search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crop Insurance Scheme"

    • மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி, வேளாண்மை அலுவலர் சீதா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்ட வாகனத்தை கொடியசைத்து, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி, வேளாண்மை அலுவலர் சீதா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். வேளாண் உற்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பை அதிகரிக்கவும், பயிர் காப்பீடு மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவிலான பயனை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரசார வாகனம் முதல் கட்டமாக உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் மற்றும் வெள்ளக்கோவில் ஆகிய பகுதிகளுக்கு நவம்பர் 15-ந்தேதி வரை நெல் பயிர்காப்பீடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. தொடர்ந்து, நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரை திருப்பூர், மூலனூர், குடிமங்கலம், பொங்கலூர், குண்டடம், பல்லடம், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஆகிய பகுதிகளுக்கு நிலக்கடலை, கொத்துமல்லி, மிளகாய், தக்காளி, வெங்காயம், வாழை, மரவள்ளி, கொண்டைக்கடலை, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், பயிர் காப்பீடு தொகை மற்றும் காப்பீடு செய்ய கடைசி நாள் போன்ற விபரங்கள் இவ்வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். எனவே விவசாயிகள் பயிர் காப்பீடு தொடர்பான விபரங்களை தெரிந்து கொண்டு பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

    • விவசாயிகள் வேளாண் பயிர்களுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.
    • விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட விவசாயிகள் வேளாண் பயிர்களுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ. கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

    பருவ மழை காலங்களில் வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதிக்கும் பொழுது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி நடை பெற்று வரும் வேளையில் வடகிழக்கு பருவ மழை மூலம் மிதமான முதல் கனமழை பெய்து வருவதால் பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது எனவும் இதனால் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாககாப்பீடு செய்யு மாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது சேலம் மாவட்டத்தில் நெல் (சம்பா), தட்டைப்பயறு, சோளம், நிலக்கடலை பயிர்கள் காப்பீடு செய்ய கால அவகாசம் உள்ளது.

    விவசாயிகள் அடங்கல், நில உரிமை பட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் நடப்பில் உள்ள சேமிப்பு வங்கிக்கணக்கு புத்தகத்துடன் உரிய பிரீ மியத் தொகையினை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது.
    • தற்போது அவர்களின் விருப்பத்தின் பேரில் பதிவு செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நு ட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், தமிழ்நாட்டின் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் காரீப் 2016 முதல் சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு 2022-ம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கியமாக இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகளை கட்டாயமாக பதிவு செய்து, வந்த நிலையில் தற்போது அவர்களின் விருப்பத்தின் பேரில் பதிவு செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியான பயிர் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீடு தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் ராபி, 2022-2023-ல் செயல்படுத்த அரசாணையின்படி காப்பீடு நிறுவனம் அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராபி பருவத்தில் நெல், மக்காசோளம், பாசிப்பயறு, கொண்டைக்கடலை, நிலக்கடைலை, சோளம் மற்றும் பருத்தி போன்ற அறிவிக்கை செய்யப்பட்டு, விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்து வதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே ராபி பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்கள் பயிர் கடன்பெறும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாக அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்துகொள்ளலாம். இதற்காக விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கான அடங்கல் கிராம நிர்வாக அதிகாரியிடம் பெற்று, அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தில் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ சென்று பதிவு செய்துகொள்ளலாம். திருப்பூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு பிரீமியம் தொகை நெல் ஏக்கருக்கு ரூ.559, பாசிப்பயறு ஏக்கருக்கு ரூ.253.94 ஏக்கருக்கு செலுத்தி வருகிற 15-11-2022-க்குள் காப்பீடு செய்ய வேண்டும். மக்காச்சோளம் ஏக்கருக்கு ரூ.486.75, கொண்டைக்கடலை ரூ.269.25, பருத்தி ஏக்கருக்கு ரூ.693.60 பிரீமியம் தொகையாக செலுத்தி 30-11-2022-க்குள் காப்பீடு செய்ய வேண்டும். சோளம் ஏக்கருக்கு ரூ.38.61 வருகிற 15-12-2022-க்குள்ளும், நிலக்கடலை ஏக்கருக்கு ரூ.470.25 பிரீமியம் தொகையாக செலுத்தி 31-12-2022-க்குள் காப்பீடு செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விவரங்களை உழவன் செயலி மூலமும், வட்டார அளவில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும்.
    • விவசாயிகள் பதிவு செய்ய காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

    பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற விரும்பும் விவசாயிகள், தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும். வங்கிகள், நிதி நிறுவனங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் இந்த இணையதளத்தில் மட்டுமே பதிவு  செய்யப்படும்.

    விவசாயிகள் பதிவு செய்ய காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பிரீமியம் தொகை, பிரீமியம் தொகையை எவ்வாறு செலுத்துவது மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்துவது உள்ளிட்ட விவரங்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    விவசாயிகள் யாரும் விடுபடாத வகையில், அவர்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்காக, வங்கிகளுக்கு கடைசி தேதியிலிருந்து 15 நாள் அவகாசம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×