"அன்பார்ந்த கிரண் ரிஜ்ஜுஜு அவர்களே வீடியோவை வெளியிட்டதற்கு நன்றி. அது நாடாளுமன்ற மரபுக்கு உட்பட்டதல்ல என்றாலும், அது எங்கள் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், பெண்கள் எம்.பி.க்களாகிய நாங்கள் பதாகைகளை பிடித்துக்கொண்டு, ஆளுங்கட்சியினருடன் அமைதியாக உரையாடியதை தெளிவாக காண முடிகிறது. இதற்குப் பயந்தே பிரதமர் நாடாளுமன்றம் வரவில்லை என்று நீங்கள் சொல்வது பிரதமரின் பயத்தையும், பலவீனத்தையுமே காட்டுகிறது.
நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. வன்முறையிலும் ஈடுபடவில்லை. "எதிர்பாராத சம்பவம் திட்டமிடப்பட்டது" என்ற பொய்யான குற்றச்சாட்டையும், பிரதமரை தாக்க முயன்றதாக பெண்கள் எம்.பி.க்கள் மீது பரப்பப்பட்ட அரசுக்கு ஆதரவான ஊடக கதைகளையும் இந்த வீடியோ முற்றிலும் பொய்யென நிரூபிக்கிறது. அந்த பொய் கதை இப்போது முழுமையாக உடைந்துவிட்டது.
இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவானதற்கு காரணம், முக்கிய தேசிய விவகாரங்களில் பேச எதிர்க்கட்சிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் உரிமை மறுக்கப்பட்டதுதான். தேசிய பாதுகாப்பு குறைபாடுகள், எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமரின் மௌனம், இந்தியாவின் நலன்களுக்கு எதிரான இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் போன்ற முக்கிய விஷயங்களில் பேச அனுமதி வழங்கப்படவில்லை.
நாங்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்கள். உறுதியானவர்கள், அச்சமற்றவர்கள், அமைதியானவர்கள். எந்த மிரட்டலும், எந்த பொய்யான கதையும் எங்களை மௌனமாக்க முடியாது. மேலும், பாராளுமன்றத்தின் மரியாதை மற்றும் புனிதம் குறித்த தங்கள் தீடீர் அக்கறைக்கு நன்றி. உங்கள் அபாரமான நகைச்சுவை உணர்வைப் பாராட்டுகிறேன்!
எங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதற்கு மீண்டும் மனப்பூர்வமான நன்றிகள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
- திருச்சி சிவா அவர்கள் சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பெருந்தலைவர் காமராஜர் நேர்மைக்கும், நிர்வாகத்திறமைக்கும் மட்டுமல்ல எளிமைக்கும் பெயர் போனவர் என்பதை உலகறியும்.
தமிழ்நாட்டில் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது இருக்கிறதா என்று ஆச்சர்யப்படக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
அந்த மூலை முடுக்குகளில் எல்லாம் ஏசி அறைகளும் , ஐந்து நட்சத்திர விடுதிகளும் இல்லை. ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர் .
அவர் ஏசி அறை இல்லாமல் உறங்கமாட்டார் என்று சகோதரர் திரு திருச்சி சிவா அவர்கள் சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.
எமது தலைவர் காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
காமராஜர் வாழ்ந்த வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. அது அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் என்ற இந்த மண்ணின் மாபெரும் ஆளுமை தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு.
காமராஜருக்கு எதிராகப் பரப்பப்படுகிற கட்டுக்கதைகளுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருந்தால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. அவரின் பெயராலேயே காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணில் இன்றளவும். அரசியல் களத்தில் நிற்கிறது என்பதை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ED,IT ரெய்டு செய்த 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளதை நியூஸ் லாண்டரி அம்பலப்படுத்தியுள்ளது.
- ஏற்கனவே பாஜகவுக்கு நன்கொடை வழங்கி வந்த 6 நிறுவனங்கள் ED,IT ரெய்டுக்கு பிறகு பாஜகவுக்கு அதிக அளவில் நன்கொடை வழங்கியுள்ளன.
"ED,IT ரெய்டு செய்த 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளதை நியூஸ் லாண்டரி அம்பலப்படுத்தியுள்ளது. பாஜகவின் ஊழல்கள் பலவகை. அதில் இது ஒரு புது வகை!" என நியூஸ் லாண்ட்ரி கட்டுரையை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்பி எம்.பி ஜோதிமணி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2018-19 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கு இடையில், ED,IT ரெய்டு நடைபெற்ற 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளது. இந்த காலகட்டத்தில் பாஜகவுக்கு 187.58 கோடியை வழங்கிய 23 நிறுவனங்கள், பாஜக ஆட்சிக்கு வந்த 2014 முதல் ED,IT ரெய்டு நடத்தப்பட்ட ஆண்டு வரை பாஜகவுக்கு எந்த நன்கொடையும் வழங்கப்படவில்லை என்று நியூஸ் லாண்ட்ரி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவற்றில் குறைந்தது 4 நிறுவனங்களாவது ED,IT ரெய்டு நடத்தப்பட்ட 4 மாதங்களுக்குள் பாஜகவுக்கு 9.05 கோடி நன்கொடை அளித்துள்ளன. ஏற்கனவே பாஜகவுக்கு நன்கொடை வழங்கி வந்த 6 நிறுவனங்கள் ED,IT ரெய்டுக்கு பிறகு பாஜகவுக்கு அதிக அளவில் நன்கொடை வழங்கியுள்ளன.
அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பாஜகவுக்கு நன்கொடை அளித்த 6 நிறுவனங்கள், எதாவது ஒரு ஆண்டில் நன்கொடை அளிக்க தவறிவிட்டால், அந்த ஆண்டே அந்நிறுவனங்களில் மீது ED,IT ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்று அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இன்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா மற்றும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.
இது குறித்து அவர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்குவதற்கான மத்திய அரசு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள முகாமில் கலந்து கொண்டு மருத்துவ சான்று பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.
கல்வி உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேருவது, உதவி உபகரணங்கள் பெறுவது, சக்கர நாற்காலி, பெட்ரோல் ஸ்கூட்டர், மூன்று சக்கரவண்டி, ஊன்றுகோல் கருவி, செயற்கை கால் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்தல் மற்றும் பிற உதவிகள் இந்த முகாமில் வழங்கப்படும்.
கரூர் மாவட்டத்தில் இந்த முகாமை ஒவ்வொரு இடத்திலும் நடத்த வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தினேன். அவர் முகாம் நடத்த மறுத்து விட்டார். பிற மாவட்ட கலெக்டர்கள் இந்த முகாமை நடத்த ஒத்துழைப்பு தரும் நிலையில் கரூர் மாவட்ட கலெக்டர் மறுத்து வருகிறார்.
கரூர் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி உதவிகளை வழங்க வேண்டும். அதற்கான தேதியை வழங்கும் வகையில் இந்த போராட்டத்தை தொடர்வேன் என்றார்.






