என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja arrest"

    • மாடியில் கஞ்சா செடிகளை பயிரிட்டிருப்பதாக கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் பிரிவின் கீழ் ஜிதின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்காளர் அலுவலகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக ராஜஸ்தானை சேர்ந்த ஜிதின் (வயது 27) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கமலேஸ்வரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை பயிரிட்டிருப்பதாக கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கலால் துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு கஞ்சா செடி பயிரிடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை ஒப்புக் கொண்ட ஜிதின், அலங்கார செடியாக கஞ்சா பயிரிட்டதாக கூறினார்.

    இது தொடர்பாக அவருடன் தங்கியிருந்த அலுவலக ஊழியர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் பிரிவின் கீழ் ஜிதின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    • கலால் வட்ட ஆய்வாளர் அனில்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • கஞ்சா செடிகள் மற்றும் அந்த அறையில் இருந்த 5 கிலோ கஞ்சாவை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி மருதூர் குளங்கரை செருகோல் பகுதியை சேர்ந்தவர் முகமது முஹ்சின்(வயது32). போதைபொருள் வழக்கில் தொடர்புடைய இவரின் வீட்டில் கருநாகப்பள்ளி கலால் வட்ட ஆய்வாளர் அனில்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த படுக்கை அறையில் 21 பூந்தொட்டிகளில் வித்தியாசமான செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. அது என்ன செடி என்று ஆய்வு செய்தபோது கஞ்சா செடிகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அலங்கார செடிகளை போன்று படுக்கை அறையில் கஞ்சா செடிகளை வளர்த்துள்ளனர்.

    இதையடுத்து பூந்தொட்டிகளில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் அந்த அறையில் இருந்த 5 கிலோ கஞ்சாவை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக முகமது முஹ்சினை கலால் துறையினர் கைது செய்தார்கள்.

    • காரில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் வெளியே விழுந்து கிடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மங்களூரு:

    மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணாவில் இருந்து குடகு மாவட்டம் மடிகேரி வழியாக தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூருக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த கார் மடிகேரியை தாண்டி சுள்ளியா அருகே தேவரகொல்லி பகுதியில் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் இருந்த 3 பேரும் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டனர். அப்போது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் வெளியே விழுந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மக்கள், மடிகேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் புத்தூரை சேர்ந்த பஸ்ருதீன், முஸ்தாக், ஜாபீர் என்பதும், அவர்கள் பிரியப்பட்டணாவில் இருந்து புத்தூருக்கு கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மடிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனிப்படை போலீசார் பிரதாபராமபுரம் அருகே அறிவழகனை கைது செய்து விசாரித்தனர்.
    • அறிவழகனை சிறையில் அடைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே சம்பவத்தன்று தனிப்படை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது நாகை -திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை மேலப்பிடாகை அருகே வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட 3 சொகுசு கார்கள் தொடர்ச்சியாக வேகமாக வந்ததை மறித்து சோதனை மேற்கொண்டனர். அந்த கார்களில் 200 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

    இது குறித்து காரில் வந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி (வயது 41), அவரது தம்பி சிவமூர்த்தி (38), திருப்பூர் மாவட்டம் இடுவை திருமலைகார்டனை சேர்ந்த மணிராஜ் (36), புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி கவுதம் (36) என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து கார் மூலமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை ஆந்திரா வழியாக வேதராண்யம் கொண்டு சென்று படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

    இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தெட்சிணாமூர்த்தி உள்பட 4 பேரையும் கைது செய்து 200 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட 3 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் வேதாரண்யம் கோடியக்காடு பகுதியை சேர்ந்த அறிவழகன் (60) என்பவருக்கு கஞ்சா கடத்தில் வழக்கில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. அறிவழகன் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதும், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவராக உள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் பிரதாபராமபுரம் அருகே அறிவழகனை கைது செய்து விசாரித்தனர். அதில் அறிவழகன் கஞ்சா, தங்கம் உள்ளிட்ட கடத்தலில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அறிவழகனை சிறையில் அடைத்தனர்.

    நீலாங்கரை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேனி பகுதியில் கஞ்சா விற்பதாக நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன், முரளி, பானுப்பிரியா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய பானுபிரியாவின் கணவன் காத்தவ ராயனை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தபோது போந்தூரை சேர்ந்த வேல் முருகன், சீனு,சேட்டு ஆகிய 3 பேர் அங்குள்ள சுடுகாட்டில் வைத்து கஞ்சா விற்பது தெரிந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து1கிலோகஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×