search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narendra Singh Tomar"

    • மத்திய பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.
    • முதல் மந்திரியாக மோகன் யாதவ் பதவி ஏற்றார்.

    போபால்:

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த மாதம் 7-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, மத்திய பிரதேச மாநில முதல் மந்திரியாக மோகன் யாதவ் தேர்வானார். தெற்கு உஜ்ஜைன் தொகுதி எம்.எல்.ஏ.வான மோகன் யாதவ் முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.

    இந்நிலையில், மத்திய பிரதேசம் சட்டசபையில் சபாநாயகராக முன்னாள் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதல் மந்திரி மோகன் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை முறை விவசாயத்தை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.
    • தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இயற்கை வேளாண்மையை செயல்படுத்தி வருகின்றன.

    நீடித்த விவசாயத்திற்கான மண்வள மேலாண்மை குறித்த தேசியக் கருத்தரங்கு டெல்லியில் நடைபெற்றது. மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் இதை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:

    ரசாயன உரங்களை பயன்படுத்தும விவசாய முறையால் மண்வளம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் மாபெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு ரசாயன முறையிலான விவசாயத்தைக் கைவிட உலக நாடுகள் முன்வர வேண்டும். மண் வளத்தை மேம்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை விவசாயத்தை முன்னிலைபடுத்த வேண்டும்.

    மத்திய அரசு இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் என்ற பிரத்யேக திட்டத்தை செயல்படுத்த 1,584 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவின் பாரம்பரிய முறையான இயற்கை விவசாயத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஆந்திரப் பிரதேசம், குஜராத், இமாச்சலப்பிரதேசம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இயற்கை விவசாய முறையை செயல்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஓராண்டில் 17 மாநிலங்களில் மொத்தம் 4.78 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு கூடுதலாக இயற்கை முறை விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கோதுமை உற்பத்தி மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
    • நாடு முழுவதிலும் உரங்களின் கையிருப்பு திருப்திகரமாக உள்ளது.

    தலைநகர் டெல்லியில் மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த அவர் கூறியுள்ளதாவது:

    ரபி பருவகால பயிர் வகைகள் உற்பத்தி 358.59 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு உயர்ந்துள்ளது. கோதுமை உற்பத்தி 138.35 லட்சம் ஹெக்டேர் அளவில் இருந்து 152.88 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு அதிகரித்துள்ளது. அதாவது கோதுமை உற்பத்தி 14.53 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது கடந்த 4 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய உற்பத்தி அளவாகும்.

    மண் ஈரப்பதநிலை, தண்ணீர் வசதி மற்றும் உரங்களின் கையிருப்பு போன்ற சாதகமான சூழ்நிலையால் வரும் நாட்களில் ரபி பருவகால பயிர் வகைகளின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும். நாடு முழுவதிலும் உள்ள 143 முக்கிய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு கடந்த காலத்தைவிட 106 சதவீதம் அதிகமாக உள்ளது. நாடு முழுவதிலும் உரங்களின் கையிருப்பு நிலையும் திருப்திகரமாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விவசாயிகளின் வருமானம் இருமடங்காக அதிகரிக்க பிரதமர் வலியுறுத்தல்,
    • செலவைக் குறைத்து, வருமானத்தை அதிகரிப்பது அவசியம்.

    மொரேனா:

    மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம் நிறைவு நாளில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நமது நாட்டில் விவசாயம் முக்கிய தொழில். வேளாண்மையை நாம் வலுப்படுத்தினால், நாடும் வளமாகும். வேளாண் பொருளாதாரத்தில் பெரும் ஆற்றல் உள்ளது. ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும்போது, வேளாண் துறையே பாதுகாவலாக இருக்கும்.

    முன்பு, வேளாண்மை சார்ந்த திட்டங்கள் உற்பத்தி சார்ந்ததாக இருந்தன. தற்போது அவை விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்காக செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்பின், மத்திய, மாநில அரசுகள், விவசாயிகள் ஒன்று சேர்ந்து இந்தத் திசையில் பயணித்து வருகின்றனர்.

    வேளாண்மைக்கு ஆகும் செலவைக் குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது அவசியம். உற்பத்தி பொருட்களின் தரமும் மிகவும் உயர்தரத்துடன் இருப்பது அவசியமாகும். விவசாயத்துக்கு தண்ணீர் செலவு குறைக்கப்பட்டு, நுண்ணீர் பாசனத்துக்கு மாற வேண்டும்.

    யூரியா, டி.ஏ.பி. உரங்களின் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும். உயிரி உரம், நானோ யூரியா பயன்பாடு அதிகரிக்க வேண்டும். இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்பட வேண்டும். இயற்கை முறையில் உரத்தைத் தயாரித்தால், செலவு குறைவதுடன், ஆரோக்கியத்துக்கும் நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அனைவருக்கும் உகந்த ஆரோக்கியமான உணவை வழங்க வேண்டும்.
    • சிறு தானியங்களை பிரபலப்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் இணைய வேண்டும்.

    மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தலைமையில் பிம்ஸ்டெக் நாடுகளின் வேளாண்துறை மந்திரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பூடான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் வேளாண்துறை மந்திரிகள் இதில் பங்கேற்றனர். 


    காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய மந்திரி தோமர், வேளாண்துறை மாற்றத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரிவான பிராந்திய செயல் திட்டத்தை ஏற்படுத்த ஒத்துழைக்குமாறு உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.

    சிறுதானியங்கள் ஊட்டச்சத்துமிக்கது என்றும் அதை பிரபலப்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் விளக்கினார். 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிங்கள் ஆண்டாக கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில், அனைவருக்கும் உகந்த வேளாண்முறையை கடைப்பிடித்து, ஆரோக்கியமான உணவை வழங்குமாறு உறுப்பு நாடுகளை அவர் வலியுறுத்தினார்.



    சிறு தானியங்களை ஒரு உணவாக பிரபலப்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் இணைந்து செயல்படுமாறும், இயற்கை மற்றும் சூழலியல் வேளாண்முறையில் உயிரி பன்முகத்தன்மையை பாதுகாப்பதுடன், ரசாயன பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    • பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவது தீவிரமான பிரச்சினையாக மாறி உள்ளது.
    • அரசியல் ரீதியாக விவாதிப்பதை விட, தீர்வு காண வேண்டும்.

    பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில்,பயிர் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிகழ்வு போன்றவற்றால் டெல்லியில் காற்று மாசு அளவு அபாயகர கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    காற்றின் தரம் மேம்படும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும் எனவும் 5ம் வகுப்புக்கு மேலான மாணவர்களுக்கு விளையாட்டு உள்ளிட்ட வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற வேளாண் ஆராய்ச்சி பயிலங்கில் பங்கேற்று பேசிய மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறியுள்ளதாவது: அரசியல் ரீதியாக இந்த பிரச்சனையை விவாதிப்பதை விட, இதற்கு தீர்வு கண்டு இதிலிருந்து வெளி வருவதற்கான முயற்சிகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.

    மத்திய அரசும், மாநில அரசுகளும் விவசாயிகளின் நலனை நோக்கமாக கொண்டே செயல்படுகின்றன. பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவது தீவிரமான பிரச்சினை. இது சுற்றுச் சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு முறையாக தீர்வு காண்பதன் மூலம் மண்ணையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.

    பயிர்க்கழிவுகளை முறையாக மேலாண்மை செய்து சுற்றுச்சூழல் மாசைத் தடுப்பதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. பயிர்க்கழிவு மேலாண்மைக்காக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்கி உள்ளது.

    மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் புசா என்ற உயிரி பயிர்க்கழிவு சிதைப்பு திரவம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இயந்திரங்களும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன. இவற்றை திறம்பட பயன்படுத்தி பயிர்க்கழிவுகள் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • விலங்குகளின் இனப்பெருக்கத்தை அதிகரித்து பராமரிக்க வேண்டியது அவசியம்.
    • இந்திய மக்கள் தொகை அளவுக்கு விலங்குகள், பறவைகள் உள்ளன.

     இஷாக்: 

    உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள இஷாக் நகரில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய வேளாண்மை துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறது. இந்தியா நூற்றாண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, உலகில் மிகச்சிறந்த நாடாக உருவாக வேண்டும். இதற்கு அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டியது அவசியம்.  


    நாடு முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 535.78 மில்லியன் கால்நடைகளும், 851.18 மில்லியன் பறவைகளும் இருக்கின்றன. இந்திய மக்கள் தொகை அளவுக்கு இவற்றின் எண்ணிக்கை உள்ளது. கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு, மீன்வளம் உள்ளிட்ட விவசாயத்துடன் தொடர்புடைய துறைகளில் கவனம் செலுத்தினால்தான், வேளாண்மை துறை வளர்ச்சி அடையும்.

    வேளாண்மையுடன் நாட்டின் வளர்ச்சிக்கு இந்தத் தொழில்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். விலங்குகளின் இனப்பெருக்கத்தை அதிகரித்து அவற்றை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது இப்போதைய தேவை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும்.
    • விவசாயிகள் பதிவு செய்ய காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

    பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற விரும்பும் விவசாயிகள், தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும். வங்கிகள், நிதி நிறுவனங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் இந்த இணையதளத்தில் மட்டுமே பதிவு  செய்யப்படும்.

    விவசாயிகள் பதிவு செய்ய காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பிரீமியம் தொகை, பிரீமியம் தொகையை எவ்வாறு செலுத்துவது மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்துவது உள்ளிட்ட விவரங்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    விவசாயிகள் யாரும் விடுபடாத வகையில், அவர்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்காக, வங்கிகளுக்கு கடைசி தேதியிலிருந்து 15 நாள் அவகாசம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • உற்பத்தித் திறன் குறித்த ஆராய்ச்சியை அதிகரிக்க தனியார் துறை பங்களிக்க வேண்டும்.
    • நல்ல தரமான பருத்தி உற்பத்தியில் உலக அளவில் நாம் முத்திரை பதிக்க வேண்டும்.

    தலைநகர் டெல்லியில் உள்ள வணிக பவனில், பருத்தி உற்பத்தித் திறனை அதிகரித்தல், இந்தியப் பருத்தியின் முத்திரையை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

    மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், மத்திய ஜவுளித்துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல், மத்திய ஜவுளி மற்றும் ரயில்வே இணை மந்திரி தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். 


    நிகழ்ச்சியில் உரையாற்றிய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதாவது:

    பருத்தி உற்பத்தியில் உலகத் தரத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இந்தியாவில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    உற்பத்தித்திறன், விவசாயிகளின் கல்வி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் ஆராய்ச்சியை அதிகரிக்க தனியார் துறை பங்களிக்க வேண்டும். தொழில்துறையினரின் சமமான பங்களிப்பின் மூலம் நல்ல தரமான பருத்தி உற்பத்தியில் உலக அளவில் நாம் முத்திரை பதிக்க வேண்டும்.

    நமது பருத்தி விவசாயிகளுக்கு சரியான விதைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், நவீன தொழில்நுட்பம் மற்றும் முற்போக்கான விவசாய முறைகளைப் பின்பற்ற விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலமும் மகசூல் மற்றும் லாப வரம்புகளை அதிகரிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பேசிய மத்திய விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், பருத்தி உற்பத்தியின் வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறன் நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்றார். உற்பத்தித்திறனை அதிகரிக்க குறுகிய கால மற்றும் நீண்ட கால உத்திகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    • நாய்கள், சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் முயல்களை பாதுகாக்கும்.
    • விலங்குகளை தாக்கும் டெல்டா மற்றும் ஓமிக்ரான் வைரஸ்களை கட்டுப்படுத்துகிறது.

    ஹரியானாவைச் சேர்ந்த ஐ.சி.ஏ.ஆர். தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விலங்குகளுக்கு செலுத்தக் கூடிய அனோகோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. பல கட்ட சோதனைகளுக்கு பிறகு தற்போது அந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர், விலங்குகளுக்காக இந்தியா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்து வைத்தார்.

    இந்த தடுப்பூசி நாய்கள், சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் முயல்களுக்கு பாதுகாப்பானது என்று மத்திய விவசாயிகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது, அனோகோவாக்ஸால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி, விலங்குகளை தாக்கும் டெல்டா மற்றும் ஓமிக்ரான் வைரஸ்களை கட்டுப்படுத்துகிறது என்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    விஞ்ஞானிகளின் அயராத பங்களிப்புகளால், இறக்குமதி செய்வதை விட, சொந்த தடுப்பூசிகளை உருவாக்குவதில் நாடு தன்னிறைவு பெற்றுள்ளது, இது உண்மையில் ஒரு பெரிய சாதனை என்றும் மந்திரி தோமர் குறிப்பிட்டுள்ளார்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #Governmentready #Parliamentallpartymeet
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்துக்கு பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி நரேந்திர சிங் டோமர் அழைப்பு விடுத்திருந்தார்.

    இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி அருண் ஜெட்லி, காங்கிரஸ் தரப்பில் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, மல்லிகார்ஜுனா கார்கே, சமாஜ்வாதி சார்பொல் ராம் கோபால் யாதவ், சி.பி.ஐ. சார்பில் டி.ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தின்போது அனைத்து கட்சி தலைவர்களும் முன்வைத்த கருத்துகளை கேட்ட பிரதமர் மோடி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இடையூறின்றி சுமுகமாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என வலியுறுத்தினார்.



    மேலும், பொதுநன்மை சார்ந்த அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் விவாதிக்க இந்த அரசு தயாராக உள்ளதாகவும் மோடி குறிப்பிட்டதாக இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி நரேந்திர சிங் டோமர் தெரிவித்தார்.

    எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தில் மீண்டும் ரபேல் போர் விமான ஊழல் மற்றும் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமை தொடர்பான பிரச்சனைகளை முன்வைக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் குறிப்பிட்டார். #Governmentready #Parliamentallpartymeet
    ×