search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women empowerment"

    • அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
    • அதற்கு முன் நயன்தாரா நடித்த படம் 'அன்னபூரணி'. இது நயன்தாராவின் 75-வது படமாகும்.

    தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சமீபத்தில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இதுவே அவர் நடித்த முதல் இந்தி திரைப்படமாகும். படம் 1500 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்தது.

    அதற்கு முன் நயன்தாரா நடித்த படம் 'அன்னபூரணி'. இது நயன்தாராவின் 75-வது படமாகும். இதனை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கினர். நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்தார்.

    இப்படம் கடந்த வருடம் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இது நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். நயன்தாரா ஃபீமேல் செண்டிரிக்காக நடித்த பல படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களில் நடித்து வெற்றியை பெற்றவர்.

    சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய பொழுது " சமூக இழிவுகளை மீறும் அதிகாரம் பெற்ற பெண்களின் கதாப்பாத்திரத்தில் நடிப்பது ஒரு ஆக்கப்பூர்வமான தேர்வு மட்டுமல்ல அவர்களின் குரல்களின் ஒரு பிரதிபலிப்பாகவும், அவர்களுக்கான குரலாகவும் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்". என கூறினார்.

    அடுத்ததாக மாதவன் மற்றும் சித்தார்த் நடித்து இருக்கும் டெஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும் மன்னாங்கட்டி சின்ஸ் 1960 படத்திலும் நடித்து வருகிறார்.

    படத்தில் மட்டும் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசாமல், நிஜத்திலும் அவர் செய்து கொண்டு இருக்கிறார்., அவர் சமீபத்தில் அவரின் கணவரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து 9 ஸ்கின் என்ற ஸ்கின்கேர் பிராண்டையும், ஃபெமி 9 சானிட்டரி நேப்கின் பிராண்டையும் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை அரசு உறுதி செய்துள்ளது.
    • பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் அவர்களுக்கு சிறகுகளை வழங்கியுள்ளது.

    கடந்த மே மாதம் 30 அன்று, மத்திய பாஜக அரசு தனது 8 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தது. இதையொட்டி நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜக நடத்தி வருகிறது.

    இந்நிலையில் பெண்களுக்கு பல்வேறு துறைகளில் அதிகாரமளிப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்த விவரங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    பெண்களுக்கு மேலும் அதிகாரம் அளிக்கும் வகையில் ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்குவது குறித்த கட்டுரைகளை நீங்கள் படித்து மகிழ்வீர்கள் என்றும், கடந்த 8 ஆண்டுகளில் இந்த முயற்சிகள் பல்வேறு துறைகளை உள்ளடக்கியது மற்றும் பெண்களுக்கு அதிக கண்ணியம் மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்துள்ளது என்றும் தமது டுவிட்டர் பதவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

    பாகுபாடு இல்லாத வாய்ப்புகள் நிறைந்த சூழலை பெண்களுக்க உருவாக்க தமது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், பெரிய சீர்திருத்தங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஏற்பட்ட மாற்றம், புதிய உயரங்களுக்கு பறக்க அவர்களுக்கு சிறகுகளை வழங்கியுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

    ×