என் மலர்
நீங்கள் தேடியது "ganja arrest"
சோழிங்கநல்லூர்:
நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேனி பகுதியில் கஞ்சா விற்பதாக நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன், முரளி, பானுப்பிரியா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய பானுபிரியாவின் கணவன் காத்தவ ராயனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தபோது போந்தூரை சேர்ந்த வேல் முருகன், சீனு,சேட்டு ஆகிய 3 பேர் அங்குள்ள சுடுகாட்டில் வைத்து கஞ்சா விற்பது தெரிந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து1கிலோகஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.