search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agriculture Minister"

    • அனைவருக்கும் உகந்த ஆரோக்கியமான உணவை வழங்க வேண்டும்.
    • சிறு தானியங்களை பிரபலப்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் இணைய வேண்டும்.

    மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தலைமையில் பிம்ஸ்டெக் நாடுகளின் வேளாண்துறை மந்திரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பூடான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் வேளாண்துறை மந்திரிகள் இதில் பங்கேற்றனர். 


    காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய மந்திரி தோமர், வேளாண்துறை மாற்றத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரிவான பிராந்திய செயல் திட்டத்தை ஏற்படுத்த ஒத்துழைக்குமாறு உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.

    சிறுதானியங்கள் ஊட்டச்சத்துமிக்கது என்றும் அதை பிரபலப்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் விளக்கினார். 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிங்கள் ஆண்டாக கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில், அனைவருக்கும் உகந்த வேளாண்முறையை கடைப்பிடித்து, ஆரோக்கியமான உணவை வழங்குமாறு உறுப்பு நாடுகளை அவர் வலியுறுத்தினார்.



    சிறு தானியங்களை ஒரு உணவாக பிரபலப்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் இணைந்து செயல்படுமாறும், இயற்கை மற்றும் சூழலியல் வேளாண்முறையில் உயிரி பன்முகத்தன்மையை பாதுகாப்பதுடன், ரசாயன பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    பெண் கற்பழிப்பு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஒடிசா விவசாய மந்திரி பிரதீப் மகாரதி நேற்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். #Odisha #AgricultureMinister #PradeepMaharathy #Resign
    புவனேஷ்வர்:

    கடந்த 2011-ம் ஆண்டு ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் பெண் ஒருவர், மர்ம கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்து சமீபத்தில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இது பற்றி கருத்து தெரிவித்த ஒடிசா விவசாய மந்திரி பிரதீப் மகாரதி, கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்பதாக கூறினார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து, அவர் மந்திரி பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த எதிர்ப்பின் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால், பிரதீப் மகாரதி நேற்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அலுவலகத்திற்கு அவர் அனுப்பி வைத்தார்.  #Odisha #AgricultureMinister #PradeepMaharathy #Resign 
    ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரம் தேடவுமே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக மத்திய விவசாயத்துறை மந்திரி ராதா மோகன்சிங் கூறியுள்ளார். #AgricultureMinister #RadhaMohanSingh #Farmersprotest #mediaattention

    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி பல கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தின்போது போராட்டத்தில் ஈடுபட்ட 6 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

    இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் விவசாயிகள் 10 நாட்கள் போராட்டத்தை கடந்த 1-ம் தேதி தொடங்கினர். இதனால் வடமாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. 

    இதுகுறித்து பேசிய மத்திய விவசாயத்துறை மந்திரி ராதா மோகன்சிங், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரம் தேடவுமே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக கூறியுள்ளார்.



    அவர் கூறுகையில், மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதனை விவசாயிகள் உணராமல் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரம் தேடவும் போராட்டம் நடத்துகின்றனர், என கூறினார். மத்திய விவசாயத்துறை மந்திரி இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #AgricultureMinister #RadhaMohanSingh #Farmersprotest #mediaattention
    மகாராஷ்டிர மாநிலத்தின் வேளாண் மந்திரி பண்டுரங் புந்தலிக் பண்ட்கர் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். #MHministerpassedaway #PandurangPundalikFundkar
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநிலத்தின் வேளாண் மந்திரியுமான பண்டுரங் புந்தலிக் பண்ட்கர் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பண்டுரங் புந்தலிக் பண்ட்கர் உயிரிழந்தார். 67 வயதான இவர் தற்போது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசில் வேளாண் மந்திரியாக பதவி வகிக்கிறார்.

    இவர், அகோலா மக்களவை தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றவர் என்பதும், பா.ஜ.க.வின் மகாராஷ்டிரா மாநில தலைவராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #MHministerpassedaway #PandurangPundalikFundkar
    ×