என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விளம்பரத்திற்காகவே விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர் - மத்திய மந்திரி பேச்சால் சர்ச்சை
Byமாலை மலர்3 Jun 2018 11:19 PM GMT (Updated: 3 Jun 2018 11:19 PM GMT)
ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரம் தேடவுமே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக மத்திய விவசாயத்துறை மந்திரி ராதா மோகன்சிங் கூறியுள்ளார். #AgricultureMinister #RadhaMohanSingh #Farmersprotest #mediaattention
புதுடெல்லி:
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி பல கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தின்போது போராட்டத்தில் ஈடுபட்ட 6 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் விவசாயிகள் 10 நாட்கள் போராட்டத்தை கடந்த 1-ம் தேதி தொடங்கினர். இதனால் வடமாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய மத்திய விவசாயத்துறை மந்திரி ராதா மோகன்சிங், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரம் தேடவுமே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதனை விவசாயிகள் உணராமல் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரம் தேடவும் போராட்டம் நடத்துகின்றனர், என கூறினார். மத்திய விவசாயத்துறை மந்திரி இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #AgricultureMinister #RadhaMohanSingh #Farmersprotest #mediaattention
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X